Tuesday, November 5, 2013

தங்கராஜ்: சமகாலத்து சமூகநீதிப் போராளி

சு. வெங்கடேசன்

தங்கராஜ்
தங்கராஜ்
இதை எழுதவா நான் எழுத்தைப் பயின்றேன் என்று மனம் விம்முகிறது. ஆனால் இதை எழுதாமல் எழுத்தைப் பயின்று என்ன பயன் என்று அறிவு வலியுறுத்துகிறது.
தீமைகளைக் கண்டு வாழ்வு பணிந்து விடுவதில்லை, எல்லாக் காலங்களிலும் அதனை எதிர்ப்பதற்கான சக்தியை மனிதன் தனது வாழ்வுக்குள் இருந்துதான் கண்டறிந்து கொடுக்கிறான். ஆனால் எல்லோரும் கண்டறிந்து கொடுத்துவிடுவதில்லை. ஒருசிலர் மட்டுமே அதனைச் செய்கின்றனர். அதைச் செய்த ஒருவர் அக்டோபர் 29-ம் தேதி மதுரை அருகே நடந்த சாலை விபத்தில் அகால மரணமடைந்தார்.

ஜனநாயக மாண்புகளைப் பாது காக்கும் பெரும் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்ட தங்கராஜ், அதன் பொருட்டு அவர் சந்தித்த இன்னல்கள், அவமானங்கள், இழப்புகள் எண்ணற்றவை. மதுரை மாவட்டத்தில் நத்தப்பட்டி என்ற சிற்றூரில் சிறிய விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் தங்கராஜ். குடும்பச் சூழல் எட்டாம் வகுப்போடு அவரது பள்ளிக் கல்வியை முடிவுக்குக் கொண்டுவந்தது. இளம் வயது முதலே மார்க்சிஸ்ட் கட்சியோடு தன்னை இணைத்துக்கொண்டவர்.

1996-ம் ஆண்டு உள்ளாட்சிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டபோது ஊடகங்களில் அடிபடத் தொடங்கிய கிராமப் பெயர்கள் பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம். இம்மூன்று கிராமங்களிலும் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பஞ்சாயத்துத் தலைவர் பதவி தலித் மக்களுக்கு ஒதுக்கப்பட்டது. இந்த ஒதுக்கீட்டை ஏற்கமுடியாது என எதிர்ப்புத் தெரிவித்த சாதிய சக்திகள் பத்து ஆண்டுகள் தலித் மக்களை அப்பதவியில் அமரவிடாமல் செய்தனர். தீண்டாமையின் புதிய வடிவம் ஒன்றை உலகுக்குப் பறைசாற்றினர்.

17 முறை தேர்தல் அறிவிக்கப்பட்டு, நடத்தப்பட்டும் அரசியல் சாசனம் கூறும் இடஒதுக்கீட்டை அமல்படுத்த முடியவில்லை. சட்டம் சாதியத்துக்குக் கீழ்ப்படிந்த நிலை கண்டும் ஆள்வோருக்குக் கோபம் வரவில்லை. தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான தேசிய ஆணையத்தின் கண்டனத்தைச் சந்தித்த பின்பும் மாநில அரசு தனது நிலைகளில் மாற்றம் கொண்டுவரவில்லை. இந்நிலை யில் இதனை ஜனநாயக சமூகத்தின் அவமானமாகக் கருதி, இதற்கு எதிராகத் தொடர்ந்து இயங்கியவர்கள் விடுதலை சிறுத்தைகள் இயக்கமும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும்தான்.

விடுதலைச் சிறுத்தைகள் இத்தேர்தல்க ளில் ஐந்து முறை வேட்பாளர்களை நிறுத்தினர். கிராம முடிவுக்கு எதிராக யாரும் போட்டியிட முடியாது என்ற நிலையை அவர்கள்தான் முதலில் உடைத்தனர். அதுவரை தேர்தலே நடத்த முடியாத நிலையை உருவாக்கியிருந்த சாதிய சக்திகள், அதன் பின் தேர்தலை நடத்தி, வெற்றி பெறுபவரை ராஜிநாமா செய்யவைக்கும் புதிய உத்தியைக் கண்டுபிடித்தனர்.

இப்புதிய உத்தியை முறிக்கும் தந்திரத் தோடு, இந்த ஜனநாயகப் போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றது மார்க்சிஸ்ட் கட்சி. 2006-ம் ஆண்டில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின்போது இம்மூன்று கிராமங்களிலும் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்டவர்களின் எண்ணிக்கை 56. இதில் கிராமத்தின் சார்பில் நிறுத்தப்பட்டவர்கள் 20 பேர். மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்டவர்கள் 20 பேர். மாவட்ட நிர்வாகத்தின் பிரச்சாரத்தால் உந்தப்பட்டு சுயேச்சையாகப் போட்டி யிட்டவர்கள் 16 பேர். இத்தேர்தலே பத்தாண்டுக் கால அநீதியை முடிவுக்குக் கொண்டுவந்தது.

கொள்கையில் உறுதி

பத்தாண்டுகளாக யாராலும் என்ன செய்தும் நடைமுறைப்படுத்த முடியாத ஒன்று எப்படி 2006-ல் முடிவுக்கு வந்தது? அதன் பிறகும் அவர்களைப் பின்னுக்கு போகவிடாமல் நிறுத்திவைத்தது எது என்றெல்லாம் கேள்வி எழுப்பினால் இம்முயற்சிக்குப் பின்னால் இருந்த பலரின் உழைப்பும், உறுதிப்பாடும், தியாகமும் தெரியவரும். அவற்றின் முதன்மை நாயகன் தங்கராஜ். தனது சொந்த சாதிக்கு எதிராக, உறவுகளுக்கு எதிராக அவர் நடத்திய போராட்டம் வீரம் மிக்கது. அதன் பொருட்டு அவர் சந்தித்த இன்னல்கள், அவமானங்கள் ஒருபோதும் அவர் வாய் திறந்து பேசாதது. தான் தேர்வு செய்த கொள்கைக்குத் தான் கொடுக்கவேண்டிய விலை இது என்ற புரிதலோடு அவர் வாழ்வை முன்னெடுத்தார். சாதியத்தைப் பற்றியும், உழைக்கும் மக்களின் ஒற்றுமையைப் பற்றியும் அவர் கொண்டிருந்த புரிதலே இச்செயல்பாட்டின் அடிப்படை.

சாதிய சக்திகளுக்கும், மக்களுக்கும் இடையில் ஒரு பிளவை உருவாக்குவதில் அவர் ஆற்றிய தீரமிகு பங்கே தேசிய அவமானத்தில் இருந்து தமிழகம் தன்னை மீட்டெடுத்துக்கொள்வதற்கு அடிப்படையாக அமைந்தது.

தகர்ந்த தீண்டாமைச் சுவர்

இதனைத் தொடர்ந்து 2008-ம் ஆண்டு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்திய கள ஆய்வின் வழியே வெளி உலகின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது உத்தப்புரம் தீண்டாமைச் சுவர். அதன்பின் ஆண்டுக்கணக்காக நீடித்தது அந்தச் சுவருக்கு எதிரான போராட்டம். காவல்துறையின் தடியடி, கண்ணீர்ப் புகை வீச்சு, துப்பாக்கிச் சூடு, மரணம் என நீடித்தன நிகழ்வுகள். இப்போரட்டங்களில் எல்லாம் உத்தப்புரம் தலித் மக்களோடு இணைந்து சோர்வறியாது இயங்கியவர் தங்கராஜ்.

சமநிலைச் சமூகத்தை உருவாக்கும் பயணத்தில், தீமையுடன் சமரசம் செய்தல் பண்பாகாது என்று தங்களின் வாழ்வின் மூலம் சொல்லிச் சென்ற முன்னோர்கள் பலர். அவ்வழியே பயணித்த நிகழ்கால சாட்சியம்தான் தங்கராஜ். பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் பிறந்து, தலித் மக்களின் விடுதலைக்காக அயராது உழைத்து, தென்தமிழகம் எங்கும் செயல்பாட்டை விரித்ததன் மூலம். தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலச் செயலாளரானார்.

தனது 49-வது வயதில் இயக்கப் பணியாற்றிவிட்டுத் திரும்பும் வழியில் ஏற்பட்ட விபத்தில் அவர் மரணமடைய நேரிட்டது. தமிழ்ச்செல்வி தனது கணவனையும், அனாமிகாவும், அனுசீலனும் தனது தந்தையையும் இழந்து தவிக்கிறார்கள். இச்சமூகமும் சமநீதிக்கான போராளியை இழந்து தவிக்கிறது.

தங்கராஜின் வாழ்வு மொத்த சமூகத்துக்கான முன்னுதாரணங்களால் அலங்கரிக்கப்பட்டது. நுகர்வு கலாச்சாரத்தின் பிடியில் மனிதக் கூட்டம் சிக்கியிருக்கும் இக்காலத்தில் ஒருவர் சமூக மேன்மைக்காகத் தன்னை எப்படி ஒப்புக்கொடுத்துள்ளார் என்பதைப் பார்க்கும்போது மனம் பணிந்து வணங்குகிறது.

(கட்டுரையாசிரியர் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்)

நன்றி - தி இந்து (தமிழ்) 05.11.2013

Monday, September 9, 2013

ஆயிரம் பகிர்வுகள்- அபார சாதனை



இணைய தளம்- ப்ளாக்- பேஸ் புக் போன்றவற்றை உழைப்பாளி மக்களின் இயக்கங்கள் சரியாகப் பயன்படுத்தவில்லை என்ற வருத்தம் பொதுவாக உள்ளது. வருந்துகிற அளவிற்கு முன்முயற்சிகள் இருப்பதில்லை என்பதும் நடுத்தர வர்க்கத்தின் பலவீனம். ஒரு சில விதிவிலக்குகள்தான் நம்பிக்கைகளை உயிர்ப்பிக்கின்றன. 

ஒருசிலர் இப்படி உள்ளே போகிறவர்களும் பொழுதுபோக்கு, விசாரிப்புகள், ஏதோ எழுதப்படாத ஒப்பந்தம் போல ஒருவரையொருவர் பாராட்டிக் கொள்வது என்று சுருங்கிப் போகிறார்கள். அரசியல்-சமுகம்-பண்பாடு சார்ந்த விவாதங்களில் பங்கேற்பதில்லை.

ஆனால் பிற்போக்காளர்கள் மிக நேர்த்தியாக இவ்வசதிகளை கையாள்கிறார்கள். அவர்களே ப்ளாக் நடத்துவது போன்று மற்றவர்களின் தளங்களிலும்  பின்னூட்டம் என்ற பெயரில் தங்களின் அரசியலை, கருத்துக்களை பதிவு செய்வதை முறைப்படுத்தி செய்கிறார்கள். பிரதம வேட்பாளராக மோடி முன்நிறுத்தப்பட சமுக வலைத் தளங்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதைக் காண முடியும். 

நமது தலையீடு தேவைப்படுகிறது என்பதற்கு இவ்வளவு ஆதாரங்கள் இருந்தபோதிலும் நாம் பேசுவதோடும் , வருந்துவதோடும் நின்று விட முடியுமா!

இதோ ஓர் எடுத்துக்காட்டு. வேலூர் கோட்ட காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.ராமன் "ஒரு ஊழியனின் குரல்" என்ற ப்ளாக் ஐ நடத்தி வருபவர். 2009 லிருந்து பதிவுகளை இட்டு வருபவர். எது எது பரபரப்பாக பொதுவெளியில் பேசப்படுகிறதோ அதைபற்றிய பதிவு ராமனின் வலைத் தளத்தில் விடுபடாது. அவரின் எழுத்தாற்றலும் அவரின் பக்கங்களை நோக்கி பலரை இழுத்தது. ஏதாவது சங்கத்தின் பெரும் நிகழ்வுகள் பற்றிய புகைப்படங்கள் வேண்டுமெனில் அவரது ப்ளாக் உடனே கைகொடுக்கும்.அரிய  செய்திகளை, வரலாற்றில் நினைவுகூரத் தக்க உரைகளை, எதிர்கால வரலாற்றிற்கான பதிவுகளை நேர்த்தியாக தனது ப்ளாக்கில் தொகுத்துள்ளார்.
இதற்காக அவர் செலவிடும் நேரம், முயற்சி, உழைப்பு எவ்வளவு இருக்கும் என்பதை இதுபோன்ற பணிகளைச் செய்யும் நண்பர்களுக்கு தெரியும். அர்ப்பணிப்பு இல்லாவிடில் இத்தகைய தொடர் முனைப்பு சாத்தியமில்லை.

AIIEA ன் பெருமைகளில் ஒன்றாக ராமனின் பணியும் மலர்ந்துள்ளது என்ற ஒரு வரி பாராட்டை தவிர வேறு எப்படி நமது உணர்வுகளை பிரதிபலிக்க முடியும்!

நேற்று தனது 1000 வது பதிவை ப்ளாக் ல் இட்டுள்ளார். தோழர் ராமன் ! தொடரட்டும் உங்களின் பணி. இன்னும் பல பல்லாயிரங்களை நோக்கி...

 

Friday, August 30, 2013

வரலாற்றுத் தேரின் சாரதிகள்


பாரம்பரியத்தின் குறியீடாய் ஓர் அருமையான படம். 
நமது தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் 
32 வது மாநாட்டில் தோழர் என்.எம்.சுந்தரம்  உரையாற்றுகிறார்.


Wednesday, August 21, 2013

AIIEA IN PAPPANKULAM VILLAGE IN SUPPORT OF DALIT VICTIMS


    
At pappankulam village of Sivagangai district - Com G. Meenakshisundaram President, 
Com N. Sureshkumar, General secretary, ICEU, Madurai division with Com K. Samuelraj, geneal secretary, TNUEF. 

On the Independence day (15.08.2013)  22 houses of dalits were demolished  at Pappankulam village of Sivagangai  district (45 km from Madurai) by the authorities citing the reasons of encroachment. But dalit people alleged that the demolition was done at the instigation of Panchayat president with caste venom. According to dalit victims, Panchayat President developed antagonism towards dalits under the impression that they had not voted for him in local body elections. Dalit victims claim that they are having pattas for the houses and relevant documents also. Three houses were constructed under Indira Awas Yojana. ( Courtesy: THEEKATHIR- 21.08.2013).

The leaders of Madurai divisional unit & Madurai GI regional unit of ALL INDIA INSURANCE EMPLOYEES ASSOCIATION Com G Meenakshisundaram, President, ICEU, Madurai Division, Com S. Balasubramanian Joint secretary, GIEA-SZ, Com N. Sureshkumar, General secretary, ICEU, Madurai division, Com N.P.Rameshkannan, Joint secretary, Com S. Thanigairaj, Assistant Treasurer, and Com A. Govindarajan visited the village yesterday ( 20th August 2013) as a part of the fact finding team of the  Tamilnadu Untouchability Eradication Front (TNUEF) and documented house by house the losses suffered by the victims by staying in the village for whole day till late night. Lawyers from Madurai HC bench were also involved. The team led by Com K. Samuelraj, General secretary, TNUEF and Com K. Beemarao MLA, CPI-M assured the dalit victims that their issue would be taken up organisationally and legally by the TNUEF. The memorandum was submitted to the District Collector by the team along with the 100 victims. 

Today also (21.08.2013) our comrades of Sivaganga unit led by Com Bharathidasan Secretary, ICEU, Sivaganga branch unit assisted villagers for submitting representations. The authorities have assured to arrange the shelter for homeless children in the Government hostels and also relief materials to the victims.  Our comrades are determined to make follow up on daily basis.

Congratulations to ICEU, Madurai division for their committment and role in fighting the social oppression.




Demolished houses at Pappankulam



News published by Theekathir daily was given below- 

சிவகங்கை, ஆக. 20-சிவகங்கை தாலுகா பாப்பான்குளம் கிராமத்தில் ஆக்கிரமிப்பு என்ற பெயரில் தலித் மக்களுக்கு அரசு கட்டிக் கொடுத்த 5 வீடுகள் உள்ளிட்ட 22 வீடுகள் சுதந்திர தினத்தன்று இடித்து தரை மட்டமாக்கப்பட்டுள்ளன. வீடுகளை இழந்து தவிக்கும் தலித் மக்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரவாயல் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் க.பீமராவ், மாவட்டச் செயலாளர் ஏ.ஆர்.கே.மாணிக்கம், தீண் டாமை ஒழிப்பு முன்னணி மாநிலப் பொதுச்செயலாளர் கே.சாமுவேல் ராஜ், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் மு.கந்தசாமி, ஆர்.கே.தண்டியப்பன், மானா மதுரை ஒன்றியச் செயலாளர் எஸ்.முத்து ராமலிங்கபூபதி, நகரச் செயலாளர் சங்கர சுப்பிரமணியன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் கே.வீர பாண்டி, மானாமதுரை ஒன்றியச் செயலா ளர் வீரபாண்டி உள்ளிட்டோர் சந்தித்து நடைபெற்ற சம்பவங்கள் குறித்து கேட் டறிந்து இதன் மீது உரிய தலையீடு செய்வதாக உறுதியளித்தனர்.வீட்டை இழந்துள்ள மகாலிங்கம் கூறுகையில், எனது வீட்டிற்கு அரசு கொடுத்த வீட்டுமனைப்பட்டா உள்ளது. வீடு கட்டுவதற்கு அரசின் உத்தரவு உள்ளது. கட்டி முடித்த வீட்டில் இன்னும் குடி யேறவில்லை. கட்டிய வீட்டிற்கு இன்னும் அரசு ரூ.30 ஆயிரம் தரவேண்டியுள்ளது. இந்நிலையில் ஆக்கிரமிப்பு என்ற பெயரில் வீட்டை இடித்துவிட்டனர் என்றார்.கூலு என்பவர் கூறுகையில், அரசாங்க சர்வேயர் நில அளவை செய்தபோது, எங்களது பட்டா இடத்திற்குள் தான் வீடு கட்டப்பட்டுள்ளது எனக்கூறினார். ஆனால் வீட்டை இடித்துவிட்டனர் என்றார். பூபதி என்பவர் கூறுகையில், சாலைக் கென 20 அடி உள்ளது ஆனால் எனது வீடு ஆக்கிரமிப்பில் இருப்பதாகக் கூறி இடித்துவிட்டனர். தெருச்சாலை 20 அடி இருக்கும்போதே ஆக்கிரமிப்பு என்ற பெயரில் எனது வீட்டை முழுமையாக இடித்துவிட்டனர். வீட்டை இடித்ததால் கோயிலில் தடுப்பு போட்டு குடியிருக்கிறோம். எங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றார்.

க.பீமராவ் எம்எல்ஏ : சம்பவம் குறித்து சட்டமன்ற உறுப் பினர் பீமராவ் கூறுகையில், “தமிழக அரசுக்கு கெட்டபெயர் ஏற்படுத்த வேண் டும் என்ற நோக்கத்தோடு வருவாய்த் துறையும், காவல்துறையும், ஊராட்சி நிர்வாகமும் கூட்டாக செயல்பட்டு சட்ட விரோதமாக தலித் மக்களின் வீடுகளை இடித்திருக்கிறார்கள். பாப்பான்குளம் தலித் மக்கள் வீடுகளை இடித்தது தொடர் பாக சட்டமன்றத்தில் தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” என்றார்.

தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில பொதுச்செயலாளர் சாமுவேல்ராஜ் கூறுகையில், தலித் மக்கள் மீது நடை பெற்றுள்ள அக்கிரமத்திற்கு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க அரசை வலியுறுத்துவோம் என்றார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஏ.ஆர்.கே.மாணிக் கம் கூறுகையில், தலித் மக்களின் 22 குடியிருப்புகள் இடித்து தரைமட்டமாக் கப்பட்டிருப்பது வன்மையாகக் கண்டிக் கத்தக்கது. அரசு மானியத்தில் குழும வீடுகள் கட்டியிருந்த மகாலிங்கம், கூலு, வள்ளி, ராக்கு, சுப்பிரமணியன் ஆகியோரது வீடுகள் இடிக்கப்பட்டுள்ளது. அன்பழகன், பூமிநாதன், ராக்கு, முத்து, கருப்பையா, பிச்சை, முத்துச்சாமி, பூபதி, முருகன், பாலு ஆகியோரது வீடுகள் தரைமட்டமாக்கப் பட்டுள்ளது. சேது, சரவணன், தெய்வேந் திரன், தனுக்கோடி, துரைராஜ்செல்வி, ஆகியோர்களின் வீட்டு தாழ்வாரங்கள், கழிப்பறை இடிக்கப்பட்டுள்ளன.இடிக்கப்பட்ட அனைத்து வீடுகளை யும் அதே நிலையில் கட்டிக்கொடுக்க வேண்டும். மன உளைச்சலுக்குள்ளான தலித் மக்கள் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். தலித் மக்களின் வீடுகளை சட்டவிரோதமாக இடித்த வருவாய்த்துறை, ஊராட்சி நிர்வாகம், காவல்துறையினர் மீது வன் கொடுமை தடுப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றார்.

ஆட்சியருடன் சந்திப்பு : தொடர்ந்து ஆட்சியரைச் சந்தித்த இக்குழுவினர் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். இப்பிரச்சனையின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினர்.

குற்றவாளிகளை கைது செய்க: சிபிஎம்

தலித் மக்களின் வீடுகள் இடிக்கப்பட்டதைக் கண் டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா ளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது,சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஊராட்சி ஒன் றியம், சிறுகுடி ஊராட்சிக்குட்பட்ட பாப்பான்குளம் கிராமத் தில் சுமார் 100 தலித் குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். சிறுகுடி ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் தங்கராஜ். இப்பகுதி தலித் மக்கள் தங்களுக்கு வாக் களிக்கவில்லை எனக் கருதி தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார். தனக்கு வாக் களிக்காத தலித் மக்களை வஞ்சம் தீர்க்க வேண்டு மென்கிற வன்மத்தோ டும், வெறியோடும் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று, தங்கராஜ் ஜே.சி.பி. இயந்திரத்தின் மூலம் தலித் மக்களின் 28 வீடுகளை இடித்துத் தரை மட்டமாக்கியுள்ளார். இச்செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

இடிக்கப்பட்ட வீடுகள் அனைத்திற்கும் பட்டா, மின் இணைப்பு உள்பட அனைத்து அரசு ஆவணங்களும் உள்ளன. மூன்று வீடுகள் இந்திரா ஆவாஸ் யோஜனா திட் டத்தில் கட்டப்பட்டவை. காவல்துறை அராஜகம்தலித் மக்களின் வீடுகள் இடிக்கப்படும் போது, மானா மதுரை சரக காவல் துணை கண்காணிப்பாளர் வெள்ளத் துரை தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட காவல்துறை யினர் இருந்துள்ளனர். தட்டிக்கேட்ட கள்ளிவயல் கிராமத் தைச் சேர்ந்தசுந்தரபாண்டியனைக் காவல்துறையினர் தாக்கியதோடு, அவர் மீது பொய் வழக்குத் தொடுத்துள்ளனர். உள்ளாட்சி மன்றத் தேர்தல் குரோதத்துடனும் சாதி வெறியோடும் கூடிய இந்த கொடூரத் தாக்குதலில் சுமார் 1 கோடி ரூபாய் அளவிற்கு தலித் மக்களின் சொத்துக்கள் அழிக் கப்பட்டுள்ளன.சுதந்திர தினத்தன்று சா திய வன்மத்துடன் தலித் மக் களின் வீடுகளை இடித்த தங்கராஜ், பாதுகாப்பு வழங்கிய துணை கண்காணிப்பாளர் வெள்ளத் துரை மற்றும் குற்றவா ளிகள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி வழக்கு பதிவு செய்து கைது செய்திட வேண்டுமெனவும், பாதிக் கப்பட்ட தலித் மக்களுக்கு உரிய நிவார ணமும், இழப்பீடும் வழங்கிட வேண்டுமெனவும் தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

Friday, August 9, 2013



MASSIVE RALLY OF 32 nd CONFERENCE OF SZIEF -CHENNAI ON 3rd AUG 2013
Com Amanullakhan President of AIIEA leads the rally-
Com M. Kunhikrishnan President, SZIEF, Com K. Swaminathan General secretary, SZIEF, Com M. Girija, Com N. Anandaselvi, Com Baby joseph are in the picture 

WOMEN IN RALLY - 32 nd CONFERENCE OF SZIEF  CHENNAI -AUG 3 rd 2013
WOMEN COMRADES OF CHENNAI DIVISION 1 AND 2 PARTICIPATED IN LARGE NUMBER


RALLY AND OPEN SESSION - 32 nd CONFERENCE OF SZIEF-PARTICIPATION OF 4000 INSURANCE EMPLOYEES FROM VARIOUS PARTS OF TAMILNADU AND KERELA
Comrades of LICEU, Thrissur division in procession

Front view of the conference venue- Thangam palace in thandaiarpet, chennai

Overflowing sangamam of rallyists at Conference venue 


ICEU, Chennai 2 women choir group 


Children of AIIEA members of ICEU Chennai 2 performed Bharatham

Open session

Com Subashini ali Vice president- AIDWA- special address at session on gender issues

DYFI cadres greeted the rally 
4000 strong rally raising slogans concerning common man 

GLIMPSES OF MASSIVE RALLY IN CHENNAI- 32ND GENERAL CONFERENCE OF SZIEF

AUG 3-6, 2013- THANDAIARPET BUS STAND TO THANGAM PALACE.





                                                                       Com N Sankaraiah, Freedom fighter, Veteran communist leader inagurated the conference


                                                                       Com S Rajappa, Former President, SZIEF waving AIIEA flag marking the commencement of rally


 Host division, ICEU Chennai div 2 comrades led the rally in uniform with 32 flags of AIIEA


                                                 Sudar art troupe of ICEU Madurai div unit performed thappaattam in the rally

Tuesday, July 16, 2013

தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு- சென்னை 
32 வது மாநாடு- சென்னை * ஆகஸ்ட் 3 முதல் 6 வரை -2013

பிரச்சார இயக்கங்கள்-





Saturday, January 12, 2013

பொங்கல் வாழ்த்துக்கள்



இல்லங்களில் இனிமை பொங்கும்  வேளை 
காவிரிப் படுகை கவலை தீருமா நாளை?
களை பறித்து ஏரோட்டி காய்ந்த கைகள் 
பொங்குகிற நெல்மணிகளின் பருக்கைகள்  

மழைக்கு அஞ்சிய நகர வாழ்க்கை 
தேங்கிய நீரை பார்க்கிற அசூயை 
மழையை வரவேற்கும் கிராமப்பயிர்கள் 
அதுவன்றி உண்டோ மண்ணில்  உயிர்கள் 

மஞ்சக் கிழங்கு கழுத்தோடு பானை 
ஆறுகிற பசி ருசிக்கிற இனிமை
 மறவோமோ இரண்டு லட்சம் உயிர்கள் 
உலகமயப் பீடத்தின் பலிகள்  

வறண்டு வறண்டு போன  நதியாய்  
மானிய வெட்டாய்.. வாழ்வை பறிப்பதாய்..
ஈவிரக்கமற்ற அரசின் கொள்கைகள் 
ஒன்றாய் உயரவேண்டுமே நம் கைகள் 

பொங்கட்டும் நம்மில் ஒற்றுமை 
சாம்பலாகட்டும் சாதிய போகி 
உலகமய மஞ்சுவிரட்டில் கொம்புகள் 
வசமாகட்டும் நமது வலிய கரங்களில் 

க.சுவாமிநாதன்