Wednesday, October 31, 2012

THE HINDU-MADURAI-1st November 2012


FDI row: trade unions warn of stir

R. SAIRAM
SHARE  ·   PRINT   ·   T+  
It Centre introduces bill to hike FDI in insurance sector
: All India Insurance Employees’ Association (AIIEA) and other trade unions have warned the Central Government of nation-wide strikes if it introduces the bill to hike foreign direct investment (FDI) in insurance sector during the upcoming Winter Session of the Parliament.
Along with a slew of economic reform measures, the Union Cabinet in October had approved amendments to Insurance Laws (Amendment), Bill, 2008 to allow the increase of FDI limit in insurance sector from the present 26 per cent to 49 per cent.
The unions have already begun an awareness campaign across the country through conventions, agitations and streetplays focussing on “adverse affects” of increasing foreign investment in Indian economy, according to the national joint secretary of AIIEA K. Swaminathan.
Speaking to The Hindu here on Wednesday, he said that the objective was to bring a mass mobilisation of public and workers against the move to take up the amended bill before November 21 when the Parliament would convene for Winter Session.
“The unions are going to meet all the Members of Parliament belonging to both Lok Sabha and Rajya Sabha as this bill has to be passed by both Houses. Unlike in retail and telecommunication sectors, the Centre cannot increase FDI in insurance through notifications as the 26 per cent cap was fixed in the IRDA Act, 1999.”
He also decried the arguments of Insurance Regulatory and Development Authority (IRDA) Chairman J. Hari Narayan that FDI was needed to capitalise Indian private insurance companies and increase penetration.
Indian promoters of insurance companies that are collaborating with foreign companies were making large scale acquisitions abroad indicating that they were flush with funds. Further in the 10 years of having allowed 26 per cent FDI in insurance, only Rs. 6,300 crore had come into the sector.
This was a meagre compared to size of the Indian economy. The Life Insurance Corporation of India (LIC) alone contributed more than Rs. 7 lakh crore to the last Five Year Plan of 2007-12.
As regards market penetration, Mr. Swaminathan said that LIC had 30 crore individual polices and covered ten crore persons under group insurance and still accounted for 76 per cent of market share till August this year.
It was only public sector companies that were increasing penetration, he said, adding that the claims settlement of LIC was 99 per cent while private companies had outstanding between 18 and 40 per cent.
He also noted that a Parliamentary Standing Committee on Finance, in which United Progressive Alliance had a majority of the members, had unanimously voted against increasing FDI in insurance. He held discussions with local trade union office bearers.

Wednesday, October 17, 2012

Dr Ambedkar Centre at Cuddalore-Excerpts from News published in THE HINDU


Insurance employees’ union to run free coaching centres for SC/ST candidates

 
K.Swaminathan, general secretary of the South Zone Insurance Employees Federation delivering a speech at the LIC office, in Cuddalore.
K.Swaminathan, general secretary of the South Zone Insurance Employees Federation delivering a speech at the LIC office, in Cuddalore.
The All India Insurance Employees’ Association has been setting up ‘Dr. Ambedkar Education Employment Coaching Centres’, all over the State.

So far, the Association has formed 19 such centres and 161 more are in the offing, said K. Swaminathan, general secretary, South Zone Insurance Employees’ Federation Mr. K . Swamination made this announcement while inaugurating the coaching centre at Cuddalore on Saturday.

He further said that these centres were conducting coaching classes free of cost to aspiring Scheduled Castes/Scheduled Tribes candidates to appear for the competitive examinations.
It was done purely with the intention of giving a helping hand to the oppressed sections of the society who were in need of support and encouragement to face the competition and to come out with flying colours.

So far 19 centres had been started, including the one in Cuddalore, and the remaining would come up in phases. Secretary of the Insurance Corporation Employees’ Union V. Sugumaran said that, at present, 15 candidates were enrolled with the Cuddalore centre for undergoing coaching for the Village Administrative Officer examinations.

The next session would be for those appearing for the Railway Recruitment Board’s examinations.
Mr. Sugumaran said that the union had a tie up with the Tamil Nadu Government Teachers’ Association and the Private School Teachers’ Association to mobilise the resource persons.

The members would also rope in college lecturers and professors to handle the coaching classes. The Dr. Ambedkar Education Employment Coaching Centre in Chennai would be supplying the study materials on a centralised basis.

Except the examination fees, the candidates need not bear any other expenses on the coaching, Mr. Sugumaran added.

Earlier, Mr. Swaminathan distributed relief materials to 20 families who were affected by Cyclone Thane.

Sunday, October 14, 2012

Reader's mail to The Hindu from KVB union leader


Insurance is a social security arrangement wherein the insured pays a premium and the insurer agrees to pay for the loss arising out of unforeseen happenings. The premium collected from the insured is invested in nation-building activities.
But with the government permitting private players in the insurance sector, the concept of social security has taken a back seat. Raising the level of FDI in the insurance sector to 49 per cent is an anti-people move.
P. Viswanathan, Chennai

Friday, October 5, 2012

துண்டுப் பிரசுரம்

வரலாமா வால்மார்ட் ! வாழுமா சிறு வியாபாரம் !

கதவைத் திறந்துவிட்டார்கள் பன்னாட்டுப் பகாசுர சில்லறை வியாபாரிகளுக்கு...
உள்ளே நுழைகிற வெறியோடு வால்மார்ட், டெஸ்கோ, கேரி போர்...
நான்கு கோடி சிறுவியாபாரிகளின் வாழ்க்கை கேள்விக்குறியாய்..

தாய்லாந்தில் 67 சதவீத கடைகளுக்கு மூடுவிழா!
மெக்சிகோவில் 21 ஆண்டுகளில் 50 சதவீதச் சந்தை அபேஸ்!                                      
இப்படி விழுங்குகிற அரக்க நிறுவனங்கள் எதற்காக!
உலகமயம் பேசுகிற மன்மோகன்சிங்கே உலக அனுபவம் தெரியாதா!
இந்தியச் சிறு வியாபாரிகளின் வயிற்றில் அடிப்பதில் என்ன ஆனந்தம்?

விவசாயிகளுக்கு அதிக விலை கிடைக்கும் என்று வாய்ப் பந்தல்!
பிரிட்டன் பால் உற்பத்தியாளர் சங்கம் கதறுவது என்ன ?
ஐரோப்பிய இணையம் நாடாளுமன்ற அறிக்கை சொல்வது என்ன ?
விவசாயிகளின் ரத்தம் குடிக்கிற ராட்சச நிறுவனங்களின் ஏகபோகம்!
மத்திய அரசே அளவில்லாத பொய் மூட்டைகளை அவிழ்த்து விடாதே!

அப்பாவி மக்களுக்கும் ஆப்பு!
போட்டிக் கடைகளையெல்லாம் ஒழித்துவிட்டால்...
அந்தப் பாவிகள் வைப்பதுதானே விலை..
பிரிட்டன் வாழ் இந்திய எம்.பி கெயித் வாஸ் என்ன சொல்கிறார்?
பார்த்து செய்யுங்கப்பா! சாமானிய மக்கள் பாவம்!
ஏன் இந்த அக்கறை சோனியாவுக்கு இல்லை!
இளவரசர் ராகுலுக்கு இல்லை..

கூடாரத்திற்குள் ஒட்டகம்!
10 லட்சம் மக்கள் உள்ள நகரங்களில்தான் அனுமதியாம்!
கட்டுப்பாடு அல்ல இது! அங்குதான் இப்ப லாபம் அதிகம்!
அடுத்த ரவுண்டு வருவார்கள் குறிவைத்து...  
விருதுநகர் வியாபாரிகளுக்கும்..
வித்துப்போட்டு பணத்தை எண்ணும் செல்லக்கண்ணுகளுக்கும்..

குழி தோண்டுகிறார்கள் ஜனநாயகத்திற்கு..
11 மாநிலங்கள் மட்டுமே ஒப்புதல் !
அங்குமட்டும் அனுமதியாம்! என்ன ஜனநாயகம் !
காங்கிரஸ் ஆளுகிற கேரளா அரசு கூட எதிர்ப்பு!
2002  ல் இதே மன்மோகன் சிங்கே எதிர்த்ததுதான்!

திருப்பூரில் சிறுதொழிலை அழித்தவர்கள் ..
விவசாயிகளின் தற்கொலைக்கு வழிவகுத்தவர்கள்..
அன்றாட விலைவாசி உயர்வை கைகட்டி வேடிக்கை பார்ப்பவர்கள்..
திவாலான அந்நிய வங்கி,இன்சூரன்ஸ் நிறுவனங்களை 
இந்தியாவில் அனுமதிக்கத் துடிப்பவர்கள்..
வருகிறார்கள் சிறு வியாபாரத்திற்கும்..

12 கோடி மக்களுக்கு வாழ்வளிக்கும் சிறு வணிகம் அழிவதா!
பாடுபட்டு வளர்த்த இந்திய சிறுவணிகச் சந்தையை அன்னியர் விழுங்குவதா!
நம்மூர் ஜவுளிக் "கடல்கள்' வற்றிப்போவதா! 
பலசரக்கும்,மருந்தும்,காய்கறி, சோப்பு சீப்பு கண்ணாடி  இத்தியாதிகளும்
இரையாவதா !
கடைவீதிகள் காத்தாடுவதா!

இரக்கமற்ற அரசாங்கமே ! 
அனுமதிக்காதே அந்நிய முதலீட்டை! 
பறிக்காதே கோடிக்கணக்கானவர்கள் வாழ்வுரிமையை!

Thursday, October 4, 2012

சிதம்பரத்தின் செல்லக் கிளி வேறென்ன சொல்லும்?



க.சுவாமிநாதன் 

* இன்சூரன்ஸ் துறையில் அந்நிய முதலீடு 49 % ஆக உயருமென அறிவிக்கப்பட்டுள்ளதே!

ஆமாம்! ஆனால் சில்லறை வர்த்தகத்தில் கொண்டு வந்தது போல் அரசு அறிவிக்கை மூலம் 
இதனை அமலாக்க முடியாது.ஏற்கனவே நாடாளுமன்றத்தில் ஐ.ஆர்.டி.ஏ சட்டம் நிறைவேறும்போது 26 % என்பது சட்டத்தின் ஒரு பகுதியாகவே சேர்க்கப் பட்டது. எனவே அதை மாற்றவேண்டுமெனில் நாடாளுமன்ற ஒப்புதல் வேண்டும். குளிர்காலக் கூட்டத் தொடரில் நிறைவேற்ற முயற்சிப்பார்கள்.

* அப்போது ஏன் 26 % என்ற வரையறையை போட்டுவிட்டு இப்போது மாற்றுகிறார்கள்?

அவர்களின் விருப்பம் அப்போதும் முழுமையாக திறந்துவிட வேண்டுமென்பதுதான். 1994 ல் 
மல்கோத்ரா அறிக்கை அப்படிதான் சொன்னது. இன்சூரன்ஸ் தொழிற்சங்க இயக்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த 26 % என்ற கட்டுப்பாட்டை கொண்டு வந்தார்கள். ஒட்டகம் கூடாரத்தில் மூக்கை அப்போது நுழைத்துக் கொண்டது.இப்போது 49 சதவீதம் ஆக்க முயற்சிக்கிறார்கள். இப்போது விட்டுவிட்டால் சில ஆண்டுகள் கழித்து 74 சதவீதம் என்பார்கள்.
அப்புறம் கூடாரத்தில் ஒட்டகத்திற்கு மட்டுமே இடம் இருக்கும்.

* இந்திய இன்சூரன்ஸ் துறைக்கு முதலீடுகள் அதிகம் தேவைப்படுவதால் இப்படி அந்நிய முதலீட்டு வரம்பை உயரத்துவதாகச் சொல்கிறார்களே!

 ஏற்கனவே இந்திய இன்சூரன்ஸ் துறையில் உள்ள 23 தனியார் கம்பெனிகளில் ரூ 23656 கோடி முதலீடுகளை இந்தியத் தனியார்கள் போட்டிருக்கிறார்கள். ரூ 6100 கோடிகளைத்தான் அந்நிய இன்சூரன்ஸ் நிறுவனங்கள் கொண்டு வந்துள்ளன. இந்தத் தொகையை கொண்டு வருவதற்கானசக்தி இந்திய தனியார்களுக்கே உள்ளது. இந்தியத் தனியார்கள் வெளிநாடுகளில் போய் இதை விட பன்மடங்கு முதலீடுகளைச் செய்து கொண்டு
இருக்கும் வேலை இது. டாட்டா , கோரஸ் நிறுவனத்தை வாங்கியதைப் போல் இந்தியத் தனியார் பல்லாயிரம் கோடிகளை அந்நிய மண்ணில் முதலீடுகளாய் கொட்ட முடியும்போது இன்சூரன்ஸ் துறைக்கு கூடுதல் முதலீட்டிற்காக அவர்கள் ஏன் அந்நிய நிறுவனங்களை நாட வேண்டும். ரிசர்வ் வங்கியின் அறிக்கையின் படியே இந்தியாவிற்குள் வரும் வெளிநாட்டு முதலீடுகளைக் காட்டிலும் இங்கே இருந்து வெளியே போவதுதான் அதிகம். 

* அப்புறம் எதற்கு இந்தியத் தொழிலதிபர்கள்  அந்நிய முதலீடு அதிகரிப்பை கோர வேண்டும்?

உண்மையில் 26 சதவீதம் அனுமதிக்கப்பட்டிருந்தாலும் ரிலையன்ஸ் இன்சூரன்ஸ் நிறுவனம் அண்மைக் காலம் வரை அந்நிய முதலீடு ஒரு பைசா கூட இல்லாமல்தான் தொழில் நடத்தி வந்தார்கள். ஜப்பானின் நிப்பான் கம்பெனிக்கு கடந்த ஆகஸ்ட் 2011 ல் தான் 26 சதவீதத்தை விற்றார்கள். இப்படி விற்கும்போது அவர்களின் பங்குகள் நல்ல விலைக்கு போய் லாபம் கிடைப்பதால் அந்நிய முதலீடு அதிகரிப்பை வரவேற்கிறார்கள்.

* இந்திய நாட்டின் ஆதாரத் தொழில் வளர்ச்சிக்கு முதலீடுகள் வரும் என்கிறார்களே!

இந்த பத்தாண்டுகளில் 26 சதவீதம் வைத்திருக்கிறார்களே! என்ன அனுபவம்! அவர்களின் வணிகம் எல்லாம் பங்குச் சந்தையோடு இணைக்கப்பட்ட திட்டங்களை நோக்கியே உள்ளது. ஆனால் எல்.ஐ.சி 11 வது ஐந்தாண்டு திட்டக் காலமான 2007 - 2012 ல் ரூ 704151 கோடி ரூபாய்களை அரசின் பொருளாதாரத் திட்டங்களுக்காகவழங்கியுள்ளது. வெறும் ரூ 5 கோடிதான் அரசு மூலதனம். அதுவும் 1956 ல் போட்டது. அதற்குப் பிறகு ஒரு ருபாய் கூட போடவில்லை. இப்படி ஒரு வெற்றிக் கதை வேறு எங்காவது உண்டா! இதை வலுப்படுத்துவதை 
விட்டுவிட்டு பன்னாட்டு இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு ரத்தினக் கம்பளம் ஏன்!

* பாலிசி தாரர்களுக்கு நல்லது என்கிறார்களே!

இவர்கள் லட்சணத்தை அமெரிக்காவிலும், பிரிட்டனிலும் பார்த்தோமே. 2008 உலக நிதி நெருக்கடியில் எத்தனை நிறுவனங்கள் திவால் ஆயின. இங்கே டாட்டாவுடன் இணைந்து தொழில் செய்கிற ஏ.ஐ.ஜி கம்பெனி அமெரிக்காவில் திவாலின் விளிம்பு வரை போனதே! இந்தியாவில் கடந்த பத்தாண்டுகளில் புதிதாக என்ன இன்சூரன்ஸ் திட்டத்தைத் 
தந்திருக்கிறார்கள்? எல்.ஐ.சி யில் ஒன்றே கால் (1 .22 ) சதவீத இறப்பு உரிமங்களும், அரை சதவீத (0 .5 ) முதிர்வு உரிமங்களுமே 2010 -11 நிலுவையில் இருந்தன. டாட்டா-ஏ.ஐ.ஜி யில் நிலுவை உரிமங்கள் 18 சதவீதம். ரிலையன்ஸ் லைப் கம்பெனியிலும் 18 சதவீதம். நியூ யார்க் லைப் நிறுவனத்தில் 22 சதவீதம். சில தனியார் நிறுவனங்களில் 40 சதவீதம் 
கூட இருந்திருக்கிறது.

* ஐ.ஆர்.டி.ஏ சேர்மன், அந்நிய முதலீடு அதிகரிப்பு தேவை என்று சொல்லியிருப்பதை நிதியமைச்சர் சிதம்பரம் சுட்டிக் காண்பித்து இருக்கிறாரே!

அவர்கள் வளர்க்கிற கிளி அவர்கள் சொல்வதைத்தானே ஒப்பிக்கும்! நாடாளுமன்ற நிலைக் குழு இம்மசோதாவை பரிசீலித்து ஒருமித்த குரலில் அந்நிய முதலீடு அதிகரிப்பு கூடாது என்று சொல்லியிருக்கிறதே. அக்குழுவில் காங்கிரஸ் எம்.பி க்களும் இருந்திருக்கிறார்களே! எல்லாக் கட்சி எம்.பி க்களும் ஒரே குரலில் சொல்வதை விட்டுவிட்டு எனது செல்லக் கிளி சொல்கிறதே 
என்றால் என்ன ஜனநாயகம்! 

Monday, October 1, 2012

SEP-30: DIRECT ACTION BY TNUEF IN EIGHT CENTRES AGAINST UNTOUCHABILITY

        தீண்டாமை ஒழிப்பு முன்னணி நேரடி நடவடிக்கை  மாபெரும் வெற்றி


தமிழகத்தில், அமரர் பி.சீனி வாசராவ் நினைவு நாளையொட்டி தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைமையில் எட்டு இடங்களில் நடைபெற்ற தீண்டாமை ஒழிப்பு போராட்டங்கள் பெருமளவில் வெற்றிபெற்றுள்ளன. இதுகுறித்து தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் பி.சம்பத், பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ் ஆகி யோர் அளித்துள்ள விபரம் வருமாறு:கீழ்தஞ்சையில் தீண்டாமைக் கொடுமைகளுக்கு முடிவு கட்டும் வகையில் போராடிய தோழர் பி.சீனி வாசராவ் அவர்களின் நினைவு தினமான செப்டம்பர் 30 அன்று நேரடி நடவடிக்கைகளை மேற் கொள்வது என்று தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணி முடி வெடுத்தது. அதனடிப்படையில் கோவை, ஈரோடு, சேலம், திரு வண்ணாமலை, திருப்பூர், வேலூர், புதுக்கோட்டை மற்றும் திண்டுக் கல் ஆகிய மாவட்டங்களில் நேரடி நடவடிக்கைகளுக்கு அறைகூவல் விடுக்கப்பட்டது. 

காளப்பட்டி

கோயம்புத்தூர் காளப்பட்டி மாரி யம்மன் கோவிலுக்குள் அருந்ததிய மக்களும் இதர தாழ்த்தப்பட்ட மக் களும் அனுமதிக்கப்படாத நிலை இருந்தது. அவர்களை அழைத்துக் கொண்டு ஆலயத்துக்குள் நுழை வது என்று முடிவெடுத்து நடந்த நேரடி நடவடிக்கை வெற்றி பெற்றுள் ளது. அரை நூற்றாண்டு கால மாகவே இந்தக் கோவிலுக்குள் நுழைவது என்பது அருந்ததிய மக்க ளைப் பொறுத்தவரை வெறும் கன வாகவே இருந்து வந்தது. இன்றைய தினம் அப்பகுதி அருந்ததிய மக்க ளும் இதர பகுதி அருந்ததிய மற்றும் இதர தாழ்த்தப்பட்ட மக்களும் ஆலயத்திற்குள் சென்று வழிபட் டனர். அவர்கள் ஆனந்தக் கண்ணீ ரோடு வழிபட்டதோடு, ஆலய நுழை வுப் போராட்டத்திற்கு தங்கள் நன்றி யையும் தெரிவித்துக் கொண்டனர். உணர்ச்சிகரமான நிகழ்வாக இருந்த இந்தப் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணி, ஆதித் தமிழர் பேரவை, ஆதித்தமிழர் விடு தலை முன்னணி, பல வர்க்க, வெகு ஜன அமைப்புகள் உள்ளிட்ட பல் வேறு ஜனநாயக மற்றும் தலித் அமைப்புகள் பங்கேற்றன. 2 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பங் கேற்ற இந்தப் போராட்டம் மிகவும் எழுச்சிகரமான வகையில் அமைந் தது. பங்கேற்றவர்களில் பாதிப்பேர் தலித் அல்லாத உழைப்பாளி மக் கள் என்பது குறிப்பிடத்தக்க அம்ச மாகும்.

வாவிக்கடை

ஈரோடு வாவிக்கடை அண்ண மார் - மதுரை வீரன் கோவில் அருந் ததிய சமூகத்தினரின் சொந்தக் கோவிலாகும். தனக்கு ஏன் முடி வெட்டவில்லை என்று ஒரு தலித் வாலிபர் கேட்டதற்காக கோவில் வழிபாட்டு உரிமையை ஆதிக்க சக்திகள் வன்முறை வெறியாட்டம் நடத்தி மறுத்தன. கடந்த ஐந்து ஆண்டுகளாக சொந்தக் கோவிலுக் குள் நுழைந்து வழிபட முடியாத நிலை இருந்து வந்தது. நேரடி நட வடிக்கைகளின் ஒரு பகுதியாக கோவிலுக்குள் அருந்ததிய மக்க ளோடு செல்வது என்று முன்னணி சார்பில் அறிவிக்கப்பட்டது. நியாய மான இந்தக் கோரிக்கைக்கு இருந்த ஆதரவைக் கண்டு மாவட்ட நிர் வாகம் நடத்திய பேச்சுவார்த்தை யின் அடிப்படையில், செப்டம்பர் 29 ஆம் தேதியன்றே இரு தரப்பு மக்க ளும் ஒற்றுமையாக கோவிலுக்குள் சென்று வழிபட்டனர். இரு தரப்பி லிருந்தும் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இந்த ஒற்று மை தொடர வேண்டும் என்று தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன் னணி சார்பில் வலியுறுத்தப்பட்டது. 

காட்டுமரக்குட்டை

சேலம் வட்டம் காட்டுமரக் குட்டை கிராமத்தில் தலித் மக்க ளுக்கு பாதை மறுக்கப்பட்டு வந் தது. நேரடி நடவடிக்கையாக பாதை அமைக்கும் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. மாநக ரத்தின் பல பகுதிகளிலிருந்து நூற் றுக்கணக்கான மக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் ஆகியோர் இணைந்து பாதை அமைக்கும் போராட்டத்திற்கு தயாராகி வந்தனர். இந்நிலையில் செப்டம்பர் 29 ஆம் தேதியன்று பேச்சுவார்த்தைக்கு அழைத்த மாவட்ட நிர்வாகம், தலித் மக்கள் செல்ல தடைவிதிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த கற்களை உடனடியாக அகற்றி விடு வது என்றும், அந்தப் பொதுப் பாதையை தலித் மக்கள் பயன் படுத்திக் கொள்ளலாம் என்றும் கூறியது. மேலும் மூன்று மாதத்திற் குள் இதில் சாலை அமைத்துத் தருவது என்றும் எழுத்துப்பூர்வமாக மாவட்ட நிர்வாகம் உறுதியளித் துள்ளது.

கலசப்பாக்கம்

திருவண்ணாமலை கலசப்பாக் கம் அம்பேத்கர் நகர் பாதை அமைக் கும் நேரடி நடவடிக்கைக்கு அறை கூவல் விடப்பட்டிருந்தது. இந்தப் போராட்டத்தில் பங்கேற்க நூற்றுக் கணக்கான மக்கள் திரண்ட நிலை யில் உடனடியாக அந்தப் பாதையை அமைத்துத் தருவதாக மாவட்ட நிர்வாகம் உறுதிமொழி தந்தது. மேலும், பஞ்சமி நிலம் ஒன்று சம் பந்தமான பிரச்சனையிலும், அதைப் பெற்றுள்ள பயனாளிகள் நிலத்தை உடனடியாகப் பயன்படுத்திக் கொள்ள எந்தத்தடையும் இல்லை என்று மாவட்ட நிர்வாகம் அறி வித்தது.

நடுவேலம்பாளையம்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஒன்றியம் நடுவேலம்பாளையத்தில் 5.2 ஏக்கர் பஞ்சமி நிலம் சட்ட விரோதமாக தலித் அல்லாதவர்கள் கையில் உள்ளது. அந்த நிலத்தை வீட்டுமனைகளாக மாற்றி விற் பனை செய்வதற்கான வேலையும் நடந்து கொண்டிருந்தது. இதைத் தடுத்து அதை தலித் மக்களுக்கு பெற்றுத் தரும் வகையில் நேரடி நட வடிக்கைக்கு தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணி அழைப்பு விடுத்தது. நூற்றுக்கணக்கான மக்கள் போராட்டத்தில் பங்கேற்ற நிலையில் பேச்சுவார்த்தைக்கு மாவட்ட நிர்வாகம் முன்வந்தது. அந்த நிலம் விற்பனை செய்யப்படு வதற்கு தடை விதித்து, அதற்கான உத்தரவை துணைப் பதிவாளருக்கு உடனடியாக அனுப்ப ஒப்புக் கொண் டனர். மேலும் அக்டோபர் 3 ஆம் தேதியன்று பஞ்சமி நிலத்தை புதிய பயனாளிகளிடம் ஒப்படைப்பது பற்றிய பேச்சுவார்த்தைக்கூட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப் பட்டுள்ளது.

வாலாஜாபேட்டை

வேலூர் வாலாஜாபேட்டை படவேட்டம்மன் கோவிலை ஒட்டி தலித் மக்களுக்கான பாதையை மறித்து ஆதிக்க சக்திகளால் தீண் டாமைச்சுவர் கட்டப்பட்டு வந்தது. இதை நேரடி நடவடிக்கை மூலம் அகற்றுவது என்று தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணி விடுத்த அறைகூவலை ஏற்று ஏராளமான அளவில் மக்கள் திரண்டனர். பெரும் அளவில் மக்கள் திரள் வதைத் தடுக்க காவல்துறையின் அட்டூழியம் கட்டவிழ்த்து விடப்பட் டது. வரும் வழியிலேயே மக்க ளைக் கைது செய்வது, மிரட்டுவது போன்ற வேலைகள் நடந்தன. கைது நடவடிக்கைகளுக்குப் பிறகே ஆர்.டி.ஓ. நேரடியாக பேச்சு வார்த்தைக்கு முன்வந்தார். அக் டோபர் 10ஆம் தேதியன்று மாவட்ட வருவாய் அலுவலர்(டி.ஆர்.ஓ) முன் னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைக்கு முழுத்தீர்வு காண் பது என்று அப்போது முடிவு செய் யப்பட்டது. அதுவரையில், தீண்டா மைச் சுவரின் கட்டுமானப் பணியை மேற்கொண்டு தொடர அனுமதிக்கமாட்டோம் என்றும் ஆர்.டி.ஓ உறுதியளித்தார்.

கறம்பக்குடி

புதுக்கோட்டை மாவட்டம் கறம் பக்குடியில் 86 தலித் குடும்பங் களுக்கு நிலம் ஒதுக்கப்பட்டு பட்டா வும் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் அதைப் பயன்படுத்திக் கொள்ள அவர்கள் அனுமதிக்கப்படவில் லை. இந்நிலையில் நேரடி நட வடிக்கையாக அந்த நிலத்தில் குடி யேறுவது என்று முன்னணி சார் பில் அறிவிக்கப்பட்டு மக்கள் ஏராள மான அளவில் திரண்டனர். எழுச் சிகரமாக மக்கள் திரண்டதைக் கண்ட மாவட்ட நிர்வாகத்தின் தரப் பில் ஆர்.டி.ஓ பேச்சுவார்த்தைக்கு முன் வந்தார். பட்டாவின் நகலை மக்கள் காட்டியபோது, தள்ளிப் போடுவதற்கான உத்தியாக பட்டா வின் உண்மை நகல் இருந்தால் தான் நாங்கள் பேச முடியும் என்று இழுத்தடிக்கத் துவங்கினர். துரித மாகச் செயல்பட்ட சிலர் ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே பட்டாவின் உண்மை நகல்களோடு வந்ததால் அதிகாரிகள் திகைத்துப் போயினர். அந்த இடத்தை சென்று பார்வை யிட்ட பிறகே முடிவு செய்வோம் என்று அதிகாரிகள் கூறியபோது, மக்களும் சளைக்காமல், பரவா யில்லை; நாங்கள் இங்கேயே காத் திருக்கிறோம் என்று கூறினர். ஆனால் போராடும் மக்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இத னால் போராட்டம் தீவிரமடையும் நிலை உள்ளது. 

மரியநாதபுரம்

திண்டுக்கல் மரியநாதபுரத்தில் பிரதான சாலையை அடைய தலித் மக்கள் பயன்படுத்தும் பாதை மறிக் கப்பட்டு சுவர் கட்டப்பட்டிருந்தது. இதை நேரடி நடவடிக்கை மூலம் அகற்ற தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அழைப்பு விடுத் தது. இதை அறிவிக்கும் வகையில் ஏற்கனவே அந்த சுவரைப் பார்வை யிட்டிருந்த முன்னணியின் மாநி லத் தலைவர் பி.சம்பத் பங்கேற்கும் பத்திரிகையாளர் சந்திப்புக்கு செப் டம்பர் 12 அன்று ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. இந்நிலையில் அச் சுவரை எழுப்பியிருந்த சௌந்தர ராஜா மில் நிர்வாகம், அந்தச்சுவரை அப்புறப்படுத்திக் கொள்ளலாம் என்று திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் கே.பாலபாரதியிடம் ஒப்பு தல் கடிதம் தந்தது. இதைத் தொடர்ந்து அன்றைய தினமே மக்கள் திரண்டெழுந்து அந்தச் சுவரை அப்புறப்படுத்தினர். 

கடந்த சட்டமன்றக்கூட்டத் தொடரில், தமிழகத்தில் தீண் டாமைக் கொடுமையே இல்லை என்று சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்த அமைச்சர்களுக்கு, அவர்கள் சொன்னது மகா பொய் என்பதைத் தான் இந்தப் போராட்டங்களும், வெற்றிகளும் காட்டுகின்றன. இன் னும் ஏராளமான கொடுமைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் இத்தகைய கொடுமை களை முழுவதுமாக ஒழித்துக்கட்ட ஜனநாயக சக்திகளை இணைத் துக் கொண்டு தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணி தொடர்ந்து போராடும்.

இந்தப் போராட்டங் களில் எழுச்சியோடு பங்கேற்ற பல்லாயிரக்கணக்கான தலித் மக்க ளுக்கும், தலித் மக்களின்  உரிமையை நிலைநாட்ட களத்தில் இறங்கிப் போராடிய தலித் அல்லாத இதர பகுதி உழைப்பாளி மக்களுக்கும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, ஆதித்தமிழர் பேரவை, ஆதித்தமிழர் விடுதலை முன்னணி, பகுஜன் சமாஜ் கட்சி, பல்வேறு வர்க்க, வெகுஜன அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளுக்கும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன் னணி பாராட்டுக்களையும், வாழ்த் துக்களையும் தெரிவித்துக் கொள் கிறது.

கே.சம்பத் & கே.சாமுவேல்ராஜ் 

தோழர் பி.வி.நந்தகுமார் பாராட்டு விழா

DSC09946.JPG

 நிறைவு அடைந்த அலுவலகப் பணி ...

விரிந்த தளத்தில் தொடரும் பணி ...


பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் (தெ .ம ) தலைவர் தோழர் பி.வி. நந்தகுமார்
30 .09.2012 அன்று யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி பணியில் இருந்து ஒய்வு பெற்றுள்ளார்.அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தை பொது இன்சூரன்ஸ் துறையில் வளர்த்தெடுப்பதில் அவர் ஆற்றியுள்ள பணி அளப்பரியதாகும். எளிமையான, எவரும் எளிதில் நெருங்கக் கூடிய, நெருக்கடி காலங்களில் சற்றும் தளராது தொழிற்சங்கப் பணி ஆற்றி வந்துள்ள தலைவர்.
தினக் கூலி ஊழியர்களை நிரந்தரப் பணி அமர்த்துகிற போராட்டத்தின் தளபதிகளில் ஒருவராக இருந்து வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை ஈட்டியவர்.

செப் 29 அன்று சென்னையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் கே.வேணுகோபால் பங்கேற்று பாராட்டினார்.தோழர் உ.வாசுகி (சி.பி.எம் மத்தியக் குழு உறுப்பினர்) தோழர் ஜே.குருமூர்த்தி (நிலைக்குழு செயலாளர் - பொது இன்சூரன்ஸ் - AIIEA ) தோழர் பீமாராவ் எம்.எல்.ஏ, தோழர் அப்பனு (சி.ஐ.டி.யு ) திருமிகு ஜெயமூர்த்தி (எஸ்.சி,எஸ்,டி  ஊழியர் சங்கம்) தோழர் கோபால் (பெபி ) தோழர் கே.சுவாமிநாதன் (SZIEF) தோழர் எஸ்.ரமேஷ் குமார் (ICEU- சென்னை 1 ) தோழர் மனோகரன் (ICEU- சென்னை 2) உள்ளிட்ட தலைவர்கள் உரையாற்றினர். தோழர் ஆனந்த் தலைமை தாங்கினார்.

எதிர் காலத்தில் அமைப்பு சாராத் தொழிலாளர்களை திரட்டுவதில் தோழர் பி.வி.நந்தகுமார் ஈடுபட இசைவு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.