Sunday, May 19, 2019

"என் காயம் பெரிதல்ல

*தோழர் சுனில் மொய்த்ரா மகன் கௌதம் மித்ரா மீது தாக்குதல்*
***********************************

*"என் காயம் பெரிதல்ல;
ஜனநாயகம் காய்ப்படாமல் காப்பாற்றப் பட வேண்டும்"* - கௌதம் மித்ரா
**********************************

*இது மேற்கு வங்கத்தில் ஜனநாயகம் படும் பாட்டிற்கு சாட்சியம்.*

*இன்று ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பாக  அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் முன்னணித் தலைவர் கௌதம் மித்ரா, அவரின் இணையர், மகன் வாக்களிக்க சென்றுள்ளனர். 15 திரிணாமுல் குண்டர்கள் தடுத்துள்ளனர். மீறி சென்ற போது கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர்.*



*கௌதம் மித்ரா இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர். அவர் நெஞ்சில் தாக்கியுள்ளார்கள். இடது கண்ணுக்கு கீழே காயம். இணையருக்கு கைகளில் அடி. காயம். மகனும் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.*

*அவர் முக நூலில் இதைப் பதிவு செய்துள்ளார். "எங்களுக்கு ஏற்பட்ட காயம் பெரிதல்ல; ஜனநாயகத்தை காயமின்றி காப்பாற்ற வேண்டும்" என்று அதில் குறிப்பிட்டுள்ளார்*.

*கௌதம் மித்ரா! உங்கள், இணையர், மகனின் தீரத்தை போற்றுகிறோம்! உடல் நலம் பெற விழைகிறோம்! ஜனநாயகம் காக்க கைகோர்ப்போம்! போராடுவோம்!*

Wednesday, May 8, 2019



*பெஃபி சுந்தரம் மறைந்தார்*

*செவ்வணக்கம் தோழரே!*

**************************************

*வங்கி ஊழியர் இயக்கத்தின் மிக முக்கியமான ஆளுமை தோழர் வி.சுந்தரம் இன்று மதுரையில் காலமாகி விட்டார்.*

*அவரது பொது வாழ்வின் துவக்கம் இராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்தது. எழில் என்ற அவரது புனைப் பெயர்தான் வங்கி அரங்கத்திற்கு வெளியே பிரபலமானது. நான் 1985 ல் இராமநாதபுரம் எல்.ஐ.சி யில் சேர்ந்தேன். அதே காலத்தில் அவர் மதுரையை நோக்கி நகர்ந்து விட்டார். அன்றைய முகவை~ சிவகங்கை மாவட்ட சி.பி.எம் மாவட்ட செயலாளர் அருமை தோழர் கருப்புராஜா என்னிடம் சொல்வார். " நடுத்தர வர்க்க தொழிற்சங்க ஊழியர்களுக்கு முன்னுதாரணம் தோழர் எழில்". அந்த அளவிற்கு சாதாரண மக்களோடு ஊடாடியவர். உரையாடியவர். அவர்களின் ஆசிரியராக திகழ்ந்தவர். பொதுவுடைமை, முற்போக்கு அமைப்புகளோடு இணைந்து அவர் ஆற்றிய பங்கை பலரும் என்னோடு பேசினார்கள். அவரை பார்க்காமலே அவரைப் பற்றிய சித்திரம் எனது மனதில் குடி கொண்டது.*

*ஆனால் அவரை முதலில் நான் பார்த்தது வங்கி தொழிற்சங்க தலைவராகவே.* *அவரை ஓர் கலந்துரையாடலுக்காக*
*இராமநாதபுரம் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் சார்பில் அழைத்திருந்தோம். அதில் அவருக்கு அளிக்கப்படட தலைப்பு "ஊதியக் கட்டமைப்பின் அடிப்படை கணக்கீடுகள்" என்பதாகும். Merger, Revision element, Neutralization... இப்படி பல வார்த்தைகளுக்கான பொருளை எளிமையான கணக்கீடுகள் மூலமாக அந்த சந்திப்பில் பகிர்ந்து கொண்டார். பஞ்சப்படி ஈட்டிற்கான சதவீதம் அடிப்படை ஊதிய நிர்ணயத்திக்கேற்றாற் போல் எப்படி மாற்றி அமைக்கப்படும் என்று விளக்கினார். இன்று வரையிலும் ஓர் ஊதிய உயர்வு உடன் பாட்டை அணுகும் போது 1988 ன் அந்த சந்திப்பு மனதில் வந்து நிற்கும். என் நினைவில் அந்த சந்திப்பில் திருச்சி ஜெயசீலன் ( எல்.ஐ.சி), எழுத்தாளர் சி.சுப்பாராவ் (மதுரை) ஆகியோர் இருந்தனர். இத் தோழர்களும் அச் சந்திப்பை அடிக்கடி நினைவு கூறுவார்கள். ஒரு கூட்டம், ஒரு சந்திப்பு எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்த இயலுமென்பதற்கு அவரின் ஆழமான அறிவாற்றலே காரணம்.*

*நான் மதுரைக்கு 1989 ல் மாற்றலாகி வருகிறேன். அதற்குப் பின்னரே அவரோடு நெருக்கமான தொடர்பு. என்ன அற்புதமான மனிதர்! தன்னுணர்வு மேலோங்காமல் பொது வாழ்வின் இலக்கணத்திற்கு உட்பட்டு வாழ்க்கையை நடத்திய பண்பு. அவரிடம் பழகுவதே பயிற்சி.*

*மதுரை இன்சூரன்ஸ் தோழர்களோடு அவரது நெருக்கம் அதிகம். 1990 களில் மதுரை செல்லூர் ஆர்.எஸ்.நாயுடு தெருவில் இன்சூரன்ஸ் சங்க அலுவலகம். அங்கு ஐந்து, ஆறு முன்னணி தோழர்கள் அமர்ந்து வாரம் தோறும் ஏதாவது தலைப்பில் விவாதிப்போம். தோழர்கள் சிவசுப்ரமணியம், பவள வண்ணன், பால் டேவிட் ஆகியோர் அமர்வோம். தோழர் சுந்தரம் நெறியாளராக வந்து வழிகாட்டியுள்ளார். 179, வடக்கு வெளி வீதியில் பொது இன்சூரன்ஸ் அலுவலக தொழிற்சங்க பயிலரங்குகளில் பங்கேற்று வழிகாட்டியுள்ளார். நிதானமான, ஆரவாரமில்லாத ஆனால் மிக ஆழமான கருத்துக்கள் என்னைப் போன்ற பலரை முன்னணி ஊழியர்களாக வார்த்தெடுக்க உதவியது.*

*சுந்தரம் என்கிற பறவை புதிய உயரங்களை தொட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை புற நகர் மாவட்டக் குழு செயலாளராக உயர்ந்தார். "பெஃபி" என்கிற அடையாளம் இன்று வரை அவருக்கு உண்டு. ஆனாலும் அவர் அந்த வரையறைகளை மீறிய தலைவராக மலர்ந்து விட்டார். இது பெஃபிக்கும் பெருமையே.* 

*உத்தப்புரம் தீண்டாமை சுவர் குறித்த கள ஆய்வு அறிக்கையின் முதல் நகலை சி.பி.எம் மாவட்ட செயலாளர் என்ற முறையில் அவர்தான் பார்த்தார். சுவர் பற்றிய குறிப்பை பார்த்ததும் அதிர்ந்து போனார். உடனே அந்த பகுதி தோழர்களிடம் தொடர்பு கொண்டு பேசினார். அச் செய்தி உறுதி செய்யப்பட்டவுடன் அவர் முகத்தில் தெரிந்த வேதனை இன்னும் என் கண்களில் நிற்கிறது. அது போன்று அவர் உணர்வுகளை முகத்தில் வெளிப்படுத்திய சூழ்நிலைமைகள் மிக அரிது.*

*மதுரை தீண்டாமைக் கள ஆய்வு அறிக்கையை மாவட்ட ஆட்சியர் ஜவஹர் அவர்களிடம் இரவு 11 மணி வாக்கில் தோழர்கள் பி.சம்பத்,  பி.மோகன் எம்.பி, வி சுந்தரம் அவர்களோடு இணைந்து நானும் சேர்ந்து அளித்தோம். அப் பிரச்சினையில் அவரது தலையீடும், வழிகாட்டலும் உத்தப்புரத்தை உலகறிய செய்ததில் உண்டு.  இதில் அவரது பங்கு அதிகம் பேசப்படாதது. அவர் தன்னை வெளிப்படுத்தாமல் கூட்டு செயல்பாட்டில் கரைந்து விடுவதற்கு சாட்சியம் அது.*

*தேர்தல் நேரங்களில் சவால்கள் நிறைந்த சூழல்களை அவர் எதிர்கொண்டிருக்கிறார். ஓர் நடுத்தர வர்க்க பின் புலத்தைக் கடந்த உறுதியை நான் கண்டிருக்கிறேன்.*

*உடல் நிலை பாதிக்கப்பட்ட பின்னரும் அவர் பொது வாழ்வு தொடர்ந்தது. தீக்கதிரில் பணியாற்றினார். எங்கள் சந்திப்பு குறைந்தாலும் பார்க்கிற இடங்களில் பாசத்தை பொழிவார். முகத்தில், பாவத்தில், உடல் மொழியில் வெளிப்படுத்தாமல் அவரின் நெருக்கத்தை எப்படி உணரச் செய்கிறார் என்பது இன்னும் எனக்கு புரியாத புதிர். தல்லாகுளத்தில் குடியிருந்த போதும், தேனி சாலைக்கு அருகில் வந்த பிறகும் அவரது இல்லத்திற்கு சென்றுள்ளேன். எளிமையான வாழ்க்கை அது*

*தோழர் சு.வெங்கடேசன் தனது படைப்பு ஒன்றை அவருக்கு சமர்ப்பணம் செய்திருந்ததை கண்ட போது நெகிழ்ந்து போனேன்.*

*இப்படி பல பேரின் அன்பை பெற்றவர். மரியாதைக்குரியவர். அவர் எத்தனையோ சிறப்பான வகுப்புகளை எடுத்திருக்கிறார். எல்லாவற்றிலும் சிறப்பான வகுப்பு அவர் வாழ்ந்து காட்டியதுதான்.*

*செவ்வணக்கம் தோழர் சுந்தரம்.*

Monday, March 9, 2015

புதிய தலைமுறை



அந்நிய நேரடி முதலீட்டு மசோதாவுக்கு எதிர்ப்பு: எல்.ஐ.சி ஊழியர்கள் வேலை நிறுத்தம்
 
பதிவு செய்த நாள் - மார்ச் 09, 2015, 6:52:27 PM
மாற்றம் செய்த நாள் - மார்ச் 09, 2015, 6:52:27 PM
காப்பீட்டுத்துறையில் அந்நிய நேரடி முதலீட்டு உச்சவரம்பு உயர்த்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் எல்ஐசி ஊழியர்கள் ஆங்காங்கே வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக மதுரை எல்.ஐ.சி அலுவலகம் முன்பாக கூடிய ஊழியர்கள் மத்திய அரசு கொண்டுவந்துள்ள மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர். அங்கு செய்தியாளர்களை சந்தித்த எல்.ஐ.சி ஊழியர் சங்க கோட்டத்தலைவர் மீனாட்சி சுந்தரம் இது தேச விரோத மசோதா எனக்கூறினார்.

மேலும் மக்களின் சேமிப்புக்கு பாதிப்பை உண்டாக்கும் எனக் கூறிய அவர் மக்கள் ஆதரவோடு மசோதாவை தடுப்போம் எனவும் கூறினார்.

இதே போன்று தஞ்சை கோட்ட எல்ஐசி அலுவலகம் முன் மத்திய அரசை கண்டித்து சுமார் 800 ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை அண்ணாசாலை முன்பாக நடைபெற்ற போராட்டத்தில் எல்.ஐ.சி தொடர்பாக மத்திய அரசு கொண்டுவந்துள்ள மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

கோவையில் நடைபெற்ற போராட்டத்தில் நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட 4 மாவட்டங்களை சேர்ந்த எல்.ஐ.சி ஊழியர்கள் பங்கேற்று மத்திய அரசு கொண்டுவந்துள்ள மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

Tuesday, January 27, 2015

AIIEA's Senior Leader Com R Govindarajan - 80th birthday on 25th Jan 2015

   

அன்புகெழுமிய ஆர்.ஜி அவர்களே!

80 வயது...
எண்ண முடிவது
ஆண்டுகளைத்தான்..

ஆர்.ஜி கடந்த தூரங்கள்

கால்பட்ட ஊர்கள்
பேசிய கூட்டங்கள்
வெளிப்பட்ட வார்த்தைகள்...
இவற்றையெல்லாம்
எப்படி எண்ணுவது?
இந்தியா முழுவதும் ஒலித்த குரல்..
பொருள் அல்ல வாழ்வின் இலக்கு
வாழ்வதில் பொருள் இருப்பதே சிறப்பு
யாதும் ஊரே.. யாவரும் கேளிர்..
இப்படி நகர்ந்த பயணம் அது!
தஞ்சையில் இருந்து சென்னைக்கு
அவரின் குடிபெயர்வு
ஈர்த்தது இயக்கமே.. இயக்கத்திற்காகவே...
உலகமயம் தேசியம் மதம் சாதி
எல்லாப் பொருளிலும்
இருளைக் கிழிக்கிற விளக்காய்
ஆர்.ஜியின் வகுப்புகள்
செதுக்கிய சொற்கள்
எண்ணற்ற தீபங்களை
ஏற்றிய சுடராய்
வாசிப்பின் அடையாளம்
மொழி ஆளுமைக்கு உதாரணம்
கம்பனில் துவங்கி
புதுக்கவிதைகள் தொடர்ந்து
காசு...துட்டு... மனி மனி... வரை
எடுத்துக் கையாளும் லாவகம்
பகிர்வதில் கிட்டும் பரவசம்
தொடர்கிறது அவரின் பயணங்கள்
இடதுசாரி பாதையில்..
ஆண்டுகளில் இல்லை வயது
அனுபவங்களின் திரட்சியில்
நூறைக் கடந்தவர்..
பொது வாழ்வுக்கான உறுதியில்
இன்னும் இருபது..
ஆர்.ஜி
உங்களின் விரல்கள் போதாது
பற்றி நடக்க பல பேர் இருப்பதால்..
இதுவே வாழ்வின் பொருள்
நீங்கள் ஈட்டிய செல்வம்

Saturday, January 17, 2015

மீண்டும் தூத்துக்குடி முன்னுதாரணமாய் ...


திருவள்ளுவர் தினத்தில் 133 அடி நீள பேனரில் 5000 பொது மக்கள் கையெழுத்து ...

வ.உ.சி பிறந்தநாள் அன்று (செப்டம்பர் 5) அன்னியமுதலீட்டிற்கு எதிராக நகர வர்த்தகர்கள், சகோதர அமைப்புகளுடன் இணைந்து உண்ணாவிரதப் போராட்டத்தை தூத்துக்குடி காப்பீட்டுக் கழக சங்கம் நடத்தியது. சுதேசிக் கப்பலை ஒட்டி ஆங்கிலேயர்களுக்கு சவாலாக விளங்கிய அம்மாமனிதரின் பிறந்த நாளில் பன்னாட்டு மூலதனத்திற்கு எதிராக நடந்தேறிய இப்போராட்டம் மக்களின் கவனத்தை ஈர்த்தது, பெரும் ஆதரவையும் பெற்றது.



இதோ மீண்டும் ஜனவரி 16 ஆண்டு திருவள்ளுவர் தினத்தன்று மக்கள் மத்தியில்... 133 அதிகாரங்களைக் கொண்ட திருக்குறளை இயற்றிய அய்யனின் நினைவைக் கொண்டாடுகிற நாள் அல்லவா... தூத்துக்குடி ராஜாஜி பூங்காவில் 133 அடி நீள பேனரில் அந்நிய முதலீட்டு அவசரச் சட்டத்திற்கு எதிராகவும், பொதுத்துறை இன்சூரன்ஸை பாதுகாப்பதற்குமான கோரிக்கைகளுடன் எல்.ஐ.சி ஊழியர்கள் ... சமுக ஆர்வலர் நெய்தல் ஆண்டோ முதல் கையெழுத்தை போட காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை குவிந்தன 5000 பொதுமக்களின் கையெழுத்துக்கள்...திருநெல்வேலிக் கோட்டச் சங்கத் தலைவர் மதுபால், பொதுச் செயலாளர் செ. முத்துக் குமாரசாமி, துணைத் தலைவர் சேகர், கிளைச் செயலாளர் ஸ்ரீனிவாசன் , ஆர்.ஜவகர் ( எல்.ஐ.சி வளர்ச்சி அதிகாரிகள் சங்கம்)            இ . முருகன் (எல்.ஐ.சி முகவர் சங்கம்) மற்றும் வின்சென்ட் உள்ளிட்ட சகோதர அமைப்புகளின் தலைவர்களின் பங்கேற்போடு..பொங்கல் விடுமுறையில் ஒரு நாள் முழுவதும் வீதிகளில் நின்று மக்களை ஈர்த்த முன்முயற்சியை எப்படிப் பாராட்டுவது!

புதிய புதிய வடிவங்களில் மண்ணின் மணத்தோடு மக்களின் உள்ளங்களை எப்படி தொட முடியும் என்பதை இன்னொரு முறை நிரூபித்துள்ளார்கள் தூத்துக்குடி எல்.ஐ.சி ஊழியர்கள்.





Friday, March 21, 2014

கோவில்களும் கோடாலிகளும்...



நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரக் களம் சூடு பிடித்துள்ள நேரம்மக்களின் வாழ்நிலைப் பிரச்சினைகள் இப்பிரச்சாரத்தில் இடம் பெறாமல் பார்த்துக் கொள்வதில் கார்பரேட் ஊடகங்களும்,மோடி-ராகுல் பிரச்சாரகர்களும் கவனமாக உள்ளனர்விலைவாசி- அந்நிய முதலீடு-பொதுத்துறை போன்ற முக்கியமான அம்சங்கள் மீது நுனிப்புல் விவாதங்களைக் கூட இவர்கள் நடத்துவதில்லை.

பொதுத்துறை மீது புதிய அரசு என்ன அணுகுமுறையை கடைப்பிடிக்கும் என்பதில் இடதுசாரிகளைத் தவிர யாரும் திட்டவட்டமாக கருத்து கூறுவதில்லைஅப்படியே சிலர்சொன்னாலும் அதை நம்புவதற்கு அவர்களின் கடந்தகாலம் இடம் கொடுப்பதாக இல்லை. 

தேர்தல் துவங்குவதற்கு முன்பே காங்கிரஸ் தோல்வி உறுதியாகி விட்டதுசிதம்பரம்வாசன் போன்றவர்கள் தேர்தலில் தமிழகத்தில் நிற்கவே தயங்குகிறார்கள் என்ற செய்திகள் வெளிவருகின்றனமாற்றம் நிச்சயம்... மாற்றும் அவசியம் எனும்போது பொருளியல் பாதை பற்றிய விவாதம் தேவைப்படுகிறது.

பொதுத்துறையின் வரலாறு

1954, ஜூலை 7- சட்லெஜ் நதியின் குறுக்கே இந்தியாவின் மிகப்பெரிய அணையான பக்ரா -நங்கலின் கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்ட நாள்அவ்விழாவில் அன்றைய இந்தியப்பிரதமர் ஜவகர்லால் நேரு அந்த அணையை நவ இந்தியாவின் நவீனத் திருக்கோவில்கள் என்று வர்ணித்தார். இந்தியப் பொதுத்துறை நிறுவனங்கள்தேச கட்டுமானத்திற்கு அரசின் முன்முயற்சியால் உருவாக்கப்பட்ட திட்டங்களுக்கு அவர் வைத்த பெயர் அது. 

ஏன் பொதுத்துறை உருவாக்கப்பட்டதுஇந்திய ஆட்சியாளர்கள் விரும்பி உருவாக்கினார்களாசுதந்த இந்தியாவின் சுயசார்பான வளர்ச்சிக்கு ஏன் அவை அவசியமாயின?இப்படிஇந்தியாவில் பொதுத்துறை வாயிலாக வளர்ச்சியை திட்டமிடுவதற்கு முன்பாக அமெரிக்காவின்பிரிட்டனின் கதவுகளைத் தட்டியபோது அவை திறந்தனவாஎன்பதெல்லாம் தனிக்கதைமேலை நாடுகள் சுதந்திர இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவத் தயாராக இல்லைஇந்தியத் தொழிலதிபர்களின் கைகளிலும் பெரிய கனரகத் தொழில்களை உருவாக்குகிற நிதிபலம் இல்லைசுதந்திர எழுச்சி மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கியிருந்ததுகம்யுனிஸ்டுகளின் தொடர்ந்த போராட்டங்கள்கருத்துருவாக்கம் ஆகியவற்றையும்ஆளும் வர்க்கங்கள் எதிர்நோக்க வேண்டியிருந்ததுஇப்படியொரு நிர்ப்பந்தத்திலேயே "சிசேரியன்" பிரசவம் போல பொதுத்துறை பிறந்தது. ஆனால் பொதுத்துறை உருவாக்கம் இந்தியப்பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு ஆற்றிய பணி மகத்தானது.

1948 ல் இந்தியன் டெலிபோன் இண்டஸ்ட்ரீஸ் (I.T.I ) சுதந்தரத்திற்குப் பிந்தைய முதல் பொதுத்துறை நிறுவனமாக உருவாக்கப்பட்டதுமுதல் ஐந்தாண்டு திட்ட காலத்தில் பொதுத்துறைநிறுவனங்களே இருந்தனஆனால் இன்று 404 மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களும்,1062 மாநில அரசு நிறுவனங்களும் உள்ளனராஞ்சிபிலாய்,துர்காபூர்ரூர்கேலா போன்றநகரங்களே கூட பொதுத்துறை நிறுவனங்களின் வளர்ச்சியால் உருவாயினதமிழகத்தின் நெய்வேலி போன்று நிறைய உதாரணங்களைச் சொல்ல முடியும்.

1956 ல் மிகப் பெரும் மோசடிகளில் ஈடுபட்டு வந்த 245 தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தேசியமயமாக்கப்பட்டு எல்..சி உருவாக்கப்பட்டதுஅதற்குப்  பின்னரே இன்சூரன்ஸ் பயன்கள் சேரிகளுக்கும்கிராமங்களுக்கும்அடித்தள உழைப்பாளிகளுக்கும் தேடித் தேடிப்  போய்ச் சேர்ந்தன. 1969 ல் வங்கிகள் தேசியமயமான பின்னர் கிராமங்கள் தோறும் வங்கிக் கிளைகள்திறக்கப்பட்டன. திவால்கள் பழங்கதை ஆகிப் போயின. 

மிகப்பெரிய நம்பர் ஒன் உருக்கு நிறுவனமான "ஸ்டீல் அத்தாரிடி ஆப் இந்தியா" (SAIL), இந்தியாவில்  அதிக லாபம் ஈட்டுகிற முதன்மை நிறுவனமான  "எண்ணெய் மற்றும் இயற்கை வாயுஆணையம்" (ONGC) மிகப்பெரும் வணிக நிறுவனமாய் திகழும் இந்தியன் ஆயில் கார்பரேஷன் (IOC) போன்ற பெருமைமிக்க நிறுவனங்கள் எல்லாம் பொதுத்துறை நிறுவனங்களே!

ஆனால் சுயசார்புச் சக்கரம் 1991 முதல் பின்னோக்கிச் சுழலத் துவங்கியதுநவீனத் திருக்கோவில்கள் என்று நேருவால் வர்ணிக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் கடும் தாக்குதலுக்குஆளாகின. கோவில்களில் பிரசாதம் கிடைக்கும்ஆனால் கோவில்களே பிரசாதமாக மாற்றப்பட்டன. ஆம்.பொதுத்துறை நிறுவனங்கள் பன்னாட்டு மூலதனத்திற்கும்இந்தியப் பெரும்தொழிலகங்களுக்கும் படையலாக பரிமாறப்பட்டன.


விதம் விதமா விற்பனை 

1991 லிருந்து பொதுத்துறை பங்கு விற்பனைக்கு விதம் விதமான நடைமுறைகள் கடைபிடிக்கப்பட்டனகேந்திர விற்பனைதனியாருக்கு பெரும்பான்மை பங்குகள்பெரும்பான்மை பங்குகளை அரசின் கைகளில் வைத்து கொண்டு மீதத்தை விற்பதுகட்டுப்பாடுகளுடன் பங்கு விற்பனை... இப்படி அரசின் பலத்திற்கேற்பஎதிர்ப்பின் அளவுக்கேற்ப சாதுர்யமாக,லாவகமாக கொள்கைகள் வகுக்கப் பட்டன. கேந்திர விற்பனை என்றால் ஒரே அடியில் தனியாருக்கு கை மாற்றுவது ஆகும். இப்படி வி.எஸ்.என்.எல் நிறுவனம் டாட்டாவுக்கு கைமாறியதுமாடர்ன் புட்ஸ்சென்டார் ஓட்டல்பால்கோ எனப் பட்டியல் நீளும்இது . கேந்திர விற்பனை என்பது சயனைடு குப்பி மூலம் இன்ஸ்டன்ட் ஆகக் கொல்வது போன்றது. மற்றவகை பங்கு விற்பனைகள் எல்லாம் மூட்டைப் பூச்சி மருந்துமூலம் கொஞ்சம் மெல்ல மெல்ல உயிர் பறிக்கப்படுவது போன்றது. 

1991 லிருந்து 2013 வரை ரூ 136930 கோடி பெறுமான பங்குகள் விற்கப்பட்டன2000-2004 வரை ரூ 23034 கோடி, 2004-2008 வரை ரூ 8516 கோடி, 2009-2013 வரை 84208 கோடிஎந்தந்த ஆண்டுகளில் எவ்வளவு பங்கு விற்கப்பட்டது என்பதை உன்னிப்பாக பார்த்தால் பேரன்களின் திருவிளையாடல்களும்கடப்பாரைகளின் நர்த்தனமும் தெரிய வரும். யார் பொதுத்துறை பாதுகாப்பில் உறுதியாக இருந்தார்கள் என்பதும் தெளிவாகும். 

நரசிம்மராவ் ஆட்சியே தனியார்மயத்திற்கு கதவுகள் திறக்கப்பட்ட காலம்1992-93 ல் 20 பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் விற்கப்பட்டனநஷ்டம் என்பதெல்லாம் சுத்த ஹம்பக் என்பது அப்போதே அம்பலமாகிப் போனது1992-98 க்கு இடைப்பட்ட ஆண்டு காலத்தில் மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களின் லாபம் 21 சதவீதம். இதே காலத்தில் தனியார்நிறுவனங்களின் லாபம் 15 சதவீதமே ஆகும்மாருதி சுசுகி அன்னியர் கைகளுக்கே போனதும் இக்காலமே.

2000-2004 ஆண்டுகள் பி.ஜே.பியின் ஆட்சியில் இந்தியா 'ஒளிர்ந்தகாலம்அப்போதுதான் வி.எஸ்.என்.எல் போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் .டி.டி.சியின் 18 ஓட்டல்கள் கேந்திரவிற்பனை  மூலம் தனியார்கள் வசம் ஒப்படைக்கப்பட்டதுபொதுத்துறையை விற்பதற்கென்று தனி அமைச்சரை நியமித்த பெருமையும் பி.ஜே.பி க்கு உண்டு. அமைச்சர் அருண் சௌரி பங்குவிற்பனை இலாக்காவின் முதல் அமைச்சராகவும்கடைசி அமைச்சராகவும் இந்திய அரசியல் வரலாற்றில் இடம் பெற்றுவிட்டார்கடைசி அமைச்சராகவும் மாறியதற்கு காரணம்கேந்திர விற்பனையில் மக்களின் பணம் பாழாகி விட்டதென்ற ஊழல் குற்றச்சாட்டுக்கள் வெடித்ததே ஆகும்.

ஜனவரி, 2002ல் மும்பை உள்நாட்டு விமான முனையம் அருகில் இருந்த 288 அறைகளைக் கொண்ட சென்ட்டார் ஓட்டலை ரூ 83 கோடிகளுக்கு பி.ஜே.பி அரசு விட்டதுஅதை வாங்கிய பத்ரா ஹாஸ்பிடாலிடி தொழிலே நடத்தாமல் "சூடா ஒரு ஸ்பெசல் தோசை " மாதிரி நான்கே மாதங்களில் ரூ 115 கோடிகளுக்கு சகாரா நிறுவனத்திற்கு ஓட்டலை விற்று விட்டதுரூ 5000 கோடி மதிப்புள்ள சொத்துகளைக் கொண்ட பால்கோ நிறுவனத்தை ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு ரூ551 கோடிகளுக்கு விற்றதுஇந்த பால்கோ நிறுவனம் "அக்னி" "பிருத்விஏவுகணைகளை தயாரிக்க உதவிய அலுமினிய நிறுவனம்இன்று ஜவானும் பாதுகாப்பாக இல்லைகிசானும்பாதுகாப்பாக இல்லை என்று வசனம் பேசுகிற மோடியின் பி.ஜே.பி மத்தியில் ஆட்சி செய்த காலத்தில்தான் ஏவுகணைகளைத் தயாரிக்க உதவிய பால்கோ நிறுவனப் பங்குகள் சூறை விடப்பட்டுள்ளனகிசான்கள் தூக்குகயிறுகளை தேடிய காலமும் அதுவே என்பதும் உண்மை. 

அருண்சோரியோ  பொதுத்துறை பற்றி எவ்வளவு மோசமாக பேசினார் தெரியுமா!  "பொதுத்துறை நிறுவனங்கள் நவரத்தினங்கள் அல்லஅவை ரத்தம் ஒழுகிற குடல் புண்கள்". ஆனால்உண்மையில் பொதுத்துறையின் ரத்தமே குடிக்கப்பட்டது.

2004-2008 காலத்தில்தான் மிகக் குறைவாக பங்கு விற்பனை (ரூ 8516 கோடி)நடந்தேறியுள்ளதுகாரணம்இடதுசாரிகள் ஆதரவோடுதான் மத்தியில் ஆட்சி அமைய வேண்டியிருந்தது62 இடதுசாரி எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் கோவர்த்தன மலை போன்று பொதுத்துறைக்கு குடை பிடித்தனர்ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு -ஆட்சி வெளியிட்ட தேசிய குறைந்தபட்ச பொதுத் திட்டத்தில் (NCMP) நவரத்தினங்கள் பாதுகாக்கப்படும்லாபகரமாக இயங்கும் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படாது என்று உறுதிமொழி அளிக்கப்பட்டதுஇடதுசாரிகள் ஆட்சியில் பங்கேற்காமல் மக்களுக்கான போராட்ட ஆயுதமாக நாடாளுமன்றத்தை மாற்றினார்கள். பொதுத்துறை வங்கிகளின் அரசுப் பங்குகளுக்கான குறைந்த பட்சவரம்பை 51 சதவீதத்தில் இருந்து 33 சதவீதமாக குறைக்கிற மசோதாவைக் கைவிடச் செய்தார்கள். இன்சுரன்ஸ் துறையில் அந்நிய முதலீட்டு வரம்பை 49 சதவீதமாக உயர்த்துவதை தடுத்து நிறுத்தினார்கள். 

2008 உலக நிதி நெருக்கடியில் மேலை நாடுகளில் பன்னாட்டு வங்கிகளும்இன்சூரன்ஸ் நிறுவனங்களும் தலை குப்புற கவிழ்ந்தனஆனால் இந்திய பொதுத்துறை இன்சூரன்ஸ்நிறுவனங்களும் - வங்கிகளும் அப்புயலில் நிலை குலையாது நிமிர்ந்து கம்பீரமாக நின்றனராகுல் காந்தியோ " எனது பாட்டி இந்திராவும்கொள்ளுதாத்தா நேருவும் வங்கிகளை,இன்சுரன்சை தேசியமயமாக்கியதுதான் இந்திய நிதித்துறை காப்பாற்றப் பட்டதற்கு காரணம்" என்று மார்தட்டிக் கொண்டார்நெஞ்சு குறுகுறுக்காமல் பேசுவதை எப்படி கற்றுக்கொண்டார்களோ!

அறுந்து போன கடிவாளம் 

2009-2013 ல் கடிவாளம் அறுந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு II  ரூ 84208 கோடி பங்குகளை விற்றுள்ளதுஇது 23 ஆண்டுகளில் நடந்துள்ள பங்கு விற்பனையில் 61 சதவீதம் ஆகும்.என்.டி.பி.சிசெயில்ஆயில் இந்தியாஎச்..எல்நால்கோ..சிஎம்.எம்.டி.சி என பல நிறுவனங்கள் சந்தைக்கு வந்தன

பங்கு விற்பனை மூலமாக மட்டுமின்றி  வங்கித்துறையில்டாட்டாஅம்பானிபிர்லா போன்ற பெரும் தொழிலதிபர்கள் நுழைய வழி வகுக்கப்பட்டுள்ளது. மன்மோகன் சிங் கைகளாலேயே திறக்கப்பட்ட குளோபல் டிரஸ்ட் பேங்க் கவிழ்ந்ததை மக்கள் மறந்திருப்பார்கள் என்ற தைரியம்தான்உலக பெரும் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் திவால் ஆகியுள்ள நிலையில் இந்திய இன்சூரன்ஸ் துறையில்அந்நிய முதலீட்டை அதிகரிக்க ஒவ்வொரு நாடாளுமன்ற கூட்டத் தொடரிலும் முயற்சி செய்தார்கள்.

பி.பி.பி என்றழைக்கப்படுகிற அரசு-தனியார் கூட்டு முயற்சிகள் ஊக்குவிக்க்ப்பட்டனடெல்லியில் அப்போலோ மருத்துவ மனையோடு இணைந்து டெல்லி அரசு உருவாக்கிய இந்திரபிரஸ்தா மருத்துவ மனைக்கு நாடாளுமன்றக் கட்டிடத்தில் இருந்து 12 கி.மீ தூரத்திலேயே உள்ள 15 ஏக்கர் நிலம் ஓராண்டுக்கு ரூ க்கு லீசுக்கு தரப்பட்டதுடெல்லி அரசு ரூ 16 கோடியை மருத்துவ மனை கட்டுமானத்திற்கு அளித்தது33 சதவீத படுக்கைகள், 40 சதவீத வெளிநோயாளிகளுக்கு இலவச மருத்துவம் என ஒப்பந்தம் போடப்பட்டது200 படுக்கைகள் இலவச சிகிச்சைக்காக ஒதுக்கப் பட்டிருக்க வேண்டும்ஆனால் 1997 லிருந்து 2009 வரை ஒரு ஏழை கூட ஒப்பந்த அடிப்படையில் இலவச மருத்துவப் பயனை அனுபவிக்கவில்லைஇதுதான்பி.பி.பி யின் லட்சணத்திற்கு உதாரணம்.

மக்களின் பணம் தனியாருக்கு சூறையாடப் பட்டதற்கு பொதுத்துறை வங்கிகளில் உள்ள வராக் கடன்கள் ஓர் உதாரணம். மார்ச்,2013 ல் உள்ள மொத்த வராக் கடன் ரூ 1,64,461 கோடிகள்நான்கே நான்கு பெரும் தொழிலகங்கள் மட்டும் வைத்துள்ள பாக்கி ரூ 22,666 கோடி2007-2013 காலத்தில் வஜா செய்யப்பட்ட வராக்கடன் ரூ 1,41,000 கோடிகள். முதல் 30 வராக்கடன் கணக்குகளை ஒவ்வோர் வங்கிகளில் நேர் செய்தாலே பாலன்ஸ் ஷீட்டுகள் எல்லாம் நிமிர்ந்துவிடும் என்று சொல்வது யார் தெரியுமா! நம்ம சீமான் சிதம்பரம்அவர்கள்தான்.

நிலக்கரி ஸ்பெக்ட்ரம்சுரங்க ஒதுக்கீடு ஊழல்களில் காங்கிரஸ்பி.ஜே.பிகாங்கிரஸ் இரண்டுமே ஒன்றுக்கு ஒன்று சளைத்ததல்லமுறையான நடைமுறைகளை கடைப்பிடிக்காமல் 155 நிலக்கரி படுகைகள்  காங்கிரஸ் காலத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டு ரூ 186000 கோடி இழப்பு ஏற்பட்டது என்றால் பி.ஜே.பி காலத்திலும் 32 படுகைகள் இப்படித்தான் ஒதுக்கீடு செய்யப்பட்டனராஜா ஸ்பெக்ட்ரத்தை 2001 விலைகளிலேயே 2005,2007,2008 ஆண்டுகளிலும் ஒதுக்கினார் என்பதே குற்றச்சாட்டுபி.ஜே.பி யும் 2001 விலைகளிலேயே 2003 ல் ஸ்பெக்ட்ரத்தை விற்று ஊழலுக்கு "பிள்ளையார் சுழி" போட்டது. 

மாற்று என்ன !

சுதந்திர இந்தியாவில் இன்றுவரை யார் பொதுத்துறைக்கு பாதுகாவலாக இருந்துள்ளார்கள் என்பதை நிகழ்வுகள் நிரூபிக்கின்றனபொதுத்துறை பற்றி மிகத் தெளிவானஅணுகுமுறையையும் இடதுசாரிகள் வைத்துள்ளார்கள். சீமென்ஸ் ஒப்பந்தத்தை எதிர்த்து பொதுவுடமை இயக்கத்தின் மூத்த தலைவர்  தோழர் பி .ராமமூர்த்தி 80 களில் நடத்திய போராட்டம் பெல் நிறுவனத்தை பாதுகாத்தது. எல்.ஐ.சியை ஐந்து கூறுகளாக பிரிக்கிற மசோதாவை கைவிடுகிற கடிதத்தை அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி சி.பி.எம் கட்சியின் பின்னாளைய அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சுனில் மைத்ரா கரங்களில் தரவேண்டியிருந்தது. இவ்வாறு வரலாறு நெடுகிலும் இடது சாரிகளின் அரும்பணி பொதுத்துறையை பாதுகாத்ததற்கு நிறைய உதாரணங்கள் உண்டு. 

நவரத்தினங்களை விற்காதேலாபமாக இயங்குகிற பொதுத்துறை நிறுவனங்களை விற்காதேநட்டத்தில் ஓடினாலும் சமுக நோக்கில் இயங்குவதாக இருந்தால் அவற்றையும் விற்காதே;நட்டத்திலும் ஓடிசமுக நோக்குடையதாகவும்  இல்லாதுமீட்சிக்கும் வழியில்லாவிட்டால்தொழிலாளருக்கு உரிய இழப்பீடோடு பங்குவிற்பனைக்கு போகலாம் என்பதே இடதுசாரிகள்முன்வைக்கிற மாற்றுஇதைவிட தெளிவான அணுகுமுறை வேறு என்ன இருக்க முடியும்!

கேரளாவில் 2006-2011 வரை இடது ஜனநாயக முன்னணி ஆட்சியில் இருந்த காலத்தில் 32 மாநில அரசு பொதுத்துறை நிறுவனங்கள் நட்டத்தில் இருந்து மீட்கப்பட்டனஅந்நிறுவனங்கள்ரூ 232 கோடி லாபம் ஈட்டின. 9 புதிய அரசு நிறுவனங்கள் துவக்கப்பட்டனஇப்படி சொல்லும் செயலும் ஒன்றாய் செயல்படுபவர்கள் இடதுசாரிகளே என்பதை காலம் உணர்த்தியுள்ளது.

இந்திய அரசியலில் ஒருமுறை கூட பதவிக்காகவோகார்ப்பரேட்டுகள் வீசுகிற தூண்டிலிலோ சிக்காமல் பொதுத்துறை காக்க உறுதியாக இருந்தவர்கள் இடதுசாரிகள்நாடாளுமன்றத்தில்ஒருமுறை கூட மக்களுக்கு எதிராக எந்த மசோதாவுக்காகவும் கை தூக்காதவர்கள். இடதுசாரிகளின் பலம் நாடாளுமன்றத்தில் பெருகுவதும் அவர்களின் கருத்துக்கு செவிசாய்க்கவேண்டிய அவசியத்தோடு ஒரு புதிய அரசு உருவாவதுமே பொதுத் துறையை, மக்கள் நலனை பாதுகாக்க உதவும். இதுவே வரலாற்றின் செய்தி. எனவே எது மாற்று என்றும்யார் மாற்று என்பதும் தேர்தல் களத்தில் மக்கள் மத்தியில் சொல்லப்படவேண்டும்.