Sunday, November 11, 2012

AIIEA units of TAMILNADU & KERALA in the villages of DHARMAPURI district- Rs 170000 worth relief to SC victims whose houses were ransacked by caste hindus

தருமபுரி : பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு இன்சூரன்ஸ் ஊழியர்கள் நிவாரணம் - ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை வழங்கினர்- தீக்கதிர் , 11. 11. 2012
தருமபுரி, நவ.10-

தருமபுரியில் ஆதிக்க சாதியின ரின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு அகில இந்திய இன் சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் சார்பில் 1 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப் புள்ள அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன.

தருமபுரி மாவட்டத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த தலித் மக்கள் மீதான தாக்குதலில் நத்தம், அண்ணா நகர், கொண்டம்பட்டி ஆகிய மூன்று பகுதிகள் கடுமை யான பாதிப்புக்கு உள்ளாகின. ஏரா ளமான வீடுகள் தீக்கிரையாகின. நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வீடுகளில் இருந்து வெளியேறினர்.

இந்நிலையில் அடிப்படை தேவைகள் அனைத்தையும் இழந்து நிற்கும் பாதிக்கப்பட்ட தலித் மக்க ளுக்கு அத்தியாவசியப் பொருட் களை வழங்க அகில இந்திய இன் சூரன்ஸ் ஊழியர் சங்கம் முடிவு செய் தது. தமிழகத்தில் உள்ள சென்னை ஐ, சென்னை ஐஐ, வேலூர், சேலம், கோயம்புத்தூர், தஞ்சாவூர், மதுரை, திருநெல்வேலி ஆகிய எட்டு கோட் டங்கள் மற்றும் கேரளாவின் எர் ணாகுளம், கோழிக்கோடு, திருச்சூர், திருவனந்தபுரம், கோட்டயம் ஆகிய 5 கோட்டங்களை சேர்ந்த ஆயுள் காப்பீட்டுக் கழக(எல்.ஐ.சி) ஊழியர் கள் மற்றும் பொது இன்சூரன்ஸ் துறையின் சென்னை, கோவை மற் றும் மதுரை ஆகிய மண்டலங்களை சேர்ந்த ஊழியர்கள் இணைந்து 1 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப் பிலான உதவி பொருட்களை வழங்கி யுள்ளனர்.

நவம்பர் 10 அன்று காலையில் நத்தம், அண்ணா நகர், கொண்டம் பட்டி ஆகிய மூன்று பகுதி மக்களை யும் சந்தித்து பாய், போர்வை மற்றும் மளிகைப் பொருட்களை இன்சூ ரன்ஸ் ஊழியர்கள் வழங்கினர். தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட் டமைப்பின் துணைத் தலைவர் ஆர். தர்மலிங்கம், சேலம் காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க கோட்டத் தலை வர் ஏ.கலியபெருமாள், பொதுச் செய லாளர் ஆர். நரசிம்மன், துணைத் தலைவர்கள் ஜி.வெங்கடேசன், ஏ. குமரேசன், லட்சுமி சிதம்பரம், இணைச்செயலாளர் மாதேஸ்வரன் மற்றும் தருமபுரி கிளை சங்க நிர் வாகிகள் காரமல், அருண்குமார், மகேந்திரன், வேடியப்பன் ஆகியோர் பொருட்களை வழங்கினர். பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் சார்பில் கோவை மண்டல துணைத் தலைவர்கள் சக்கரவர்த்தி, பி.குரு சாமி, சேலம்-நாமக்கல் மாவட்ட செயலாளர் கருப்பையா மற்றும் மாவட்ட தலைவர் பத்மநாபன் ஆகியோர் சென்றிருந்தனர்.

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் பி.சம்பத், பொதுச் செயலாளர் கே. சாமுவேல்ராஜ், சிபிஎம் சட்ட மன்ற உறுப்பினர்கள் கே.பாலகிருஷ்ணன், டில்லிபாபு, பீம் ராவ், மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் மற் றும் சிபிஎம் தருமபுரி மாவட்ட செயலாளர் மாரிமுத்து ஆகியோர் பங்கேற்றனர்.

இது முதல் கட்ட நிவாரணம் தான். அடுத்த வாரத்தில் அடுத்தகட்ட நிவாரணம் வழங்கப்படும் என்றும், பாதிக்கப்பட்ட மக்களோடு இன் சூரன்ஸ் ஊழியர்கள் இணைந்து நிற்பார்கள் என்றும் சங்க தலைவர் கள் குறிப்பிட்டனர்.

No comments:

Post a Comment