Showing posts with label DALITS. Show all posts
Showing posts with label DALITS. Show all posts

Wednesday, August 21, 2013

AIIEA IN PAPPANKULAM VILLAGE IN SUPPORT OF DALIT VICTIMS


    
At pappankulam village of Sivagangai district - Com G. Meenakshisundaram President, 
Com N. Sureshkumar, General secretary, ICEU, Madurai division with Com K. Samuelraj, geneal secretary, TNUEF. 

On the Independence day (15.08.2013)  22 houses of dalits were demolished  at Pappankulam village of Sivagangai  district (45 km from Madurai) by the authorities citing the reasons of encroachment. But dalit people alleged that the demolition was done at the instigation of Panchayat president with caste venom. According to dalit victims, Panchayat President developed antagonism towards dalits under the impression that they had not voted for him in local body elections. Dalit victims claim that they are having pattas for the houses and relevant documents also. Three houses were constructed under Indira Awas Yojana. ( Courtesy: THEEKATHIR- 21.08.2013).

The leaders of Madurai divisional unit & Madurai GI regional unit of ALL INDIA INSURANCE EMPLOYEES ASSOCIATION Com G Meenakshisundaram, President, ICEU, Madurai Division, Com S. Balasubramanian Joint secretary, GIEA-SZ, Com N. Sureshkumar, General secretary, ICEU, Madurai division, Com N.P.Rameshkannan, Joint secretary, Com S. Thanigairaj, Assistant Treasurer, and Com A. Govindarajan visited the village yesterday ( 20th August 2013) as a part of the fact finding team of the  Tamilnadu Untouchability Eradication Front (TNUEF) and documented house by house the losses suffered by the victims by staying in the village for whole day till late night. Lawyers from Madurai HC bench were also involved. The team led by Com K. Samuelraj, General secretary, TNUEF and Com K. Beemarao MLA, CPI-M assured the dalit victims that their issue would be taken up organisationally and legally by the TNUEF. The memorandum was submitted to the District Collector by the team along with the 100 victims. 

Today also (21.08.2013) our comrades of Sivaganga unit led by Com Bharathidasan Secretary, ICEU, Sivaganga branch unit assisted villagers for submitting representations. The authorities have assured to arrange the shelter for homeless children in the Government hostels and also relief materials to the victims.  Our comrades are determined to make follow up on daily basis.

Congratulations to ICEU, Madurai division for their committment and role in fighting the social oppression.




Demolished houses at Pappankulam



News published by Theekathir daily was given below- 

சிவகங்கை, ஆக. 20-சிவகங்கை தாலுகா பாப்பான்குளம் கிராமத்தில் ஆக்கிரமிப்பு என்ற பெயரில் தலித் மக்களுக்கு அரசு கட்டிக் கொடுத்த 5 வீடுகள் உள்ளிட்ட 22 வீடுகள் சுதந்திர தினத்தன்று இடித்து தரை மட்டமாக்கப்பட்டுள்ளன. வீடுகளை இழந்து தவிக்கும் தலித் மக்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரவாயல் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் க.பீமராவ், மாவட்டச் செயலாளர் ஏ.ஆர்.கே.மாணிக்கம், தீண் டாமை ஒழிப்பு முன்னணி மாநிலப் பொதுச்செயலாளர் கே.சாமுவேல் ராஜ், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் மு.கந்தசாமி, ஆர்.கே.தண்டியப்பன், மானா மதுரை ஒன்றியச் செயலாளர் எஸ்.முத்து ராமலிங்கபூபதி, நகரச் செயலாளர் சங்கர சுப்பிரமணியன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் கே.வீர பாண்டி, மானாமதுரை ஒன்றியச் செயலா ளர் வீரபாண்டி உள்ளிட்டோர் சந்தித்து நடைபெற்ற சம்பவங்கள் குறித்து கேட் டறிந்து இதன் மீது உரிய தலையீடு செய்வதாக உறுதியளித்தனர்.வீட்டை இழந்துள்ள மகாலிங்கம் கூறுகையில், எனது வீட்டிற்கு அரசு கொடுத்த வீட்டுமனைப்பட்டா உள்ளது. வீடு கட்டுவதற்கு அரசின் உத்தரவு உள்ளது. கட்டி முடித்த வீட்டில் இன்னும் குடி யேறவில்லை. கட்டிய வீட்டிற்கு இன்னும் அரசு ரூ.30 ஆயிரம் தரவேண்டியுள்ளது. இந்நிலையில் ஆக்கிரமிப்பு என்ற பெயரில் வீட்டை இடித்துவிட்டனர் என்றார்.கூலு என்பவர் கூறுகையில், அரசாங்க சர்வேயர் நில அளவை செய்தபோது, எங்களது பட்டா இடத்திற்குள் தான் வீடு கட்டப்பட்டுள்ளது எனக்கூறினார். ஆனால் வீட்டை இடித்துவிட்டனர் என்றார். பூபதி என்பவர் கூறுகையில், சாலைக் கென 20 அடி உள்ளது ஆனால் எனது வீடு ஆக்கிரமிப்பில் இருப்பதாகக் கூறி இடித்துவிட்டனர். தெருச்சாலை 20 அடி இருக்கும்போதே ஆக்கிரமிப்பு என்ற பெயரில் எனது வீட்டை முழுமையாக இடித்துவிட்டனர். வீட்டை இடித்ததால் கோயிலில் தடுப்பு போட்டு குடியிருக்கிறோம். எங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றார்.

க.பீமராவ் எம்எல்ஏ : சம்பவம் குறித்து சட்டமன்ற உறுப் பினர் பீமராவ் கூறுகையில், “தமிழக அரசுக்கு கெட்டபெயர் ஏற்படுத்த வேண் டும் என்ற நோக்கத்தோடு வருவாய்த் துறையும், காவல்துறையும், ஊராட்சி நிர்வாகமும் கூட்டாக செயல்பட்டு சட்ட விரோதமாக தலித் மக்களின் வீடுகளை இடித்திருக்கிறார்கள். பாப்பான்குளம் தலித் மக்கள் வீடுகளை இடித்தது தொடர் பாக சட்டமன்றத்தில் தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” என்றார்.

தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில பொதுச்செயலாளர் சாமுவேல்ராஜ் கூறுகையில், தலித் மக்கள் மீது நடை பெற்றுள்ள அக்கிரமத்திற்கு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க அரசை வலியுறுத்துவோம் என்றார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஏ.ஆர்.கே.மாணிக் கம் கூறுகையில், தலித் மக்களின் 22 குடியிருப்புகள் இடித்து தரைமட்டமாக் கப்பட்டிருப்பது வன்மையாகக் கண்டிக் கத்தக்கது. அரசு மானியத்தில் குழும வீடுகள் கட்டியிருந்த மகாலிங்கம், கூலு, வள்ளி, ராக்கு, சுப்பிரமணியன் ஆகியோரது வீடுகள் இடிக்கப்பட்டுள்ளது. அன்பழகன், பூமிநாதன், ராக்கு, முத்து, கருப்பையா, பிச்சை, முத்துச்சாமி, பூபதி, முருகன், பாலு ஆகியோரது வீடுகள் தரைமட்டமாக்கப் பட்டுள்ளது. சேது, சரவணன், தெய்வேந் திரன், தனுக்கோடி, துரைராஜ்செல்வி, ஆகியோர்களின் வீட்டு தாழ்வாரங்கள், கழிப்பறை இடிக்கப்பட்டுள்ளன.இடிக்கப்பட்ட அனைத்து வீடுகளை யும் அதே நிலையில் கட்டிக்கொடுக்க வேண்டும். மன உளைச்சலுக்குள்ளான தலித் மக்கள் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். தலித் மக்களின் வீடுகளை சட்டவிரோதமாக இடித்த வருவாய்த்துறை, ஊராட்சி நிர்வாகம், காவல்துறையினர் மீது வன் கொடுமை தடுப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றார்.

ஆட்சியருடன் சந்திப்பு : தொடர்ந்து ஆட்சியரைச் சந்தித்த இக்குழுவினர் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். இப்பிரச்சனையின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினர்.

குற்றவாளிகளை கைது செய்க: சிபிஎம்

தலித் மக்களின் வீடுகள் இடிக்கப்பட்டதைக் கண் டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா ளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது,சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஊராட்சி ஒன் றியம், சிறுகுடி ஊராட்சிக்குட்பட்ட பாப்பான்குளம் கிராமத் தில் சுமார் 100 தலித் குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். சிறுகுடி ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் தங்கராஜ். இப்பகுதி தலித் மக்கள் தங்களுக்கு வாக் களிக்கவில்லை எனக் கருதி தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார். தனக்கு வாக் களிக்காத தலித் மக்களை வஞ்சம் தீர்க்க வேண்டு மென்கிற வன்மத்தோ டும், வெறியோடும் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று, தங்கராஜ் ஜே.சி.பி. இயந்திரத்தின் மூலம் தலித் மக்களின் 28 வீடுகளை இடித்துத் தரை மட்டமாக்கியுள்ளார். இச்செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

இடிக்கப்பட்ட வீடுகள் அனைத்திற்கும் பட்டா, மின் இணைப்பு உள்பட அனைத்து அரசு ஆவணங்களும் உள்ளன. மூன்று வீடுகள் இந்திரா ஆவாஸ் யோஜனா திட் டத்தில் கட்டப்பட்டவை. காவல்துறை அராஜகம்தலித் மக்களின் வீடுகள் இடிக்கப்படும் போது, மானா மதுரை சரக காவல் துணை கண்காணிப்பாளர் வெள்ளத் துரை தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட காவல்துறை யினர் இருந்துள்ளனர். தட்டிக்கேட்ட கள்ளிவயல் கிராமத் தைச் சேர்ந்தசுந்தரபாண்டியனைக் காவல்துறையினர் தாக்கியதோடு, அவர் மீது பொய் வழக்குத் தொடுத்துள்ளனர். உள்ளாட்சி மன்றத் தேர்தல் குரோதத்துடனும் சாதி வெறியோடும் கூடிய இந்த கொடூரத் தாக்குதலில் சுமார் 1 கோடி ரூபாய் அளவிற்கு தலித் மக்களின் சொத்துக்கள் அழிக் கப்பட்டுள்ளன.சுதந்திர தினத்தன்று சா திய வன்மத்துடன் தலித் மக் களின் வீடுகளை இடித்த தங்கராஜ், பாதுகாப்பு வழங்கிய துணை கண்காணிப்பாளர் வெள்ளத் துரை மற்றும் குற்றவா ளிகள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி வழக்கு பதிவு செய்து கைது செய்திட வேண்டுமெனவும், பாதிக் கப்பட்ட தலித் மக்களுக்கு உரிய நிவார ணமும், இழப்பீடும் வழங்கிட வேண்டுமெனவும் தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

Saturday, December 8, 2012

தர்மபுரி-சாதி என்று சாம்பலாகும்!

நத்தம், கொண்டாம்பட்டி,அண்ணாநகர் கிராமங்களில் 

புகைப்படம்
கொண்டாம்பட்டியில்
 புகைப்படம்
பெண்களின் குமுறல்கள்
 புகைப்படம்
எரிந்த இல்லங்கள்
புகைப்படம்
சாதி என்று சாம்பலாகும்!

தர்மபுரியின் நத்தம் , அண்ணாநகர் , கொண்டாம்பட்டி கிராமங்களுக்கு நவம்பர் 17, டிசம்பர் 4 ஆகிய இரண்டு நாட்கள் நேரில் சென்று கொடூரத் தாக்குதலுக்கு இலக்கான மக்களை, அவர்களின் இல்லங்களை, நொறுங்கிப்போன வாழ்க்கையை பார்த்த தாக்கத்தோடு இதனை எழுதுகிறேன்.


இந்தியச் சமுகத்தில் சாதீய - பாலின ஒடுக்குமுறைகள் இரண்டறப் பிணைந்தே இருக்கின்றன. சாதீய விருட்சத்திற்கு அகமண முறையே வேராகத் திகழ்கிறது. அதுபோல ஆதிக்க வெறியை நிலை நாட்ட விரும்புபவர்களும் பெண்களையே குறிவைக்கின்றனர். எனவேதான் சாதீய மறுப்புத் திருமணங்கள் இன்றைக்கு சாதி  வெறியர்களின் கடும் எதிர்ப்புக்கு ஆளாகின்றன. 

தந்தை பெரியார் கலப்புத் திருமணங்கள் என்ற சொல்லாடலையே ஏற்க மாட்டார். இது என்ன மனிதனுக்கும், மிருகத்திற்கும் நடக்கிற கல்யாணமா, கலப்பு என்று சொல்வதற்கு என்பார். ஆண் பெண் விருப்பம் என்பதைத் தவிர வேறு எதுவுமே கலக்காத சாதி மறுப்புத் திருமணத்தை போய் கலப்பு மணம் என்று ஏன் சொல்லவேண்டும்? என்பதே அவரின் கேள்வி. விருப்பங்கள் நிராகரிக்கப் படும் சமூகச் சூழலில் அதில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான் என்பதற்கு எந்த ஆராய்ச்சியும் தேவையில்லை.

தமிழகத்தில் உள்ள சாதி அமைப்புகள் எல்லாம் சாதி மறுப்புத் திருமணங்களுக்கு எதிராக பேசுவது, வன்முறையை தூண்டுவது என்பது சில மாதங்களுக்கு முன்பிருந்தே அரங்கேறத் துவங்கிவிட்டன. சாதி வெறி என்பதை அங்கிருந்து, அருகில் இருந்துதான் கிளப்பவேண்டும் என்பதில்லை.தர்மபுரி சூடாவதற்கான நெருப்பு மாமல்லபுரத்தில் இருந்து கூட வைக்கப்படலாம். ரிமோட் மூலம் இயக்குவது போல் இதற்கான அரசியல் பட்டன் ஏற்கனவே அழுத்தப்பட்டுவிட்டது. வினோதம் என்னவெனில் ஓர் பட்டியலின முதல்வரைக்  கொண்டுவருவேன் என்றவர், சமுக நல்லிணக்க மருத்துவர் என்று பட்டம் சூட்டப்பட்டவர், அம்பேத்கர் விருதையே வாங்கியவர் சேனலை மாற்றுவது போல் இப்போது 40 பிற்பட்ட அமைப்புகளைத் திரட்டக் கிளம்பிவிட்டார். சரியான சமுக,பொருளியல் பார்வையோடு மக்கள் திரட்டப்படாவிட்டால் யார் எப்படி நிறம் மாறுவார்கள் என்பதற்கு இது ஓர் சாட்சியம்.

சில மாதங்களுக்கு முன்பே தஞ்சை சூரக்கோட்டை மாரிமுத்துவின் படுகொலை நிகழ்ந்தது. அங்கங்கள் எல்லாம் சின்னா பின்னமான அக்கோரத்தை வார்த்தைகளில் சொல்லமுடியாது.சென்னையில் மனித உரிமை ஆணையம் நடத்திய பொது விசாரணையில் மாரிமுத்துவின் மனைவி அபிராமி தன் கைக் குழந்தையோடு வந்திருந்தார். தீண்டாமை ஒழிப்பு முன்னணி அவருக்கு இழைக்கப்பட்ட அநீதியை முறையிட்ட பின்னணியில் அரசு வேலை தருவதற்கு உத்தரவுவிசாரணையில் இடப்பட்டது. ஏன்  அப்பாவை கொன்றுவிட்டார்கள் ? என்று அபிராமியை அக்குழந்தை கேட்டால் என்ன அவர் பதில் சொல்வார்! நேரு விளையாட்டரங்கில் புல்வெளியின் மென்மையில் மகிழ்ந்து கொண்டு இருந்த அக் குழந்தைக்கு சாதியச் சமுகத்தின் வன்மையான முட்புதரை எப்படி நாளை காண்பிப்பது!

நத்தம் இளவரசனை விரும்பி திருமணம் செய்து கொண்டு வந்த திவ்யாவின் காதலில் என்ன குற்றம்! இத் திருமணம் மட்டும் இவ்வெறியாட்டத்திற்கு காரணம் என்று நாம் நினைக்கவில்லை. ஆனால் ஓர் அரசியல் தலைவரோ அதையே விவாதப் பொருளாக மாற்றிவிட்டார். இருக்கட்டும். இம் மூன்று கிராமங்கள் மீதும் "படையெடுத்து" வந்த 1500 பேருக்கு திவ்யாவின் விருப்பத்தில் தலையிட, தீர்மானிக்க என்ன உரிமை இருக்கிறது? திவ்யாவை கடத்திவிட்டார்கள் என்று சொன்னார்கள். ஆனால் தருமபுரி நீதிமன்றத்தில் கூண்டில் ஏறிய திவ்யா  நான் விரும்பியே இளவரசனை மணம் புரிந்தேன் என்று உறுதியாகச் சொன்னாரே! அதற்கு பிறகு நாமக்கல் மாவட்டத்தில் யாரோ, எத்தனை பேரோ காதல் மணம் புரிந்து கைவிட்டுவிட்டார்கள் என்று ஏதோ கணக்கு சொல்கிறார்கள். வாதத்திற்காக கேட்போம். நாமக்கல் கணக்கு வடி கட்டின உண்மை என்று வைத்து கொண்டாலும் அதற்காக தர்மபுரியில் அடிப்பார்களா!  

தாக்கியவர்களை விட மோசமான குற்றவாளிகள் யார் தெரியுமா! இக்கொடுரத்தை தர்க்க ரீதியாக நியாயப் படுத்த முயற்சிப்பவர்கள்தான் .ஒரு  பரபரப்பு வார இதழ் " தந்தை நாகராஜன் என்னோடு வந்துவிடு என்று எவ்வளவோ கெஞ்சி அழைத்தும் காதல் மோகத்தால் வர மறுத்துவிட்டாள்" என்று எழுதியது. இது ஊடக வன்முறை. பேனாவுக்குள் மையோடு சாதியையும் கலந்து எழுதுகிறார்கள்.

நாங்கள் நத்தம் கிராமம் போன போது அங்கே 1986 லேயே சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட யசோதா என்ற பெண்மணியைப் பார்த்தோம். அவர் கேட்டார். " நான் வெறுங்கையோடு இந்த வீட்டிற்கு வந்தேன். நாங்கள் இருவரும் பாடுபட்டு உழைத்து சேர்த்தோம்.
26 வருடத்தில் ஒரு குண்டூசியைக் கூட எனது பெற்றோரிடம் கேளு என்று  எனது கணவர் சொன்னதில்லை. பிள்ளைகள், பேரக் குழந்தைகளையும் பார்த்துவிட்டேன். என்ன குறைந்துவிட்டோம். நானும் இந்தக் கிராமத்தை தாக்கிய வெறியர்களின் சாதியைச் சேர்ந்தவள்தான். ஆனால் எனது வீடு, வாகனம், தொழிலுக்காக வைத்திருந்த மரங்கள் எல்லாவற்றையும் எரித்துச் சாம்பலாக்கிவிட்டர்களே! ஓட்டுகளுக்காக இவர்கள்தானே எனது வாழ்க்கையை பாழாக்கியிருக்கிறார்கள்" . ஆயிரம் மேடை போட்டு சொன்னாலும் சொல்ல முடியாத பதிலை இயல்பான வாழ்க்கை அனுபவத்தில் இருந்து சுளீரென யசோதா சொன்னார். 

கொண்டாம்பட்டி ராசு வீட்டிலும் ஒரு சாதிமறுப்புத் திருமணம் சில ஆண்டுகளுக்கு முன்னால் நடந்துள்ளது. ஊருக்குள் வந்து விசாரித்த பெண்ணின் பெற்றோர் நல்ல பையன்தான் என்று சமாதானம் ஆகிச் சென்றார்களாம். ஆனால் அதற்கு முன்பு சாதியக் கலாசாரக் காவலர்கள் செய்த அட்டுழியத்தை ராசு வாயால் கேட்ட போது அண்ணல் அம்பேத்கர் வகுத்த அரசியல் சாசனம் வழி நடத்துகிறதா? அல்லது மனுதர்மம்தான் இன்றைக்கும் கோலோச்சுகிறதா? என்ற சந்தேகம் எழாமல் இருக்காது. சென்னை போரூரில் இருந்து காதல் திருமணம் செய்து அங்கு குடியேறியுள்ள  ஒரு பெண்ணோ  "நாங்க நல்லாதானே இருக்கிறோம், எங்களுக்கு என்ன குறை" என்கிறார். இப்படிப்பட்ட குருவிக் கூடுகள் எல்லாம் பிய்த்து எறியப்பட்டுள்ளன.

உணர்ச்சிவயப்பட்ட தாக்குதல் என்று முடிவுக்கு வர முடியவில்லை. பீரோக்கள் உடைக்கப்பட்டு விலை  மதிப்புள்ள பொருட்கள் பத்திரமாக கொண்டு செல்லப்பட்டன என்று ஒவ்வோர் வீட்டிலும் குற்றம் சாட்டுகிறார்கள். பிறகு பெட்ரோல் ஊற்றி வாழ்வாதாரங்கள் எல்லாம் அழிக்கப்ட்டுள்ளன. ஓர் காவல்துறை காவலர் வீடும் தப்பவில்லை. கான்க்ரீட் வீடுகளும் தகர்க்கப்பட்டுள்ளன. பட்டியலின மக்களின் சுய சார்பான வளர்ச்சி மீது தொடுக்கப்பட்டுள்ள தாக்குதல்.மூன்று ஊர்களை இப்படி சிதைப்பது என்றால் சில மணி நேரங்கள் தேவை. அரசாங்கம்-சட்டம்-காவல்துறை-நிர்வாகம் எல்லாம் என்ன செய்தது என்ற கேள்விதான் பாரபட்சமற்ற விசாரணை வேண்டும்  என்ற கோரிக்கையாக மாறியுள்ளது. சி.பி.ஐ விசாரணை கோரப்படுகிறது. 

ரூ 50000 நிவாரணம் என்கிற அரசின் அறிவிப்பு மக்களின் இழப்பை எந்தவகையிலும் ஈடு செய்துவிடாது. அப்பணத்தை வைத்து ஒரு கழிப்பறை கூட கட்ட முடியாது. வீடு எது வெளி எது என்று தெரியாமல் கடந்த ஏழாம் தேதியில் இருந்து வாழ்ந்து வருகிற மக்களைப் பார்த்து அற்ப சொற்ப நிவாரணம் எள்ளி நகையாடுவது போல் உள்ளது. உளவியல் ரீதியான இழப்புகளுக்கும் நிவாரணம் உண்டு என்கிற வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை அதிகார வர்க்கத்தினர்என்றாவது படித்திருக்கிறார்களா! இப்படி பயன்படுத்தப்படாத வன்கொடுமை தடுப்புச் சட்டத்தைத்தான் இன்னும் மழுங்கடிக்க வேண்டும் என்கிறார்கள் பெண்களைக் காக்க புது அவதாரம் எடுத்துள்ளவர்கள்.

ஒரு மேல்நிலைதேர்வு மதிப்பெண் சான்றிதழ் ஒருவீட்டில் கருகிக் கிடந்தது. டி.எஸ்.பி தைரியம் கூறியும் ஒரு குழந்தை பள்ளிக் கூடத்திற்கு அச்சத்தால் போக மறுக்கிறது என்று ஒரு தாய் சொன்னாள். மீதக் குழந்தைகளும் காவல்துறை வேனில் பள்ளிக்கு போய் வருகிறார்கள். அப்போதுதான் கல் விழாது போலிருக்கிறது. சுதந்திரம் வாங்கி 65 ஆண்டுகள் ஆகிவிட்டது என்று பள்ளிக் கூடத்தில் சொல்லித் தரும்போது இக் குழந்தைகளின் மனதிற்குள் என்ன ஓடும்! 

நண்பர்களே! சகோதரிகளே! களத்தை விட சமூகத்தைக் கற்க வேறு ஓர் சிறந்த பள்ளிக்கூடம் இருக்க முடியாது. நமது தருமபுரி கிளைச் சங்கத் தோழர்கள் பாராட்டுக்கு உரியவர்கள். கொடுரம் நடந்த அக்கிராமத்திற்குள் போர்வைகளோடு, மளிகை பொருட்களோடு முதலில் சென்ற இயக்கம் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்தான். பின்னர் 318 குடும்பங்களுக்கும் பெண்களுக்கான புதிய ஆடைகளோடு சென்றோம். பிறகு வங்கி ஊழியர்கள், ஆசிரியர்கள், ரயில்வே ஊழியர்கள் என சாதி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு தருமபுரி நோக்கிச் செல்வது தொழிற்சங்க இயக்கத்திற்கு புதிய பாதையை, புதிய பார்வையை  தந்திருக்கிறது. முதலில் சென்ற  AIIEA  வின் பணியே எங்களுக்கு முன்னுதாரணம் என்று அச் சங்கங்கள் மனப்பூர்வமாகச் சொல்கின்றன. தமிழகம், கேரளக் கோட்டங்கள் 24 மணி நேர இடைவெளிக்குள் ரூ 170000 ஐ திரட்டியதும் , விரைந்ததும் , அப்பணிகளை சேலம் கோட்டம் நேர்த்தியாக ஒருங்கிணைத்ததும் காலத்தில் ஆற்றிய கடமை. தலித்துகளின் விடுதலைக்கு தலித்துகள் மட்டும் போராடினால் போதாது எனபதை அறிவுரையாகச் சொன்னால் அது குப்பைக்குத்தான் போகும். அதையே களத்தின் அனுபவமாக மாற்றினால் நம்பிக்கையாய் மாறும். தலித் அல்லாதவர்களின் விடியலும் தலித்துகள் இணையாமல் இல்லை எனபதையும் உணர்ந்துகொண்ட உணர்வு பூர்வமான பயணம் அது.

டிசம்பர் 6 - அம்பேத்கரின் நினைவு நாளை அனுசரிக்கும் போது அவர் வகுத்த பாதையில் சிறு தூரத்தையாவது கடக்க முயற்சித்துள்ளோம் என்ற உண்மை மனதை மென்மையாக வருடிக் கொடுத்தாலும் இன்னும் செல்லவேண்டிய தூரமும், ஆற்ற வேண்டிய பணியும் நிறைய இருக்கிறது  என்ற பேருண்மை மனசை ரொம்பவே கனக்கச் செய்கிறது.

TAKING CUE FROM THE INSTANT GESTURE BESTOWED BY THE UNITS OF AIIEA

  People's Democracy


(Weekly Organ of the Communist Party of India (Marxist)
Vol. XXXVI
No. 49
December 09, 2012



BEFI Extends Relief to Dharmapuri Victims

S V Venugopalan 

IT was a heart rending scene to the visiting delegation of the Tamilnadu state unit of Bank Employees Federation of India (BEFI) to see the remains of totally burnt houses and ruined livelihood of the dalits of the three colonies of Naickenkottai village in Dharmapuri district. Blackened walls, molten ceiling fans, broken pieces of glass, burnt food materials, twisted furnitures, charred house hold articles and the like were what was available door after door in almost all the 268 houses of Natham, Anna Nagar and Kondampatti colonies that witnessed the heinous crime against humanity on November 7 this year. (Please see detailed report in People's Democracy dated November 18, 2012).

That the whole operation executed in four to five hours that evening was totally pre-meditated and well engineered was for all eyes to see. The way the houses have been ransacked, steel cupboards broken and valuables looted and the tiled ceilings razed to the ground spoke volumes of the diabolic intentions of those who provoked this violence, in the first place. From birth certificates to mark sheets of budding youth, from ration cards to voter IDs and from bangles to small toys of children, nothing has been left untouched by the casteist fire that engulfed the whole lot of settlements there.

Shocked by the newspaper reports, BEFI Tamilnadu voiced against this atrocity immediately and issued a call for funds from its rank and file towards providing some relief to the victims, taking cue from the instant gesture bestowed by the AIIEA units in rushing to the area for an on-the-spot study simultaneously reaching dress materials and other requirements to the tune of Rs 1.70 lakhs. Besides quick mobilisation from the affiliated bank wise unions, BEFI's appeal drew instant response from other well wishers, too, enabling it to offer relief measures for about Rs One lakh.

A team of BEFI-TN from Chennai along with representatives from AIIEA and ICF United Workers Union (CITU) reached Dharmapuri on  December 4 where, at their request, Madheswaran, divisional functionary of the AIIEA along with others had already procured and packed neatly, the essential basic cooking utensils for all the 300 familes for distribution among the victims. The relief materials were then taken to all the above three villages where it was distributed to people. K Swaminathan, general secretary, SZIEF (AIIEA) and K Ganesh, Convenor, Ambedkar Kalvi Maiyam were part of this visit.

Addressing the affected people briefly, Dilli Babu, CPI(M) MLA and K Samuel Raj, general secretary, TNUEF reassured support to the affected people in their struggle for justice. Others who spoke included C P Krishnan, general secretary, BEFI-TN, V Tamilselvi (BEFI), Sundaram, treasuer, Confederation of Central Government Employees Unions, Ramalingam and Rajaram (ICF Workers Union (CITU). 

Tearfully thanking the visiting trade unions for their solidarity, the people of the area exhibited a sense of growing confidence to stay determined to fight for justice unitedly.

BEFI AT DHARMAPURI VILLAGES-RELIEF TO DALIT VICTIMS

புகைப்படம்

தருமபுரி மாவட்டம் நாய்க்கன் கோட்டை அருகே நத்தம், கொண்டாம்பட்டி, அண்ணா நகர் காலனி மக்கள் மீது வன்கொடுமை நிகழ்த்தப்பட்டதை அறிவீர்கள்...

வன்னிய சாதிப் பெண் திவ்யா, தலித் வாலிபர் இளவரசனைத் திருமணம் செய்து கொண்டதைச் சாக்காக வைத்துக் கொண்டு சாதிய வெறி சக்திகள் நீண்ட கால வன்மத்தைத் தீர்த்துக் கொள்ளும் வெறியோடு நவம்பர் 7 அன்று 268 வீடுகளை முற்றாக அடித்து நொறுக்கித் தீயில்  போசுக்கியுள்ளனர்.

தங்களது ஜீவாதாரங்களை மட்டுமல்ல, தங்களது வாழ்நாள் சேமிப்பான அனைத்தையும் சுவடின்றி அழித்துப் போட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்கள் பக்கம் உடனே போய் நின்று பாதுகாப்பு உணர்வும் நம்பிக்கையும் ஊட்டியதோடு தேவையான நிவாரணப் பொருள்கள் வழங்கவும் மார்க்சிஸ்ட் கட்சி போர்க்கால நடவடிக்கை எடுத்து வருகிறது...

தமிழக தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் சி பி ஐ விசாரணை கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. வெறியர்களை உடனே கைது செய்யக் கோரியும், நடுத் தெருவில் நிற்கும் மக்களுக்குக் குடியிருப்புகள கட்டித்தர வேண்டும் என்றும் தொடர் இயக்கங்களை நடத்தி வருகின்றனர்.

இதன்டையே சமூக அக்கறை கொண்டுள்ள சங்கம் என்ற வகையில், நமது இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் தமிழ் மாநிலக் குழு சார்பில், நிதிக்கான அறைகூவல் விடப்பட்டதில் வசூலான ரூ.1 லட்சம் தொகை, நிவாரணப் பொருள்களாக அந்த மக்களுக்கு நேற்று வழங்கப்பட்டது. தமக்கு உதவியளித்த உள்ளங்களுக்கு அந்த எளிய மக்கள் கண்ணீர் ததும்ப நன்றி சொல்லியிருக்கின்றனர். ஒரே நாள் தகவலில் பாத்திர பண்டங்களாக முன்னூறு செட் கடையில் வாங்கி அவற்றை தனித்தனி குடும்பங்களுக்காக பார்சல் செய்து மொத்தத்தையும் மூட்டைகளில் கட்டி எடுத்து வந்து அங்கே வழங்கவும் ஏற்பாடு செய்தது AIIEA மாவட்ட நிர்வாகி மாதேஸ்வரன் மற்றும் தோழர்கள்...மகத்தான பங்களிப்பு அது 

BEFI சார்பில் சென்ற தோழர்களில் ஒருவனாக நானும் சென்றிருந்தேன்...

நேற்று அதிகாலை தோழர்கள் சென்னையிலிருந்து புறப்பட்டு தருமபுரி சென்றிருந்தோம்..இன்சூரன்ஸ் தோழர்கள் சிலரும் SZIEF பொதுச் செயலாளர் சுவாமிநாதன் அவர்களோடு எங்களுடன் பயணம் செய்தனர். சுவாமிநாதன் முன்னதாகவே அங்கு சென்றுவந்த விவரங்களை விளக்கினார். இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் நிகழ்வு நேரிட்ட மூன்றாம் நாளே ரூ.1,70,000 நிதி வழங்கி அந்த மக்கள் பக்கம் நின்றது குறிப்பிட வேண்டியது. அங்கே மார்க்சிஸ்ட் கட்சி சார்ந்த சட்ட மன்ற உறுப்பினர் டில்லிபாபு, தமிழக தீண்டாமை ஒழிப்பு முன்னணி பொதுச் செயலாளர் சாமுவேல் ராஜ் அவர்களோடு இணைந்து நத்தம் கொண்டாம்பட்டி அண்ணா நகர் மூன்று கிராமங்களுக்கும் நேரில் சென்றோம்.


நீதி கோரும் போராட்டத்தில் சாட்சியங்களாக நிற்கும் இந்த கொடூர காட்சிகளோடு, அதற்கு இரண்டு நாள் முன்னதாகக் கூடத் தங்கள் வீட்டில் கை நனைத்த, பரஸ்பரம் குடும்ப நிகழ்வுகளில் பங்கேற்ற, நன்கு பரிச்சயமான மனிதர்கள் தான் இந்த வன்கொடுமையை இழைத்தனர் என்று கதறிய பெண்களின் அதிர்ச்சி வாக்குமூலங்களும் முக்கியமானவை...

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று எழுதிய வள்ளுவர் படம் கூட எரிக்கப்பட்ட குழந்தைகளின் பாடப் புத்தகங்களோடு சேர்ந்து எரிந்து போயிருக்கும் என்றே தோன்றுகிறது...

எஸ் வி வேணுகோபாலன் 

பின் குறிப்பு இன்று தருமபுரியில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இந்த மூன்று சிற்றூர்கள் மக்களும் சேர்த்து சுமார் 2500 பேருக்கு மேல் பங்கேற்றதாக ஒரு தோழர் (கணேஷ், கோவை ) தகவல் தெரிவித்தார். கொண்டாம்பட்டி ஊரிலிருந்து மக்களை ஏற்றி வந்த வேனில் BEFI கொடி கட்டப்பட்டிருந்ததை அவர் உற்சாகமாகச் சொன்னார். இதை விட நமக்கு வேறு பெருமிதம் என்ன இருக்க முடியும்? அவர்களது நீதிக்கான போராட்டத்தில் இன்னும் செய்ய வேண்டியது எவ்வளவோ இருக்கிறது.