Tuesday, December 25, 2012

வெண்மணி சங்கமம்-தருமபுரி வன்கொடுமை எதிர்ப்பு கருத்தரங்கம்

வெண்மணி சங்கமம் - தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு-டிசம்பர் 25,2012- தருமபுரி வன்கொடுமை எதிர்ப்பு கருத்தரங்கம்- திருவாரூர்-சிறப்புரை-தோழர் டில்லிபாபு, எம்.எல்.ஏ, தோழர் ப.நீலவேந்தன், தலைமை- க.சுவாமிநாதன். தர்மபுரி நத்தம், கொண்டாம்பட்டி, அண்ணா நகர் கிராமங்களில் இருந்து 10 பேர் பங்கேற்பு- ரூ 25000 தருமபுரி வழக்கு நிதி அளிப்பு - தருமபுரி இன்சூரன்ஸ் தோழர்களின் களப்பணிக்கு பாராட்டு- தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடவடிக்கைகள் பற்றிய பவர் பாயிண்ட் பிரசண்டேசன்-பாரதி புத்தகாலாயத்தின் இரண்டு நூல்கள் வெளியீடு- மொழிபெயர்ப்பாளர் தோழர் சி சுப்பாராவுக்கு பாராட்டு.

Wednesday, December 19, 2012

STRUGGLE AGAINST INSURANCE FDI


மதுரையில் இன்சூரன்ஸ் துறையில் அந்நிய முதலீட்டை 26% லிருந்து 49 % ஆக உயர்த்துவதற்கு எதிராக டிசம்பர் 15 அன்று நடைபெற்ற தர்ணாவில் மதுரை தெற்கு தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் தோழர் ஆர்.அண்ணாதுரை உரையாற்றுகிறார். அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் நடத்திய இத் தர்ணாவில் 1200 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Saturday, December 8, 2012

தர்மபுரி-சாதி என்று சாம்பலாகும்!

நத்தம், கொண்டாம்பட்டி,அண்ணாநகர் கிராமங்களில் 

புகைப்படம்
கொண்டாம்பட்டியில்
 புகைப்படம்
பெண்களின் குமுறல்கள்
 புகைப்படம்
எரிந்த இல்லங்கள்
புகைப்படம்
சாதி என்று சாம்பலாகும்!

தர்மபுரியின் நத்தம் , அண்ணாநகர் , கொண்டாம்பட்டி கிராமங்களுக்கு நவம்பர் 17, டிசம்பர் 4 ஆகிய இரண்டு நாட்கள் நேரில் சென்று கொடூரத் தாக்குதலுக்கு இலக்கான மக்களை, அவர்களின் இல்லங்களை, நொறுங்கிப்போன வாழ்க்கையை பார்த்த தாக்கத்தோடு இதனை எழுதுகிறேன்.


இந்தியச் சமுகத்தில் சாதீய - பாலின ஒடுக்குமுறைகள் இரண்டறப் பிணைந்தே இருக்கின்றன. சாதீய விருட்சத்திற்கு அகமண முறையே வேராகத் திகழ்கிறது. அதுபோல ஆதிக்க வெறியை நிலை நாட்ட விரும்புபவர்களும் பெண்களையே குறிவைக்கின்றனர். எனவேதான் சாதீய மறுப்புத் திருமணங்கள் இன்றைக்கு சாதி  வெறியர்களின் கடும் எதிர்ப்புக்கு ஆளாகின்றன. 

தந்தை பெரியார் கலப்புத் திருமணங்கள் என்ற சொல்லாடலையே ஏற்க மாட்டார். இது என்ன மனிதனுக்கும், மிருகத்திற்கும் நடக்கிற கல்யாணமா, கலப்பு என்று சொல்வதற்கு என்பார். ஆண் பெண் விருப்பம் என்பதைத் தவிர வேறு எதுவுமே கலக்காத சாதி மறுப்புத் திருமணத்தை போய் கலப்பு மணம் என்று ஏன் சொல்லவேண்டும்? என்பதே அவரின் கேள்வி. விருப்பங்கள் நிராகரிக்கப் படும் சமூகச் சூழலில் அதில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான் என்பதற்கு எந்த ஆராய்ச்சியும் தேவையில்லை.

தமிழகத்தில் உள்ள சாதி அமைப்புகள் எல்லாம் சாதி மறுப்புத் திருமணங்களுக்கு எதிராக பேசுவது, வன்முறையை தூண்டுவது என்பது சில மாதங்களுக்கு முன்பிருந்தே அரங்கேறத் துவங்கிவிட்டன. சாதி வெறி என்பதை அங்கிருந்து, அருகில் இருந்துதான் கிளப்பவேண்டும் என்பதில்லை.தர்மபுரி சூடாவதற்கான நெருப்பு மாமல்லபுரத்தில் இருந்து கூட வைக்கப்படலாம். ரிமோட் மூலம் இயக்குவது போல் இதற்கான அரசியல் பட்டன் ஏற்கனவே அழுத்தப்பட்டுவிட்டது. வினோதம் என்னவெனில் ஓர் பட்டியலின முதல்வரைக்  கொண்டுவருவேன் என்றவர், சமுக நல்லிணக்க மருத்துவர் என்று பட்டம் சூட்டப்பட்டவர், அம்பேத்கர் விருதையே வாங்கியவர் சேனலை மாற்றுவது போல் இப்போது 40 பிற்பட்ட அமைப்புகளைத் திரட்டக் கிளம்பிவிட்டார். சரியான சமுக,பொருளியல் பார்வையோடு மக்கள் திரட்டப்படாவிட்டால் யார் எப்படி நிறம் மாறுவார்கள் என்பதற்கு இது ஓர் சாட்சியம்.

சில மாதங்களுக்கு முன்பே தஞ்சை சூரக்கோட்டை மாரிமுத்துவின் படுகொலை நிகழ்ந்தது. அங்கங்கள் எல்லாம் சின்னா பின்னமான அக்கோரத்தை வார்த்தைகளில் சொல்லமுடியாது.சென்னையில் மனித உரிமை ஆணையம் நடத்திய பொது விசாரணையில் மாரிமுத்துவின் மனைவி அபிராமி தன் கைக் குழந்தையோடு வந்திருந்தார். தீண்டாமை ஒழிப்பு முன்னணி அவருக்கு இழைக்கப்பட்ட அநீதியை முறையிட்ட பின்னணியில் அரசு வேலை தருவதற்கு உத்தரவுவிசாரணையில் இடப்பட்டது. ஏன்  அப்பாவை கொன்றுவிட்டார்கள் ? என்று அபிராமியை அக்குழந்தை கேட்டால் என்ன அவர் பதில் சொல்வார்! நேரு விளையாட்டரங்கில் புல்வெளியின் மென்மையில் மகிழ்ந்து கொண்டு இருந்த அக் குழந்தைக்கு சாதியச் சமுகத்தின் வன்மையான முட்புதரை எப்படி நாளை காண்பிப்பது!

நத்தம் இளவரசனை விரும்பி திருமணம் செய்து கொண்டு வந்த திவ்யாவின் காதலில் என்ன குற்றம்! இத் திருமணம் மட்டும் இவ்வெறியாட்டத்திற்கு காரணம் என்று நாம் நினைக்கவில்லை. ஆனால் ஓர் அரசியல் தலைவரோ அதையே விவாதப் பொருளாக மாற்றிவிட்டார். இருக்கட்டும். இம் மூன்று கிராமங்கள் மீதும் "படையெடுத்து" வந்த 1500 பேருக்கு திவ்யாவின் விருப்பத்தில் தலையிட, தீர்மானிக்க என்ன உரிமை இருக்கிறது? திவ்யாவை கடத்திவிட்டார்கள் என்று சொன்னார்கள். ஆனால் தருமபுரி நீதிமன்றத்தில் கூண்டில் ஏறிய திவ்யா  நான் விரும்பியே இளவரசனை மணம் புரிந்தேன் என்று உறுதியாகச் சொன்னாரே! அதற்கு பிறகு நாமக்கல் மாவட்டத்தில் யாரோ, எத்தனை பேரோ காதல் மணம் புரிந்து கைவிட்டுவிட்டார்கள் என்று ஏதோ கணக்கு சொல்கிறார்கள். வாதத்திற்காக கேட்போம். நாமக்கல் கணக்கு வடி கட்டின உண்மை என்று வைத்து கொண்டாலும் அதற்காக தர்மபுரியில் அடிப்பார்களா!  

தாக்கியவர்களை விட மோசமான குற்றவாளிகள் யார் தெரியுமா! இக்கொடுரத்தை தர்க்க ரீதியாக நியாயப் படுத்த முயற்சிப்பவர்கள்தான் .ஒரு  பரபரப்பு வார இதழ் " தந்தை நாகராஜன் என்னோடு வந்துவிடு என்று எவ்வளவோ கெஞ்சி அழைத்தும் காதல் மோகத்தால் வர மறுத்துவிட்டாள்" என்று எழுதியது. இது ஊடக வன்முறை. பேனாவுக்குள் மையோடு சாதியையும் கலந்து எழுதுகிறார்கள்.

நாங்கள் நத்தம் கிராமம் போன போது அங்கே 1986 லேயே சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட யசோதா என்ற பெண்மணியைப் பார்த்தோம். அவர் கேட்டார். " நான் வெறுங்கையோடு இந்த வீட்டிற்கு வந்தேன். நாங்கள் இருவரும் பாடுபட்டு உழைத்து சேர்த்தோம்.
26 வருடத்தில் ஒரு குண்டூசியைக் கூட எனது பெற்றோரிடம் கேளு என்று  எனது கணவர் சொன்னதில்லை. பிள்ளைகள், பேரக் குழந்தைகளையும் பார்த்துவிட்டேன். என்ன குறைந்துவிட்டோம். நானும் இந்தக் கிராமத்தை தாக்கிய வெறியர்களின் சாதியைச் சேர்ந்தவள்தான். ஆனால் எனது வீடு, வாகனம், தொழிலுக்காக வைத்திருந்த மரங்கள் எல்லாவற்றையும் எரித்துச் சாம்பலாக்கிவிட்டர்களே! ஓட்டுகளுக்காக இவர்கள்தானே எனது வாழ்க்கையை பாழாக்கியிருக்கிறார்கள்" . ஆயிரம் மேடை போட்டு சொன்னாலும் சொல்ல முடியாத பதிலை இயல்பான வாழ்க்கை அனுபவத்தில் இருந்து சுளீரென யசோதா சொன்னார். 

கொண்டாம்பட்டி ராசு வீட்டிலும் ஒரு சாதிமறுப்புத் திருமணம் சில ஆண்டுகளுக்கு முன்னால் நடந்துள்ளது. ஊருக்குள் வந்து விசாரித்த பெண்ணின் பெற்றோர் நல்ல பையன்தான் என்று சமாதானம் ஆகிச் சென்றார்களாம். ஆனால் அதற்கு முன்பு சாதியக் கலாசாரக் காவலர்கள் செய்த அட்டுழியத்தை ராசு வாயால் கேட்ட போது அண்ணல் அம்பேத்கர் வகுத்த அரசியல் சாசனம் வழி நடத்துகிறதா? அல்லது மனுதர்மம்தான் இன்றைக்கும் கோலோச்சுகிறதா? என்ற சந்தேகம் எழாமல் இருக்காது. சென்னை போரூரில் இருந்து காதல் திருமணம் செய்து அங்கு குடியேறியுள்ள  ஒரு பெண்ணோ  "நாங்க நல்லாதானே இருக்கிறோம், எங்களுக்கு என்ன குறை" என்கிறார். இப்படிப்பட்ட குருவிக் கூடுகள் எல்லாம் பிய்த்து எறியப்பட்டுள்ளன.

உணர்ச்சிவயப்பட்ட தாக்குதல் என்று முடிவுக்கு வர முடியவில்லை. பீரோக்கள் உடைக்கப்பட்டு விலை  மதிப்புள்ள பொருட்கள் பத்திரமாக கொண்டு செல்லப்பட்டன என்று ஒவ்வோர் வீட்டிலும் குற்றம் சாட்டுகிறார்கள். பிறகு பெட்ரோல் ஊற்றி வாழ்வாதாரங்கள் எல்லாம் அழிக்கப்ட்டுள்ளன. ஓர் காவல்துறை காவலர் வீடும் தப்பவில்லை. கான்க்ரீட் வீடுகளும் தகர்க்கப்பட்டுள்ளன. பட்டியலின மக்களின் சுய சார்பான வளர்ச்சி மீது தொடுக்கப்பட்டுள்ள தாக்குதல்.மூன்று ஊர்களை இப்படி சிதைப்பது என்றால் சில மணி நேரங்கள் தேவை. அரசாங்கம்-சட்டம்-காவல்துறை-நிர்வாகம் எல்லாம் என்ன செய்தது என்ற கேள்விதான் பாரபட்சமற்ற விசாரணை வேண்டும்  என்ற கோரிக்கையாக மாறியுள்ளது. சி.பி.ஐ விசாரணை கோரப்படுகிறது. 

ரூ 50000 நிவாரணம் என்கிற அரசின் அறிவிப்பு மக்களின் இழப்பை எந்தவகையிலும் ஈடு செய்துவிடாது. அப்பணத்தை வைத்து ஒரு கழிப்பறை கூட கட்ட முடியாது. வீடு எது வெளி எது என்று தெரியாமல் கடந்த ஏழாம் தேதியில் இருந்து வாழ்ந்து வருகிற மக்களைப் பார்த்து அற்ப சொற்ப நிவாரணம் எள்ளி நகையாடுவது போல் உள்ளது. உளவியல் ரீதியான இழப்புகளுக்கும் நிவாரணம் உண்டு என்கிற வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை அதிகார வர்க்கத்தினர்என்றாவது படித்திருக்கிறார்களா! இப்படி பயன்படுத்தப்படாத வன்கொடுமை தடுப்புச் சட்டத்தைத்தான் இன்னும் மழுங்கடிக்க வேண்டும் என்கிறார்கள் பெண்களைக் காக்க புது அவதாரம் எடுத்துள்ளவர்கள்.

ஒரு மேல்நிலைதேர்வு மதிப்பெண் சான்றிதழ் ஒருவீட்டில் கருகிக் கிடந்தது. டி.எஸ்.பி தைரியம் கூறியும் ஒரு குழந்தை பள்ளிக் கூடத்திற்கு அச்சத்தால் போக மறுக்கிறது என்று ஒரு தாய் சொன்னாள். மீதக் குழந்தைகளும் காவல்துறை வேனில் பள்ளிக்கு போய் வருகிறார்கள். அப்போதுதான் கல் விழாது போலிருக்கிறது. சுதந்திரம் வாங்கி 65 ஆண்டுகள் ஆகிவிட்டது என்று பள்ளிக் கூடத்தில் சொல்லித் தரும்போது இக் குழந்தைகளின் மனதிற்குள் என்ன ஓடும்! 

நண்பர்களே! சகோதரிகளே! களத்தை விட சமூகத்தைக் கற்க வேறு ஓர் சிறந்த பள்ளிக்கூடம் இருக்க முடியாது. நமது தருமபுரி கிளைச் சங்கத் தோழர்கள் பாராட்டுக்கு உரியவர்கள். கொடுரம் நடந்த அக்கிராமத்திற்குள் போர்வைகளோடு, மளிகை பொருட்களோடு முதலில் சென்ற இயக்கம் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்தான். பின்னர் 318 குடும்பங்களுக்கும் பெண்களுக்கான புதிய ஆடைகளோடு சென்றோம். பிறகு வங்கி ஊழியர்கள், ஆசிரியர்கள், ரயில்வே ஊழியர்கள் என சாதி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு தருமபுரி நோக்கிச் செல்வது தொழிற்சங்க இயக்கத்திற்கு புதிய பாதையை, புதிய பார்வையை  தந்திருக்கிறது. முதலில் சென்ற  AIIEA  வின் பணியே எங்களுக்கு முன்னுதாரணம் என்று அச் சங்கங்கள் மனப்பூர்வமாகச் சொல்கின்றன. தமிழகம், கேரளக் கோட்டங்கள் 24 மணி நேர இடைவெளிக்குள் ரூ 170000 ஐ திரட்டியதும் , விரைந்ததும் , அப்பணிகளை சேலம் கோட்டம் நேர்த்தியாக ஒருங்கிணைத்ததும் காலத்தில் ஆற்றிய கடமை. தலித்துகளின் விடுதலைக்கு தலித்துகள் மட்டும் போராடினால் போதாது எனபதை அறிவுரையாகச் சொன்னால் அது குப்பைக்குத்தான் போகும். அதையே களத்தின் அனுபவமாக மாற்றினால் நம்பிக்கையாய் மாறும். தலித் அல்லாதவர்களின் விடியலும் தலித்துகள் இணையாமல் இல்லை எனபதையும் உணர்ந்துகொண்ட உணர்வு பூர்வமான பயணம் அது.

டிசம்பர் 6 - அம்பேத்கரின் நினைவு நாளை அனுசரிக்கும் போது அவர் வகுத்த பாதையில் சிறு தூரத்தையாவது கடக்க முயற்சித்துள்ளோம் என்ற உண்மை மனதை மென்மையாக வருடிக் கொடுத்தாலும் இன்னும் செல்லவேண்டிய தூரமும், ஆற்ற வேண்டிய பணியும் நிறைய இருக்கிறது  என்ற பேருண்மை மனசை ரொம்பவே கனக்கச் செய்கிறது.

TAKING CUE FROM THE INSTANT GESTURE BESTOWED BY THE UNITS OF AIIEA

  People's Democracy


(Weekly Organ of the Communist Party of India (Marxist)
Vol. XXXVI
No. 49
December 09, 2012



BEFI Extends Relief to Dharmapuri Victims

S V Venugopalan 

IT was a heart rending scene to the visiting delegation of the Tamilnadu state unit of Bank Employees Federation of India (BEFI) to see the remains of totally burnt houses and ruined livelihood of the dalits of the three colonies of Naickenkottai village in Dharmapuri district. Blackened walls, molten ceiling fans, broken pieces of glass, burnt food materials, twisted furnitures, charred house hold articles and the like were what was available door after door in almost all the 268 houses of Natham, Anna Nagar and Kondampatti colonies that witnessed the heinous crime against humanity on November 7 this year. (Please see detailed report in People's Democracy dated November 18, 2012).

That the whole operation executed in four to five hours that evening was totally pre-meditated and well engineered was for all eyes to see. The way the houses have been ransacked, steel cupboards broken and valuables looted and the tiled ceilings razed to the ground spoke volumes of the diabolic intentions of those who provoked this violence, in the first place. From birth certificates to mark sheets of budding youth, from ration cards to voter IDs and from bangles to small toys of children, nothing has been left untouched by the casteist fire that engulfed the whole lot of settlements there.

Shocked by the newspaper reports, BEFI Tamilnadu voiced against this atrocity immediately and issued a call for funds from its rank and file towards providing some relief to the victims, taking cue from the instant gesture bestowed by the AIIEA units in rushing to the area for an on-the-spot study simultaneously reaching dress materials and other requirements to the tune of Rs 1.70 lakhs. Besides quick mobilisation from the affiliated bank wise unions, BEFI's appeal drew instant response from other well wishers, too, enabling it to offer relief measures for about Rs One lakh.

A team of BEFI-TN from Chennai along with representatives from AIIEA and ICF United Workers Union (CITU) reached Dharmapuri on  December 4 where, at their request, Madheswaran, divisional functionary of the AIIEA along with others had already procured and packed neatly, the essential basic cooking utensils for all the 300 familes for distribution among the victims. The relief materials were then taken to all the above three villages where it was distributed to people. K Swaminathan, general secretary, SZIEF (AIIEA) and K Ganesh, Convenor, Ambedkar Kalvi Maiyam were part of this visit.

Addressing the affected people briefly, Dilli Babu, CPI(M) MLA and K Samuel Raj, general secretary, TNUEF reassured support to the affected people in their struggle for justice. Others who spoke included C P Krishnan, general secretary, BEFI-TN, V Tamilselvi (BEFI), Sundaram, treasuer, Confederation of Central Government Employees Unions, Ramalingam and Rajaram (ICF Workers Union (CITU). 

Tearfully thanking the visiting trade unions for their solidarity, the people of the area exhibited a sense of growing confidence to stay determined to fight for justice unitedly.

BEFI AT DHARMAPURI VILLAGES-RELIEF TO DALIT VICTIMS

புகைப்படம்

தருமபுரி மாவட்டம் நாய்க்கன் கோட்டை அருகே நத்தம், கொண்டாம்பட்டி, அண்ணா நகர் காலனி மக்கள் மீது வன்கொடுமை நிகழ்த்தப்பட்டதை அறிவீர்கள்...

வன்னிய சாதிப் பெண் திவ்யா, தலித் வாலிபர் இளவரசனைத் திருமணம் செய்து கொண்டதைச் சாக்காக வைத்துக் கொண்டு சாதிய வெறி சக்திகள் நீண்ட கால வன்மத்தைத் தீர்த்துக் கொள்ளும் வெறியோடு நவம்பர் 7 அன்று 268 வீடுகளை முற்றாக அடித்து நொறுக்கித் தீயில்  போசுக்கியுள்ளனர்.

தங்களது ஜீவாதாரங்களை மட்டுமல்ல, தங்களது வாழ்நாள் சேமிப்பான அனைத்தையும் சுவடின்றி அழித்துப் போட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்கள் பக்கம் உடனே போய் நின்று பாதுகாப்பு உணர்வும் நம்பிக்கையும் ஊட்டியதோடு தேவையான நிவாரணப் பொருள்கள் வழங்கவும் மார்க்சிஸ்ட் கட்சி போர்க்கால நடவடிக்கை எடுத்து வருகிறது...

தமிழக தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் சி பி ஐ விசாரணை கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. வெறியர்களை உடனே கைது செய்யக் கோரியும், நடுத் தெருவில் நிற்கும் மக்களுக்குக் குடியிருப்புகள கட்டித்தர வேண்டும் என்றும் தொடர் இயக்கங்களை நடத்தி வருகின்றனர்.

இதன்டையே சமூக அக்கறை கொண்டுள்ள சங்கம் என்ற வகையில், நமது இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் தமிழ் மாநிலக் குழு சார்பில், நிதிக்கான அறைகூவல் விடப்பட்டதில் வசூலான ரூ.1 லட்சம் தொகை, நிவாரணப் பொருள்களாக அந்த மக்களுக்கு நேற்று வழங்கப்பட்டது. தமக்கு உதவியளித்த உள்ளங்களுக்கு அந்த எளிய மக்கள் கண்ணீர் ததும்ப நன்றி சொல்லியிருக்கின்றனர். ஒரே நாள் தகவலில் பாத்திர பண்டங்களாக முன்னூறு செட் கடையில் வாங்கி அவற்றை தனித்தனி குடும்பங்களுக்காக பார்சல் செய்து மொத்தத்தையும் மூட்டைகளில் கட்டி எடுத்து வந்து அங்கே வழங்கவும் ஏற்பாடு செய்தது AIIEA மாவட்ட நிர்வாகி மாதேஸ்வரன் மற்றும் தோழர்கள்...மகத்தான பங்களிப்பு அது 

BEFI சார்பில் சென்ற தோழர்களில் ஒருவனாக நானும் சென்றிருந்தேன்...

நேற்று அதிகாலை தோழர்கள் சென்னையிலிருந்து புறப்பட்டு தருமபுரி சென்றிருந்தோம்..இன்சூரன்ஸ் தோழர்கள் சிலரும் SZIEF பொதுச் செயலாளர் சுவாமிநாதன் அவர்களோடு எங்களுடன் பயணம் செய்தனர். சுவாமிநாதன் முன்னதாகவே அங்கு சென்றுவந்த விவரங்களை விளக்கினார். இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் நிகழ்வு நேரிட்ட மூன்றாம் நாளே ரூ.1,70,000 நிதி வழங்கி அந்த மக்கள் பக்கம் நின்றது குறிப்பிட வேண்டியது. அங்கே மார்க்சிஸ்ட் கட்சி சார்ந்த சட்ட மன்ற உறுப்பினர் டில்லிபாபு, தமிழக தீண்டாமை ஒழிப்பு முன்னணி பொதுச் செயலாளர் சாமுவேல் ராஜ் அவர்களோடு இணைந்து நத்தம் கொண்டாம்பட்டி அண்ணா நகர் மூன்று கிராமங்களுக்கும் நேரில் சென்றோம்.


நீதி கோரும் போராட்டத்தில் சாட்சியங்களாக நிற்கும் இந்த கொடூர காட்சிகளோடு, அதற்கு இரண்டு நாள் முன்னதாகக் கூடத் தங்கள் வீட்டில் கை நனைத்த, பரஸ்பரம் குடும்ப நிகழ்வுகளில் பங்கேற்ற, நன்கு பரிச்சயமான மனிதர்கள் தான் இந்த வன்கொடுமையை இழைத்தனர் என்று கதறிய பெண்களின் அதிர்ச்சி வாக்குமூலங்களும் முக்கியமானவை...

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று எழுதிய வள்ளுவர் படம் கூட எரிக்கப்பட்ட குழந்தைகளின் பாடப் புத்தகங்களோடு சேர்ந்து எரிந்து போயிருக்கும் என்றே தோன்றுகிறது...

எஸ் வி வேணுகோபாலன் 

பின் குறிப்பு இன்று தருமபுரியில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இந்த மூன்று சிற்றூர்கள் மக்களும் சேர்த்து சுமார் 2500 பேருக்கு மேல் பங்கேற்றதாக ஒரு தோழர் (கணேஷ், கோவை ) தகவல் தெரிவித்தார். கொண்டாம்பட்டி ஊரிலிருந்து மக்களை ஏற்றி வந்த வேனில் BEFI கொடி கட்டப்பட்டிருந்ததை அவர் உற்சாகமாகச் சொன்னார். இதை விட நமக்கு வேறு பெருமிதம் என்ன இருக்க முடியும்? அவர்களது நீதிக்கான போராட்டத்தில் இன்னும் செய்ய வேண்டியது எவ்வளவோ இருக்கிறது.

Tuesday, November 20, 2012

VS flays move to raise FDI in insurance




STAFF REPORTER-the hindu
SHARE  ·   PRINT   ·   T+  
LEADING A BATTLE: Leader of the Opposition V.S. Achuthanandan arrives to
inaugurate a convention organised by the LIC Employees Union in protest
against the Centre’s move to raise FDI in the insurance sector, in
Thiruvananthapuram on Sunday. Photo: S. Mahinsha
The HinduLEADING A BATTLE: Leader of the Opposition V.S. Achuthanandan arrives to inaugurate a convention organised by the LIC Employees Union in protest against the Centre’s move to raise FDI in the insurance sector, in Thiruvananthapuram on Sunday. Photo: S. Mahinsha
Leader of the Opposition V.S. Achuthanandan on Sunday accused Prime Minister Manmohan Singh and Union Finance Minister P. Chidambaram of engaging in “anti-national activities” by pushing the ‘imperialistic agenda’ of more foreign direct investment (FDI) in the insurance sector.
Inaugurating a State convention organised by the LIC Employees Union in protest against the Centre’s move to raise the FDI cap in insurance from the existing 26 per cent to 49 per cent, Mr. Achuthanandan said this was akin to killing the goose that laid golden eggs. He said the United Progressive Alliance (UPA) government seemed to have forgotten that the insurance sector here stood up to the vagaries of the global economic slowdown even as the firms that would now gain entry here had gone down on their knees.
Pointing out that the Parliamentary standing committee on Finance had rejected the proposal to hike the FDI ceiling in the insurance sector, Mr. Achuthanandan said the Cabinet nod contrary to the committee recommendation was tantamount to suicide.
The decision was perplexing as the committee comprised Congress MPs, the Opposition leader said.
Mr. Achuthanandan said the UPA government’s attempt to push the ‘imperialistic agenda’ through its reforms was visible in other sectors as well, with the UDF government in the State too following suit with decisions such as extending ration and welfare scheme benefits through bank accounts. This would rob the people of their benefits and deal a blow to the statutory rationing system. Indications were that the existing subsidies even to domestic LPG would gradually be done away with, Mr. Achuthanandan said.
South Zone Insurance Employees Federation (SZIEF) vice-president N. Ganapathy Krishnan presided over the function.
CPI assistant State secretary C.N. Chandran; the former Minister N.K. Premachandran; SZIEF joint secretary Baby Joseph; All India Insurance Employees Association vice-president M. Kunhikrishnan; and LIC Employees Union Thiruvananthapuram division general secretary P. Raju; spoke.

Monday, November 19, 2012

சென்னை பொதுத்துறை இன்சூரன்ஸ் பாதுகாப்பு தமிழ் மாநில மாநாடு - நவம்பர் 19, 2012.

SAM_0161.JPG



தோழர் டி கே.ரெங்கராஜன் எம்.பி சிறப்புரை ஆற்றுகிறார்.தமிழக வணிகர் பேரமைப்பின் தலைவர் திருமிகு விக்கிரம ராஜா பங்கேற்றார். அரங்கம் நிறைந்த கருத்தரங்கில் பல்வேறு தொழிற்சங்க-வெகுஜன அமைப்புகளின் தலிவர்கலும் பங்கேற்றனர்.

தொல். திருமாவளவன் : அந்நிய முதலீட்டை வி.சி.க உறுதியாக எதிர்க்கும்

SAM_0195.JPG

நேற்று சென்னையில் நடைபெற்ற பொதுத்துறை இன்சூரன்ஸ் பாதுகாப்பு தமிழ் மாநில மாநாட்டில் பங்கேற்க விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமிகு தொல் .திருமாவளவன் இசைவு தெரிவித்து இருந்தார்.
ஆனால் அண்ணா அறிவாலயத்தில் ஓர் பத்திரிகையாளர் சந்திப்பு தாமதம் ஆனதாலும், போக்குவரத்து நெரிசலாலும் கருத்தரங்க மண்டபத்திற்கு உரிய நேரத்தில் வர இயலவில்லை. எனினும் தான் நேரில் வந்து சந்திப்பதாக கைபேசியில் தெரிவித்தார். மண்டபத்திற்கு வந்து அங்கு காத்திருந்த 40 க்கும் மேற்பட்ட முன்னணி ஊழியர்கள் மத்தியில் உரையாற்றினார்.அந்நிய முதலீட்டிற்கு எதிராக வி.சி.க உறுதியாக குரல் கொடுக்கும் என்று கூறி இன்சூரன்ஸ் ஊழியர் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

  

Friday, November 16, 2012

Memorandum to MPs at Madurai, Kumbakonam,Tirunelveli, Nagerkoil, Chidambaram and Ernakulam against FDI hike in insurance

As part of our campaign our divisional units met 7 MPs today  belonging to various political parties ie. Indian National Congress, AIADMK, DMK and VCK.

LICEU, Ernakulam division comrades met Prof KV Thomas Central minister of state for food and civil supply and presented the memorandum.

ICEU, Madurai divisional unit met Congress MP of Virudhunagar constituency Sri Manik thakur at Madurai Airport today. They met Rajyasabha member & Senior leader of Congress leader Shri EM Sudharsana nachiappan belongs to Sivaganga area. Both heard our views patiently. Shri Nachiappan told he would convey our views at appropriate level.

ICEU, Tirunelveli two MPs today. Nagerkoil comrades met Smt Helen davidson DMK and Tirunelveli comrades met Sri SS Ramasubbu INC of Tirunelveli constituency.

ICEU, Thanjavur comrades met Sri O.S. Manian AIADMK of Mayiladuthurai constituency. He assured his support as AIADMK supremo and CM Ms Jeyalalithaa opposed FDI hike in clear terms.

Chidambaram branch unit of ICEU, Vellore divisional unit met Sri Thol. Thirumavalavan MP (VCK) today and presented memorandum opposing fdi.

Thursday, November 15, 2012

ICEU, MADURAI-DELEGATION MET NSV CHITTAN MP

ICEU, Madurai division opened their account in submission of memorandum to MPs by meeting one of the senior politician of Tamilnadu and Indian National Congress MP from Dindugul Sri NSV Chittan at Madurai airport. The delegation led by Com G.Meenakshisundaram and N.Sureshkumar President & General secretary of the divisional unit. Tirunagar branch comrades also part of the delegation in good number.

CAMPAIGN AGAINST FDI HIKE IN INSURANCE -SUBMISSION OF MEMORANDUMS TO MPs

Inline image 1

DELEGATION ICEU SALEM DIVISION LED BY COM R DHARMALINGAM, VP, SZIEF,  COM A KALIYAPERUMAL, PRESIDENT, COM R NARASIMHAN GEN SECY, ICEU, COM KUMARESAN AND COM GANESAPANDIAN  MET TODAY CENTRAL MINISTER OF STATE FOR HEALTH SHRI  GANDHISELVAN M.P (DMK) AT NAMAKKAL AND PRESENTED MEMORANDUM AGAINST FDI HIKE IN INSURANCE. LIC EMPLOYEES OF NAMAKKAL, TIRUCHENGODE, P.VELUR, KOMARAPALAYAM PARTICIPATED IN THE DELEGATION IN GOOD NUMBER.

YESTERDAY SALEM MP Dr.S.SEMMALAI (AIADMK) WAS MET BY OUR COMRADES. HE ASSURED HIS SUPPORT TO OUR CAUSE AS PARTY'S SUPREMO AND CM OF TAMILNADU Dr.J.JEYALALITHAA HAS ALREADY MADE THEIR PARTY STAND CLEARLY AGAINST FDI HIKE IN INSURANCE.Sri GANESAMOORTHY MP, ERODE (MDMK) WAS ALSO MET BY TIRUCHENGODE & KOMARAPALAYAM COMRADES.

TODAY DHARMAPURI MP SRI THAMARAISELVAN (DMK) WAS ALSO MET BY OUR COMRADES AND MEMORANDUM WAS GIVEN TO HIM.

Tuesday, November 13, 2012

AIIEA units in Dharmapuri village : Rs 170000 worth relief to dalit victims



SZIEF condemns the cruel attacks perpetrated on the dalit houses in the 
Naikkenkottai village of Dharmapuri district of Tamilnadu which created
wide spread resentment among the democratic sections of the society.

The whole nation was shocked on hearing the news of violence unleashed by 
caste hindus on the dalits of three colonies in Naikkenkottai village of  Dharmapuri 
district on 7th Nov 2012.  Reason for violence is inter caste
marriage between Sri Ilavarasan dalit youth of that village and Smt Divya 
belonging to another backward caste. According to reports caste hindus numbering
more than 1500 entered dalit colonies and indulged in violence for more than
4 hours. Every house was attacked and looted. Belongings of dalits were burnt.
Virtually hundreds of families made homeless and lost every things required
for daily life. 

Our ICEU Salem unit took the initiative to visit the village on friday on 9th Nov 2012
and assessed the damages caused by the violence. The call was given by the 
South Zone Insurance Employees' Federation for the relief fund and all the 13 divisional
units have responded immediately. Our General insurance units also joined our effort.
Within 12 hours Rs 170000 has been mobilised and the relief materials including 
bedsheets, groceries have been arranged. On 10th Nov our comrades along with 
Tamilnadu Untouchability Eradication Front distributed relief materials affected 
dalit people there.

Com P Sampath President, Com K Samuelraj General Secretary TNUEF and CPI-M
MLAs Com K Balakrishnan, Delhi babu, Bhimrao participated in the meeting. Com
R Dharmalingam Vice president, SZIEF, Com A Kaliyaperumal President ,
Com R Narasimhan, General secretary, ICEU, Salem division and Com Madheswaran,
Chakravarthy (CRGIEA) distributed the relief materials.

TNUEF has given a call for protest demonstrations throughout the state on Nov 15th and 
AIIEA units also will participated in those programmes.

SZIEF congratulates ICEU Salem divisional unit, particularly Dharmapuri district comrades
for taking initiative to express our solidarity with dalit people against social oppression and 
thank all the divisional units of TN and Kerela for responding to the call for mobilisation of
funds.

AIIEA is the organisation which would be in forefront in fighting the social oppression and
upholding social justice by involving its membership in action. ICEU Salem and all the divisional
units of SZIEF have proved it again.

Our efforts to get justice for dalit victims continue in whatever form required.

Sunday, November 11, 2012

AIIEA units of TAMILNADU & KERALA in the villages of DHARMAPURI district- Rs 170000 worth relief to SC victims whose houses were ransacked by caste hindus

தருமபுரி : பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு இன்சூரன்ஸ் ஊழியர்கள் நிவாரணம் - ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை வழங்கினர்- தீக்கதிர் , 11. 11. 2012
தருமபுரி, நவ.10-

தருமபுரியில் ஆதிக்க சாதியின ரின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு அகில இந்திய இன் சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் சார்பில் 1 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப் புள்ள அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன.

தருமபுரி மாவட்டத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த தலித் மக்கள் மீதான தாக்குதலில் நத்தம், அண்ணா நகர், கொண்டம்பட்டி ஆகிய மூன்று பகுதிகள் கடுமை யான பாதிப்புக்கு உள்ளாகின. ஏரா ளமான வீடுகள் தீக்கிரையாகின. நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வீடுகளில் இருந்து வெளியேறினர்.

இந்நிலையில் அடிப்படை தேவைகள் அனைத்தையும் இழந்து நிற்கும் பாதிக்கப்பட்ட தலித் மக்க ளுக்கு அத்தியாவசியப் பொருட் களை வழங்க அகில இந்திய இன் சூரன்ஸ் ஊழியர் சங்கம் முடிவு செய் தது. தமிழகத்தில் உள்ள சென்னை ஐ, சென்னை ஐஐ, வேலூர், சேலம், கோயம்புத்தூர், தஞ்சாவூர், மதுரை, திருநெல்வேலி ஆகிய எட்டு கோட் டங்கள் மற்றும் கேரளாவின் எர் ணாகுளம், கோழிக்கோடு, திருச்சூர், திருவனந்தபுரம், கோட்டயம் ஆகிய 5 கோட்டங்களை சேர்ந்த ஆயுள் காப்பீட்டுக் கழக(எல்.ஐ.சி) ஊழியர் கள் மற்றும் பொது இன்சூரன்ஸ் துறையின் சென்னை, கோவை மற் றும் மதுரை ஆகிய மண்டலங்களை சேர்ந்த ஊழியர்கள் இணைந்து 1 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப் பிலான உதவி பொருட்களை வழங்கி யுள்ளனர்.

நவம்பர் 10 அன்று காலையில் நத்தம், அண்ணா நகர், கொண்டம் பட்டி ஆகிய மூன்று பகுதி மக்களை யும் சந்தித்து பாய், போர்வை மற்றும் மளிகைப் பொருட்களை இன்சூ ரன்ஸ் ஊழியர்கள் வழங்கினர். தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட் டமைப்பின் துணைத் தலைவர் ஆர். தர்மலிங்கம், சேலம் காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க கோட்டத் தலை வர் ஏ.கலியபெருமாள், பொதுச் செய லாளர் ஆர். நரசிம்மன், துணைத் தலைவர்கள் ஜி.வெங்கடேசன், ஏ. குமரேசன், லட்சுமி சிதம்பரம், இணைச்செயலாளர் மாதேஸ்வரன் மற்றும் தருமபுரி கிளை சங்க நிர் வாகிகள் காரமல், அருண்குமார், மகேந்திரன், வேடியப்பன் ஆகியோர் பொருட்களை வழங்கினர். பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் சார்பில் கோவை மண்டல துணைத் தலைவர்கள் சக்கரவர்த்தி, பி.குரு சாமி, சேலம்-நாமக்கல் மாவட்ட செயலாளர் கருப்பையா மற்றும் மாவட்ட தலைவர் பத்மநாபன் ஆகியோர் சென்றிருந்தனர்.

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் பி.சம்பத், பொதுச் செயலாளர் கே. சாமுவேல்ராஜ், சிபிஎம் சட்ட மன்ற உறுப்பினர்கள் கே.பாலகிருஷ்ணன், டில்லிபாபு, பீம் ராவ், மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் மற் றும் சிபிஎம் தருமபுரி மாவட்ட செயலாளர் மாரிமுத்து ஆகியோர் பங்கேற்றனர்.

இது முதல் கட்ட நிவாரணம் தான். அடுத்த வாரத்தில் அடுத்தகட்ட நிவாரணம் வழங்கப்படும் என்றும், பாதிக்கப்பட்ட மக்களோடு இன் சூரன்ஸ் ஊழியர்கள் இணைந்து நிற்பார்கள் என்றும் சங்க தலைவர் கள் குறிப்பிட்டனர்.

Wednesday, October 31, 2012

THE HINDU-MADURAI-1st November 2012


FDI row: trade unions warn of stir

R. SAIRAM
SHARE  ·   PRINT   ·   T+  
It Centre introduces bill to hike FDI in insurance sector
: All India Insurance Employees’ Association (AIIEA) and other trade unions have warned the Central Government of nation-wide strikes if it introduces the bill to hike foreign direct investment (FDI) in insurance sector during the upcoming Winter Session of the Parliament.
Along with a slew of economic reform measures, the Union Cabinet in October had approved amendments to Insurance Laws (Amendment), Bill, 2008 to allow the increase of FDI limit in insurance sector from the present 26 per cent to 49 per cent.
The unions have already begun an awareness campaign across the country through conventions, agitations and streetplays focussing on “adverse affects” of increasing foreign investment in Indian economy, according to the national joint secretary of AIIEA K. Swaminathan.
Speaking to The Hindu here on Wednesday, he said that the objective was to bring a mass mobilisation of public and workers against the move to take up the amended bill before November 21 when the Parliament would convene for Winter Session.
“The unions are going to meet all the Members of Parliament belonging to both Lok Sabha and Rajya Sabha as this bill has to be passed by both Houses. Unlike in retail and telecommunication sectors, the Centre cannot increase FDI in insurance through notifications as the 26 per cent cap was fixed in the IRDA Act, 1999.”
He also decried the arguments of Insurance Regulatory and Development Authority (IRDA) Chairman J. Hari Narayan that FDI was needed to capitalise Indian private insurance companies and increase penetration.
Indian promoters of insurance companies that are collaborating with foreign companies were making large scale acquisitions abroad indicating that they were flush with funds. Further in the 10 years of having allowed 26 per cent FDI in insurance, only Rs. 6,300 crore had come into the sector.
This was a meagre compared to size of the Indian economy. The Life Insurance Corporation of India (LIC) alone contributed more than Rs. 7 lakh crore to the last Five Year Plan of 2007-12.
As regards market penetration, Mr. Swaminathan said that LIC had 30 crore individual polices and covered ten crore persons under group insurance and still accounted for 76 per cent of market share till August this year.
It was only public sector companies that were increasing penetration, he said, adding that the claims settlement of LIC was 99 per cent while private companies had outstanding between 18 and 40 per cent.
He also noted that a Parliamentary Standing Committee on Finance, in which United Progressive Alliance had a majority of the members, had unanimously voted against increasing FDI in insurance. He held discussions with local trade union office bearers.

Wednesday, October 17, 2012

Dr Ambedkar Centre at Cuddalore-Excerpts from News published in THE HINDU


Insurance employees’ union to run free coaching centres for SC/ST candidates

 
K.Swaminathan, general secretary of the South Zone Insurance Employees Federation delivering a speech at the LIC office, in Cuddalore.
K.Swaminathan, general secretary of the South Zone Insurance Employees Federation delivering a speech at the LIC office, in Cuddalore.
The All India Insurance Employees’ Association has been setting up ‘Dr. Ambedkar Education Employment Coaching Centres’, all over the State.

So far, the Association has formed 19 such centres and 161 more are in the offing, said K. Swaminathan, general secretary, South Zone Insurance Employees’ Federation Mr. K . Swamination made this announcement while inaugurating the coaching centre at Cuddalore on Saturday.

He further said that these centres were conducting coaching classes free of cost to aspiring Scheduled Castes/Scheduled Tribes candidates to appear for the competitive examinations.
It was done purely with the intention of giving a helping hand to the oppressed sections of the society who were in need of support and encouragement to face the competition and to come out with flying colours.

So far 19 centres had been started, including the one in Cuddalore, and the remaining would come up in phases. Secretary of the Insurance Corporation Employees’ Union V. Sugumaran said that, at present, 15 candidates were enrolled with the Cuddalore centre for undergoing coaching for the Village Administrative Officer examinations.

The next session would be for those appearing for the Railway Recruitment Board’s examinations.
Mr. Sugumaran said that the union had a tie up with the Tamil Nadu Government Teachers’ Association and the Private School Teachers’ Association to mobilise the resource persons.

The members would also rope in college lecturers and professors to handle the coaching classes. The Dr. Ambedkar Education Employment Coaching Centre in Chennai would be supplying the study materials on a centralised basis.

Except the examination fees, the candidates need not bear any other expenses on the coaching, Mr. Sugumaran added.

Earlier, Mr. Swaminathan distributed relief materials to 20 families who were affected by Cyclone Thane.

Sunday, October 14, 2012

Reader's mail to The Hindu from KVB union leader


Insurance is a social security arrangement wherein the insured pays a premium and the insurer agrees to pay for the loss arising out of unforeseen happenings. The premium collected from the insured is invested in nation-building activities.
But with the government permitting private players in the insurance sector, the concept of social security has taken a back seat. Raising the level of FDI in the insurance sector to 49 per cent is an anti-people move.
P. Viswanathan, Chennai

Friday, October 5, 2012

துண்டுப் பிரசுரம்

வரலாமா வால்மார்ட் ! வாழுமா சிறு வியாபாரம் !

கதவைத் திறந்துவிட்டார்கள் பன்னாட்டுப் பகாசுர சில்லறை வியாபாரிகளுக்கு...
உள்ளே நுழைகிற வெறியோடு வால்மார்ட், டெஸ்கோ, கேரி போர்...
நான்கு கோடி சிறுவியாபாரிகளின் வாழ்க்கை கேள்விக்குறியாய்..

தாய்லாந்தில் 67 சதவீத கடைகளுக்கு மூடுவிழா!
மெக்சிகோவில் 21 ஆண்டுகளில் 50 சதவீதச் சந்தை அபேஸ்!                                      
இப்படி விழுங்குகிற அரக்க நிறுவனங்கள் எதற்காக!
உலகமயம் பேசுகிற மன்மோகன்சிங்கே உலக அனுபவம் தெரியாதா!
இந்தியச் சிறு வியாபாரிகளின் வயிற்றில் அடிப்பதில் என்ன ஆனந்தம்?

விவசாயிகளுக்கு அதிக விலை கிடைக்கும் என்று வாய்ப் பந்தல்!
பிரிட்டன் பால் உற்பத்தியாளர் சங்கம் கதறுவது என்ன ?
ஐரோப்பிய இணையம் நாடாளுமன்ற அறிக்கை சொல்வது என்ன ?
விவசாயிகளின் ரத்தம் குடிக்கிற ராட்சச நிறுவனங்களின் ஏகபோகம்!
மத்திய அரசே அளவில்லாத பொய் மூட்டைகளை அவிழ்த்து விடாதே!

அப்பாவி மக்களுக்கும் ஆப்பு!
போட்டிக் கடைகளையெல்லாம் ஒழித்துவிட்டால்...
அந்தப் பாவிகள் வைப்பதுதானே விலை..
பிரிட்டன் வாழ் இந்திய எம்.பி கெயித் வாஸ் என்ன சொல்கிறார்?
பார்த்து செய்யுங்கப்பா! சாமானிய மக்கள் பாவம்!
ஏன் இந்த அக்கறை சோனியாவுக்கு இல்லை!
இளவரசர் ராகுலுக்கு இல்லை..

கூடாரத்திற்குள் ஒட்டகம்!
10 லட்சம் மக்கள் உள்ள நகரங்களில்தான் அனுமதியாம்!
கட்டுப்பாடு அல்ல இது! அங்குதான் இப்ப லாபம் அதிகம்!
அடுத்த ரவுண்டு வருவார்கள் குறிவைத்து...  
விருதுநகர் வியாபாரிகளுக்கும்..
வித்துப்போட்டு பணத்தை எண்ணும் செல்லக்கண்ணுகளுக்கும்..

குழி தோண்டுகிறார்கள் ஜனநாயகத்திற்கு..
11 மாநிலங்கள் மட்டுமே ஒப்புதல் !
அங்குமட்டும் அனுமதியாம்! என்ன ஜனநாயகம் !
காங்கிரஸ் ஆளுகிற கேரளா அரசு கூட எதிர்ப்பு!
2002  ல் இதே மன்மோகன் சிங்கே எதிர்த்ததுதான்!

திருப்பூரில் சிறுதொழிலை அழித்தவர்கள் ..
விவசாயிகளின் தற்கொலைக்கு வழிவகுத்தவர்கள்..
அன்றாட விலைவாசி உயர்வை கைகட்டி வேடிக்கை பார்ப்பவர்கள்..
திவாலான அந்நிய வங்கி,இன்சூரன்ஸ் நிறுவனங்களை 
இந்தியாவில் அனுமதிக்கத் துடிப்பவர்கள்..
வருகிறார்கள் சிறு வியாபாரத்திற்கும்..

12 கோடி மக்களுக்கு வாழ்வளிக்கும் சிறு வணிகம் அழிவதா!
பாடுபட்டு வளர்த்த இந்திய சிறுவணிகச் சந்தையை அன்னியர் விழுங்குவதா!
நம்மூர் ஜவுளிக் "கடல்கள்' வற்றிப்போவதா! 
பலசரக்கும்,மருந்தும்,காய்கறி, சோப்பு சீப்பு கண்ணாடி  இத்தியாதிகளும்
இரையாவதா !
கடைவீதிகள் காத்தாடுவதா!

இரக்கமற்ற அரசாங்கமே ! 
அனுமதிக்காதே அந்நிய முதலீட்டை! 
பறிக்காதே கோடிக்கணக்கானவர்கள் வாழ்வுரிமையை!

Thursday, October 4, 2012

சிதம்பரத்தின் செல்லக் கிளி வேறென்ன சொல்லும்?



க.சுவாமிநாதன் 

* இன்சூரன்ஸ் துறையில் அந்நிய முதலீடு 49 % ஆக உயருமென அறிவிக்கப்பட்டுள்ளதே!

ஆமாம்! ஆனால் சில்லறை வர்த்தகத்தில் கொண்டு வந்தது போல் அரசு அறிவிக்கை மூலம் 
இதனை அமலாக்க முடியாது.ஏற்கனவே நாடாளுமன்றத்தில் ஐ.ஆர்.டி.ஏ சட்டம் நிறைவேறும்போது 26 % என்பது சட்டத்தின் ஒரு பகுதியாகவே சேர்க்கப் பட்டது. எனவே அதை மாற்றவேண்டுமெனில் நாடாளுமன்ற ஒப்புதல் வேண்டும். குளிர்காலக் கூட்டத் தொடரில் நிறைவேற்ற முயற்சிப்பார்கள்.

* அப்போது ஏன் 26 % என்ற வரையறையை போட்டுவிட்டு இப்போது மாற்றுகிறார்கள்?

அவர்களின் விருப்பம் அப்போதும் முழுமையாக திறந்துவிட வேண்டுமென்பதுதான். 1994 ல் 
மல்கோத்ரா அறிக்கை அப்படிதான் சொன்னது. இன்சூரன்ஸ் தொழிற்சங்க இயக்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த 26 % என்ற கட்டுப்பாட்டை கொண்டு வந்தார்கள். ஒட்டகம் கூடாரத்தில் மூக்கை அப்போது நுழைத்துக் கொண்டது.இப்போது 49 சதவீதம் ஆக்க முயற்சிக்கிறார்கள். இப்போது விட்டுவிட்டால் சில ஆண்டுகள் கழித்து 74 சதவீதம் என்பார்கள்.
அப்புறம் கூடாரத்தில் ஒட்டகத்திற்கு மட்டுமே இடம் இருக்கும்.

* இந்திய இன்சூரன்ஸ் துறைக்கு முதலீடுகள் அதிகம் தேவைப்படுவதால் இப்படி அந்நிய முதலீட்டு வரம்பை உயரத்துவதாகச் சொல்கிறார்களே!

 ஏற்கனவே இந்திய இன்சூரன்ஸ் துறையில் உள்ள 23 தனியார் கம்பெனிகளில் ரூ 23656 கோடி முதலீடுகளை இந்தியத் தனியார்கள் போட்டிருக்கிறார்கள். ரூ 6100 கோடிகளைத்தான் அந்நிய இன்சூரன்ஸ் நிறுவனங்கள் கொண்டு வந்துள்ளன. இந்தத் தொகையை கொண்டு வருவதற்கானசக்தி இந்திய தனியார்களுக்கே உள்ளது. இந்தியத் தனியார்கள் வெளிநாடுகளில் போய் இதை விட பன்மடங்கு முதலீடுகளைச் செய்து கொண்டு
இருக்கும் வேலை இது. டாட்டா , கோரஸ் நிறுவனத்தை வாங்கியதைப் போல் இந்தியத் தனியார் பல்லாயிரம் கோடிகளை அந்நிய மண்ணில் முதலீடுகளாய் கொட்ட முடியும்போது இன்சூரன்ஸ் துறைக்கு கூடுதல் முதலீட்டிற்காக அவர்கள் ஏன் அந்நிய நிறுவனங்களை நாட வேண்டும். ரிசர்வ் வங்கியின் அறிக்கையின் படியே இந்தியாவிற்குள் வரும் வெளிநாட்டு முதலீடுகளைக் காட்டிலும் இங்கே இருந்து வெளியே போவதுதான் அதிகம். 

* அப்புறம் எதற்கு இந்தியத் தொழிலதிபர்கள்  அந்நிய முதலீடு அதிகரிப்பை கோர வேண்டும்?

உண்மையில் 26 சதவீதம் அனுமதிக்கப்பட்டிருந்தாலும் ரிலையன்ஸ் இன்சூரன்ஸ் நிறுவனம் அண்மைக் காலம் வரை அந்நிய முதலீடு ஒரு பைசா கூட இல்லாமல்தான் தொழில் நடத்தி வந்தார்கள். ஜப்பானின் நிப்பான் கம்பெனிக்கு கடந்த ஆகஸ்ட் 2011 ல் தான் 26 சதவீதத்தை விற்றார்கள். இப்படி விற்கும்போது அவர்களின் பங்குகள் நல்ல விலைக்கு போய் லாபம் கிடைப்பதால் அந்நிய முதலீடு அதிகரிப்பை வரவேற்கிறார்கள்.

* இந்திய நாட்டின் ஆதாரத் தொழில் வளர்ச்சிக்கு முதலீடுகள் வரும் என்கிறார்களே!

இந்த பத்தாண்டுகளில் 26 சதவீதம் வைத்திருக்கிறார்களே! என்ன அனுபவம்! அவர்களின் வணிகம் எல்லாம் பங்குச் சந்தையோடு இணைக்கப்பட்ட திட்டங்களை நோக்கியே உள்ளது. ஆனால் எல்.ஐ.சி 11 வது ஐந்தாண்டு திட்டக் காலமான 2007 - 2012 ல் ரூ 704151 கோடி ரூபாய்களை அரசின் பொருளாதாரத் திட்டங்களுக்காகவழங்கியுள்ளது. வெறும் ரூ 5 கோடிதான் அரசு மூலதனம். அதுவும் 1956 ல் போட்டது. அதற்குப் பிறகு ஒரு ருபாய் கூட போடவில்லை. இப்படி ஒரு வெற்றிக் கதை வேறு எங்காவது உண்டா! இதை வலுப்படுத்துவதை 
விட்டுவிட்டு பன்னாட்டு இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு ரத்தினக் கம்பளம் ஏன்!

* பாலிசி தாரர்களுக்கு நல்லது என்கிறார்களே!

இவர்கள் லட்சணத்தை அமெரிக்காவிலும், பிரிட்டனிலும் பார்த்தோமே. 2008 உலக நிதி நெருக்கடியில் எத்தனை நிறுவனங்கள் திவால் ஆயின. இங்கே டாட்டாவுடன் இணைந்து தொழில் செய்கிற ஏ.ஐ.ஜி கம்பெனி அமெரிக்காவில் திவாலின் விளிம்பு வரை போனதே! இந்தியாவில் கடந்த பத்தாண்டுகளில் புதிதாக என்ன இன்சூரன்ஸ் திட்டத்தைத் 
தந்திருக்கிறார்கள்? எல்.ஐ.சி யில் ஒன்றே கால் (1 .22 ) சதவீத இறப்பு உரிமங்களும், அரை சதவீத (0 .5 ) முதிர்வு உரிமங்களுமே 2010 -11 நிலுவையில் இருந்தன. டாட்டா-ஏ.ஐ.ஜி யில் நிலுவை உரிமங்கள் 18 சதவீதம். ரிலையன்ஸ் லைப் கம்பெனியிலும் 18 சதவீதம். நியூ யார்க் லைப் நிறுவனத்தில் 22 சதவீதம். சில தனியார் நிறுவனங்களில் 40 சதவீதம் 
கூட இருந்திருக்கிறது.

* ஐ.ஆர்.டி.ஏ சேர்மன், அந்நிய முதலீடு அதிகரிப்பு தேவை என்று சொல்லியிருப்பதை நிதியமைச்சர் சிதம்பரம் சுட்டிக் காண்பித்து இருக்கிறாரே!

அவர்கள் வளர்க்கிற கிளி அவர்கள் சொல்வதைத்தானே ஒப்பிக்கும்! நாடாளுமன்ற நிலைக் குழு இம்மசோதாவை பரிசீலித்து ஒருமித்த குரலில் அந்நிய முதலீடு அதிகரிப்பு கூடாது என்று சொல்லியிருக்கிறதே. அக்குழுவில் காங்கிரஸ் எம்.பி க்களும் இருந்திருக்கிறார்களே! எல்லாக் கட்சி எம்.பி க்களும் ஒரே குரலில் சொல்வதை விட்டுவிட்டு எனது செல்லக் கிளி சொல்கிறதே 
என்றால் என்ன ஜனநாயகம்! 

Monday, October 1, 2012

SEP-30: DIRECT ACTION BY TNUEF IN EIGHT CENTRES AGAINST UNTOUCHABILITY

        தீண்டாமை ஒழிப்பு முன்னணி நேரடி நடவடிக்கை  மாபெரும் வெற்றி


தமிழகத்தில், அமரர் பி.சீனி வாசராவ் நினைவு நாளையொட்டி தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைமையில் எட்டு இடங்களில் நடைபெற்ற தீண்டாமை ஒழிப்பு போராட்டங்கள் பெருமளவில் வெற்றிபெற்றுள்ளன. இதுகுறித்து தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் பி.சம்பத், பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ் ஆகி யோர் அளித்துள்ள விபரம் வருமாறு:கீழ்தஞ்சையில் தீண்டாமைக் கொடுமைகளுக்கு முடிவு கட்டும் வகையில் போராடிய தோழர் பி.சீனி வாசராவ் அவர்களின் நினைவு தினமான செப்டம்பர் 30 அன்று நேரடி நடவடிக்கைகளை மேற் கொள்வது என்று தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணி முடி வெடுத்தது. அதனடிப்படையில் கோவை, ஈரோடு, சேலம், திரு வண்ணாமலை, திருப்பூர், வேலூர், புதுக்கோட்டை மற்றும் திண்டுக் கல் ஆகிய மாவட்டங்களில் நேரடி நடவடிக்கைகளுக்கு அறைகூவல் விடுக்கப்பட்டது. 

காளப்பட்டி

கோயம்புத்தூர் காளப்பட்டி மாரி யம்மன் கோவிலுக்குள் அருந்ததிய மக்களும் இதர தாழ்த்தப்பட்ட மக் களும் அனுமதிக்கப்படாத நிலை இருந்தது. அவர்களை அழைத்துக் கொண்டு ஆலயத்துக்குள் நுழை வது என்று முடிவெடுத்து நடந்த நேரடி நடவடிக்கை வெற்றி பெற்றுள் ளது. அரை நூற்றாண்டு கால மாகவே இந்தக் கோவிலுக்குள் நுழைவது என்பது அருந்ததிய மக்க ளைப் பொறுத்தவரை வெறும் கன வாகவே இருந்து வந்தது. இன்றைய தினம் அப்பகுதி அருந்ததிய மக்க ளும் இதர பகுதி அருந்ததிய மற்றும் இதர தாழ்த்தப்பட்ட மக்களும் ஆலயத்திற்குள் சென்று வழிபட் டனர். அவர்கள் ஆனந்தக் கண்ணீ ரோடு வழிபட்டதோடு, ஆலய நுழை வுப் போராட்டத்திற்கு தங்கள் நன்றி யையும் தெரிவித்துக் கொண்டனர். உணர்ச்சிகரமான நிகழ்வாக இருந்த இந்தப் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணி, ஆதித் தமிழர் பேரவை, ஆதித்தமிழர் விடு தலை முன்னணி, பல வர்க்க, வெகு ஜன அமைப்புகள் உள்ளிட்ட பல் வேறு ஜனநாயக மற்றும் தலித் அமைப்புகள் பங்கேற்றன. 2 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பங் கேற்ற இந்தப் போராட்டம் மிகவும் எழுச்சிகரமான வகையில் அமைந் தது. பங்கேற்றவர்களில் பாதிப்பேர் தலித் அல்லாத உழைப்பாளி மக் கள் என்பது குறிப்பிடத்தக்க அம்ச மாகும்.

வாவிக்கடை

ஈரோடு வாவிக்கடை அண்ண மார் - மதுரை வீரன் கோவில் அருந் ததிய சமூகத்தினரின் சொந்தக் கோவிலாகும். தனக்கு ஏன் முடி வெட்டவில்லை என்று ஒரு தலித் வாலிபர் கேட்டதற்காக கோவில் வழிபாட்டு உரிமையை ஆதிக்க சக்திகள் வன்முறை வெறியாட்டம் நடத்தி மறுத்தன. கடந்த ஐந்து ஆண்டுகளாக சொந்தக் கோவிலுக் குள் நுழைந்து வழிபட முடியாத நிலை இருந்து வந்தது. நேரடி நட வடிக்கைகளின் ஒரு பகுதியாக கோவிலுக்குள் அருந்ததிய மக்க ளோடு செல்வது என்று முன்னணி சார்பில் அறிவிக்கப்பட்டது. நியாய மான இந்தக் கோரிக்கைக்கு இருந்த ஆதரவைக் கண்டு மாவட்ட நிர் வாகம் நடத்திய பேச்சுவார்த்தை யின் அடிப்படையில், செப்டம்பர் 29 ஆம் தேதியன்றே இரு தரப்பு மக்க ளும் ஒற்றுமையாக கோவிலுக்குள் சென்று வழிபட்டனர். இரு தரப்பி லிருந்தும் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இந்த ஒற்று மை தொடர வேண்டும் என்று தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன் னணி சார்பில் வலியுறுத்தப்பட்டது. 

காட்டுமரக்குட்டை

சேலம் வட்டம் காட்டுமரக் குட்டை கிராமத்தில் தலித் மக்க ளுக்கு பாதை மறுக்கப்பட்டு வந் தது. நேரடி நடவடிக்கையாக பாதை அமைக்கும் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. மாநக ரத்தின் பல பகுதிகளிலிருந்து நூற் றுக்கணக்கான மக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் ஆகியோர் இணைந்து பாதை அமைக்கும் போராட்டத்திற்கு தயாராகி வந்தனர். இந்நிலையில் செப்டம்பர் 29 ஆம் தேதியன்று பேச்சுவார்த்தைக்கு அழைத்த மாவட்ட நிர்வாகம், தலித் மக்கள் செல்ல தடைவிதிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த கற்களை உடனடியாக அகற்றி விடு வது என்றும், அந்தப் பொதுப் பாதையை தலித் மக்கள் பயன் படுத்திக் கொள்ளலாம் என்றும் கூறியது. மேலும் மூன்று மாதத்திற் குள் இதில் சாலை அமைத்துத் தருவது என்றும் எழுத்துப்பூர்வமாக மாவட்ட நிர்வாகம் உறுதியளித் துள்ளது.

கலசப்பாக்கம்

திருவண்ணாமலை கலசப்பாக் கம் அம்பேத்கர் நகர் பாதை அமைக் கும் நேரடி நடவடிக்கைக்கு அறை கூவல் விடப்பட்டிருந்தது. இந்தப் போராட்டத்தில் பங்கேற்க நூற்றுக் கணக்கான மக்கள் திரண்ட நிலை யில் உடனடியாக அந்தப் பாதையை அமைத்துத் தருவதாக மாவட்ட நிர்வாகம் உறுதிமொழி தந்தது. மேலும், பஞ்சமி நிலம் ஒன்று சம் பந்தமான பிரச்சனையிலும், அதைப் பெற்றுள்ள பயனாளிகள் நிலத்தை உடனடியாகப் பயன்படுத்திக் கொள்ள எந்தத்தடையும் இல்லை என்று மாவட்ட நிர்வாகம் அறி வித்தது.

நடுவேலம்பாளையம்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஒன்றியம் நடுவேலம்பாளையத்தில் 5.2 ஏக்கர் பஞ்சமி நிலம் சட்ட விரோதமாக தலித் அல்லாதவர்கள் கையில் உள்ளது. அந்த நிலத்தை வீட்டுமனைகளாக மாற்றி விற் பனை செய்வதற்கான வேலையும் நடந்து கொண்டிருந்தது. இதைத் தடுத்து அதை தலித் மக்களுக்கு பெற்றுத் தரும் வகையில் நேரடி நட வடிக்கைக்கு தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணி அழைப்பு விடுத்தது. நூற்றுக்கணக்கான மக்கள் போராட்டத்தில் பங்கேற்ற நிலையில் பேச்சுவார்த்தைக்கு மாவட்ட நிர்வாகம் முன்வந்தது. அந்த நிலம் விற்பனை செய்யப்படு வதற்கு தடை விதித்து, அதற்கான உத்தரவை துணைப் பதிவாளருக்கு உடனடியாக அனுப்ப ஒப்புக் கொண் டனர். மேலும் அக்டோபர் 3 ஆம் தேதியன்று பஞ்சமி நிலத்தை புதிய பயனாளிகளிடம் ஒப்படைப்பது பற்றிய பேச்சுவார்த்தைக்கூட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப் பட்டுள்ளது.

வாலாஜாபேட்டை

வேலூர் வாலாஜாபேட்டை படவேட்டம்மன் கோவிலை ஒட்டி தலித் மக்களுக்கான பாதையை மறித்து ஆதிக்க சக்திகளால் தீண் டாமைச்சுவர் கட்டப்பட்டு வந்தது. இதை நேரடி நடவடிக்கை மூலம் அகற்றுவது என்று தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணி விடுத்த அறைகூவலை ஏற்று ஏராளமான அளவில் மக்கள் திரண்டனர். பெரும் அளவில் மக்கள் திரள் வதைத் தடுக்க காவல்துறையின் அட்டூழியம் கட்டவிழ்த்து விடப்பட் டது. வரும் வழியிலேயே மக்க ளைக் கைது செய்வது, மிரட்டுவது போன்ற வேலைகள் நடந்தன. கைது நடவடிக்கைகளுக்குப் பிறகே ஆர்.டி.ஓ. நேரடியாக பேச்சு வார்த்தைக்கு முன்வந்தார். அக் டோபர் 10ஆம் தேதியன்று மாவட்ட வருவாய் அலுவலர்(டி.ஆர்.ஓ) முன் னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைக்கு முழுத்தீர்வு காண் பது என்று அப்போது முடிவு செய் யப்பட்டது. அதுவரையில், தீண்டா மைச் சுவரின் கட்டுமானப் பணியை மேற்கொண்டு தொடர அனுமதிக்கமாட்டோம் என்றும் ஆர்.டி.ஓ உறுதியளித்தார்.

கறம்பக்குடி

புதுக்கோட்டை மாவட்டம் கறம் பக்குடியில் 86 தலித் குடும்பங் களுக்கு நிலம் ஒதுக்கப்பட்டு பட்டா வும் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் அதைப் பயன்படுத்திக் கொள்ள அவர்கள் அனுமதிக்கப்படவில் லை. இந்நிலையில் நேரடி நட வடிக்கையாக அந்த நிலத்தில் குடி யேறுவது என்று முன்னணி சார் பில் அறிவிக்கப்பட்டு மக்கள் ஏராள மான அளவில் திரண்டனர். எழுச் சிகரமாக மக்கள் திரண்டதைக் கண்ட மாவட்ட நிர்வாகத்தின் தரப் பில் ஆர்.டி.ஓ பேச்சுவார்த்தைக்கு முன் வந்தார். பட்டாவின் நகலை மக்கள் காட்டியபோது, தள்ளிப் போடுவதற்கான உத்தியாக பட்டா வின் உண்மை நகல் இருந்தால் தான் நாங்கள் பேச முடியும் என்று இழுத்தடிக்கத் துவங்கினர். துரித மாகச் செயல்பட்ட சிலர் ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே பட்டாவின் உண்மை நகல்களோடு வந்ததால் அதிகாரிகள் திகைத்துப் போயினர். அந்த இடத்தை சென்று பார்வை யிட்ட பிறகே முடிவு செய்வோம் என்று அதிகாரிகள் கூறியபோது, மக்களும் சளைக்காமல், பரவா யில்லை; நாங்கள் இங்கேயே காத் திருக்கிறோம் என்று கூறினர். ஆனால் போராடும் மக்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இத னால் போராட்டம் தீவிரமடையும் நிலை உள்ளது. 

மரியநாதபுரம்

திண்டுக்கல் மரியநாதபுரத்தில் பிரதான சாலையை அடைய தலித் மக்கள் பயன்படுத்தும் பாதை மறிக் கப்பட்டு சுவர் கட்டப்பட்டிருந்தது. இதை நேரடி நடவடிக்கை மூலம் அகற்ற தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அழைப்பு விடுத் தது. இதை அறிவிக்கும் வகையில் ஏற்கனவே அந்த சுவரைப் பார்வை யிட்டிருந்த முன்னணியின் மாநி லத் தலைவர் பி.சம்பத் பங்கேற்கும் பத்திரிகையாளர் சந்திப்புக்கு செப் டம்பர் 12 அன்று ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. இந்நிலையில் அச் சுவரை எழுப்பியிருந்த சௌந்தர ராஜா மில் நிர்வாகம், அந்தச்சுவரை அப்புறப்படுத்திக் கொள்ளலாம் என்று திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் கே.பாலபாரதியிடம் ஒப்பு தல் கடிதம் தந்தது. இதைத் தொடர்ந்து அன்றைய தினமே மக்கள் திரண்டெழுந்து அந்தச் சுவரை அப்புறப்படுத்தினர். 

கடந்த சட்டமன்றக்கூட்டத் தொடரில், தமிழகத்தில் தீண் டாமைக் கொடுமையே இல்லை என்று சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்த அமைச்சர்களுக்கு, அவர்கள் சொன்னது மகா பொய் என்பதைத் தான் இந்தப் போராட்டங்களும், வெற்றிகளும் காட்டுகின்றன. இன் னும் ஏராளமான கொடுமைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் இத்தகைய கொடுமை களை முழுவதுமாக ஒழித்துக்கட்ட ஜனநாயக சக்திகளை இணைத் துக் கொண்டு தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணி தொடர்ந்து போராடும்.

இந்தப் போராட்டங் களில் எழுச்சியோடு பங்கேற்ற பல்லாயிரக்கணக்கான தலித் மக்க ளுக்கும், தலித் மக்களின்  உரிமையை நிலைநாட்ட களத்தில் இறங்கிப் போராடிய தலித் அல்லாத இதர பகுதி உழைப்பாளி மக்களுக்கும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, ஆதித்தமிழர் பேரவை, ஆதித்தமிழர் விடுதலை முன்னணி, பகுஜன் சமாஜ் கட்சி, பல்வேறு வர்க்க, வெகுஜன அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளுக்கும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன் னணி பாராட்டுக்களையும், வாழ்த் துக்களையும் தெரிவித்துக் கொள் கிறது.

கே.சம்பத் & கே.சாமுவேல்ராஜ் 

தோழர் பி.வி.நந்தகுமார் பாராட்டு விழா

DSC09946.JPG

 நிறைவு அடைந்த அலுவலகப் பணி ...

விரிந்த தளத்தில் தொடரும் பணி ...


பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் (தெ .ம ) தலைவர் தோழர் பி.வி. நந்தகுமார்
30 .09.2012 அன்று யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி பணியில் இருந்து ஒய்வு பெற்றுள்ளார்.அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தை பொது இன்சூரன்ஸ் துறையில் வளர்த்தெடுப்பதில் அவர் ஆற்றியுள்ள பணி அளப்பரியதாகும். எளிமையான, எவரும் எளிதில் நெருங்கக் கூடிய, நெருக்கடி காலங்களில் சற்றும் தளராது தொழிற்சங்கப் பணி ஆற்றி வந்துள்ள தலைவர்.
தினக் கூலி ஊழியர்களை நிரந்தரப் பணி அமர்த்துகிற போராட்டத்தின் தளபதிகளில் ஒருவராக இருந்து வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை ஈட்டியவர்.

செப் 29 அன்று சென்னையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் கே.வேணுகோபால் பங்கேற்று பாராட்டினார்.தோழர் உ.வாசுகி (சி.பி.எம் மத்தியக் குழு உறுப்பினர்) தோழர் ஜே.குருமூர்த்தி (நிலைக்குழு செயலாளர் - பொது இன்சூரன்ஸ் - AIIEA ) தோழர் பீமாராவ் எம்.எல்.ஏ, தோழர் அப்பனு (சி.ஐ.டி.யு ) திருமிகு ஜெயமூர்த்தி (எஸ்.சி,எஸ்,டி  ஊழியர் சங்கம்) தோழர் கோபால் (பெபி ) தோழர் கே.சுவாமிநாதன் (SZIEF) தோழர் எஸ்.ரமேஷ் குமார் (ICEU- சென்னை 1 ) தோழர் மனோகரன் (ICEU- சென்னை 2) உள்ளிட்ட தலைவர்கள் உரையாற்றினர். தோழர் ஆனந்த் தலைமை தாங்கினார்.

எதிர் காலத்தில் அமைப்பு சாராத் தொழிலாளர்களை திரட்டுவதில் தோழர் பி.வி.நந்தகுமார் ஈடுபட இசைவு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Friday, September 28, 2012

FDI in Insurance detrimental to the Nation: AIIEA


Opposition to FDI in insurance sector

SPECIAL CORRESPONDENT
SHARE  ·   PRINT   ·   T+  
President of the All-India Insurance Employees’ Association Amanulla Khan interacting with participants at the Annual General Council Meeting of the Insurance Corporation Employees’ Union in Bangalore on Tuesday. Photo: V. Sreenivasa Murthy
The HinduPresident of the All-India Insurance Employees’ Association Amanulla Khan interacting with participants at the Annual General Council Meeting of the Insurance Corporation Employees’ Union in Bangalore on Tuesday. Photo: V. Sreenivasa Murthy
Speakers at the two-day Annual General Council Meeting of Insurance Corporation Employees’ Union, which began in Bangalore on Tuesday, strongly opposed foreign direct investment (FDI) in the insurance sector.
Inaugurating the conference, Amanulla Khan, president of the All-India Insurance Employees’ Association (AIIEA), called upon insurance employees to oppose the FDI “with all your might” as the move would pave the way for foreign insurance companies to have control over the savings of the people and result in flight of capital from the country.
While domestic savings in the country had come down drastically, the Life Insurance Corporation of India’s premium income was steady at Rs. 2 lakh crore, with an asset of Rs. 15 lakh crore, he said. The corporation was enjoying the support of 40 crore policy holders, achieving 81 per cent share in the insurance sector. “Under such circumstances, what is the need for the Centre to invite FDI in the sector?” he said.
‘Giving in to pressure’
He said the United Progressive Alliance government had crossed the limits of decency and was succumbing to pressures of international finance corporations. “The Indian nation-state is taking only pro-rich policies and is no longer worried about the plight of the common people and the poor.”
Criticising the diesel price hike, he said “the decision will adversely affect the common man who depends on the public transport system”.
He slammed the government for bringing in FDI in multi-brand retail. “Can a kirana shop (small trader) set up in an area of 100 sq ft compete with a Walmart coming up in an area of 60,000 sq ft?” he said.
The Cabinet Committee on Economic Affairs, approving the Rs.1.9-lakh crore debt restructuring package for the turnaround of State Distribution Companies, would force consumers to pay more for electricity, he observed.
‘Join the strike’
He alleged that anti-people policies of the government could not be allowed to take place and trade unions have to fight them. “Trade unions have called for a nationwide bandh on February 20 and 21, 2013, to oppose the anti-people policies and workers should unite and make the strike a complete success,” he said.
General secretary South Central Zone Insurance Employees’ Federation and other leaders addressed the gathering. Over 1,000 delegates from Bangalore, Tumkur, Kolar, Chickballapur and Ramanagaram districts attended.