Sunday, February 19, 2012



பொன்விழா நிறைவு புதிய துவக்கமாய் அமையட்டும்  

அகில இநதிய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் பெருமைமிகு கோட்டச் 
சங்கங்களில் ஒன்றான தஞ்சாவூர் தனது பொன்விழா ஆண்டை நிறைவு 
செய்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியையும், எழுச்சியையும் ஏற்படுத்துவதாகும்.
புதிய புதிய முன்முயற்சிகளுக்கும், திருப்புமுனைகளுக்கும் வழிவகுக்கிற 
சாதனைகளுக்கு விளைநிலமாக தஞ்சாவூர் திகழ்ந்திருக்கிறது.

அகில இநதிய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் மணிமகுடமாகத் திகழ்கிற 
1960 களில் நடைபெற்ற பொறிமயமாக்கல் எதிர்ப்பு போராட்டம் கொல்கத்தா 
நகரில் பற்றிப்பரவுவதற்கு தீப்பந்தத்தை ஏந்திக் கொடுத்த பெருமை தஞ்சை 
மண்ணுக்கு உண்டு. தஞ்சைக் கோட்டத்தின் உருவாக்கத் தலைவர்களில் 
முதன்மையானவரான தோழர் ஆர். நாராயணன் போன்றவர்களின் குரல்கள் 
மும்பை மைய அலுவலகம் முன்பாக வரை ஒலித்திருக்கிறது என்பது வரலாறு.

1990 களில் பேசப்பட்டவையாக இரண்டு கையெழுத்து இயக்கங்கள் அமைந்தன.
முதல் பந்திலேயே சிக்ஸர் போன்று தஞ்சைக் கோட்டம் திருவையாறு இசைவிழாவில் 
பெருந்திரள் மக்களிடம் கையெழுத்துக்களைப் பெறத் துவங்கியபின்னர்தான் 
தமிழகக் கோட்டங்கள் எல்லாம் வீதிகளுக்கு விரைந்தன. எத்தனை நாட்கள்..லட்சக் 
கணக்கான மக்களுடன் சந்திப்பு. பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்களைப் 
பாதுகாக்கிற மாபெரும் வேள்வியாக அது மாற்றப்பட்டது எனில் அதன் கனல் 
புறப்பட்ட இடமாக தஞ்சைக் கோட்டம் இருந்தது.

தொழிற்சங்கக் கல்வி, மாணவர்களை அழைப்பதாக மட்டும் அல்லாமல் அவர்களின் 
கதவுகளைத் தட்டுவதாக மாற்றப்படுவதிலும் தஞ்சைக் கோட்டம் முதல் புள்ளியை 
வைத்தது. கிளை அளவிலான தொழிற்சங்க வகுப்பு என்கிற புதிய முயற்சியை பிற 
கோட்டங்களுக்கு அறிமுகம் செய்தது. ஊடகங்களும், ஆளும் வர்க்கங்களின் தகவல் 
தொடர்பு பிரச்சாரச் சாதனங்களும் பிரமாண்ட வளர்ச்சியோடு கருத்துருவாக்க தளத்தை 
ஆக்ரமித்துக் கொண்டிருக்கும் கடந்த 20 ஆண்டுகளில் பொதுத் துறை பாதுகாப்பு,
விரிந்த போராட்டத்தில் ஊழியர்களை ஈடுபடுத்தல், சமுகத்தில் இருந்து தனிமனிதனை 
பிரிக்கிற கலாச்சாரத்திற்கு எதிர்வினை என AIIEA முன்னேற முனைந்திருக்கிறது எனில் 
அதில் பெரும்பங்கை தொழிற்சங்கக் கல்வியே வகித்திருக்கிறது. இவ்வழி நடத்தலில் 
தஞ்சை மிக முக்கிய முடிவை காலம் தவறாது எடுத்தது.

இவ்வரலாற்று பாதையில் இன்னொரு மிக முக்கியமான மைல் கல்லாக அமைந்திருப்பது 
மகளிர் கலைக் குழு உருவாக்கம் ஆகும்.தமிழ்நாடு முழுவதும் மகளிர் இயக்கத்திற்கு 
புதிய திசையை தஞ்சை மகளிர் காட்டியிருக்கிறார்கள். ஜனவரி 26 அன்று சேலம் மாநகரம் 
கண்ட மாநிலம் தழுவிய மகளிர் கலைவிழாவுக்கான விதையாகத் தஞ்சாவூரே திகழ்ந்திருக்கிறது. அதுபோன்று டாக்டர் அம்பேத்கர் கல்வி, வேலைவாய்ப்பு மையத்தை 5 மையங்களில் உருவாக்கி வங்கித் தேர்வுக்கான பயிற்சியை அளித்த அண்மைய செயல்பாடும் குறிப்பிடத்தக்கது.

இப்படி தஞ்சாவூர்க் கோட்டத்தின் முன்முயற்சிகளைப் பட்டியல் இட்டால் அது நீண்டுகொண்டே செல்லும். ஆனால் நீள்கிற வரலாற்றின் கண்ணிகள் எங்கும் தொய்யாது, விடுபடாது அடுத்தடுத்த தலைமுறையால் பாதுகாக்கப்படுவது பெருமைக்கு உரியதாகும். தோழர் ஆர்.கோவிந்தராஜன், தோழர் கே.இலக்குவன், எஸ்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி, ஆர்.கருப்பையா  போன்ற மூத்த தலைவர்களின் 
பாரம்பரியம் இன்றைக்கும் உயிர்ப்போடும், உணர்வு பூர்வமானதாகவும் தொடர்கிறது.

தஞ்சை மண்ணை வளமாக்குகிற காவிரி நதியை விவசாயப்பெருங்குடி மக்கள் தங்கள் இதயத்திற்கு நெருக்கமாய் வைத்திருப்பது போல் தஞ்சை கோட்ட காப்பீட்டு கழக  ஊழியர் சங்கமும் இன்சூரன்ஸ் ஊழியர் நெஞ்சங்களில் என்றென்றும் குடியிருக்கும்.

பொன்விழா நிறைவில் இன்னும் எந்த புதிய துவக்கத்தை தஞ்சை தரப்போகிறது என்ற எதிர்பார்ப்போடு,


Monday, February 6, 2012



Daily Thanthi

ÚYÛXŒ¿†R BV†R iyP•

CÁsWÁÍ F³VŸL· ÚYÛX Œ¿†R ÚTÖWÖyP•
28-‹ÚR‡ SPef\‰


‡ண்|eL¥,‘ப் 5

T¥ÚY¿ ÚLÖ¡eÛLLÛ[ Y¦¿†‡, SÖ| Rµ«V A[«¥ Y£f\ 28-‹ÚR‡VÁ¿ CÁsWÁÍ F³VŸL· ÚYÛX Œ¿†R ÚTÖWÖyP†‡¥ D|T|fÁ\]Ÿ.

ÚYÛXŒ¿†R BV†தக்  iyP•

«ÛXYÖp EVŸÛY Ly|T|†R ÚYண்|•, ÙTÖ‰†‰Û\ Œ¿Y]jLÛ[ TÖ‰LÖeL ÚYண்
|• GÁT] E·¸yP T¥ÚY¿ ÚLÖ¡eÛLLÛ[ Y¦¿†‡, Y£f\ 28-‹ÚR‡VÁ¿ C‹‡VÖ ˜µY‰• CÁsWÁÍ F³ ண் · ÚYÛX Œ¿†R ÚTÖWÖyP†‡¥ D|TP E·[]Ÿ.

C‹R ÚYÛX Œ¿†R• ÙRÖPŸTÖ] BV†R iyP•, ‡ண்|eL¥ TZ ÚWÖyz¥ E·[      G¥.I.p.›Á 1-Y‰ fÛ[ A¨YXL†‡¥ ÚS¼¿ SP‹R‰. iyP†‰eh U‰ÛW ÚLÖyP ‰ÛQ RÛXYŸ YÖtpSÖRÁ RÛXÛU RÖjf]ÖŸ.

ÚTÖ]Í NyP EoNYW•“

C‹R iyP†‡¥ AfX C‹‡V LÖப்’y| LZL F³VŸ NjL†‡Á ÙRÁUண்PX ÙTÖ‰o ÙNVXÖ[Ÿ L.rYÖ– SÖRÁ p\“ «£‹‡]WÖL LX‹‰ ÙLց| ÚTp]ÖŸ. ‘Á]Ÿ AYŸ      Œ£TŸL¸P• i½VRÖY‰:-

Yjf, CÁsWÁÍ E·¸yP ÙTÖ‰†‰Û\ Œ¿Y]jLÛ[ TÖ‰LÖeL ÚYண்|•. AÛ]Y£eh• ÚTÖ]Í ÚYண்|•. TÁ]Öy| ÙRÖ³¼NÖÛXL¸¥ ÙRÖ³¼ NjLjL· AÛUeL E¡ÛU YZjL ÚYண்|•. «ÛXYÖp EVŸÛY U†‡V, UÖŒX AWrL· Ly|T|†R ÚYண்
|•.

10 ÚLÖz ÚTŸ TjÚL¼“

C‹‡VÖ ˜µY‡¨• LÖ¦VÖL E·[ rUÖŸ 10 XyN• T‚›PjLÛ[ U†‡V, UÖŒX AWrL· ŒWT ˜ÁYW ÚY|• GÁT] E·¸yP ÚLÖ¡eÛLLÛ[ Y¦¿†‡ SÛPÙT\ E·[ ÚYÛX Œ¿†R ÚTÖWÖyP†‡¥ SÖ| ˜µY‰• 10 ÚLÖz ÚTŸ TjÚL¼L E·[]Ÿ. C‹R ÚYÛX Œ¿†R ÚTÖWÖyP†‰eh U†‡V, UÖŒX AWr F³VŸLº• BRW° A¸†‰·[]Ÿ.

EXL• ˜µY‡¨• E·[ TÁ]Öy| RÂVÖŸ Œ¿Y]jL· ™PTy| Y£fÁ\]. LP‹R 3 B|L¸¥ AÙU¡eLÖ«¥ Uy|• 400 YjfL· ‡YÖXÖf «yP]. AWr ™XR]• ™X• C‹R YjfL· ÙNV¥Ty| Y£fÁ\].

B]Ö¥ C‹‡VÖÛY ÙTÖ¿†RYÛW›¥ YjfL· ÚRpV EÛPÛU BeLTy| 42 B|L· Bf•, J£ Yjf iP ‡YÖXÖL«¥ÛX. ‡YÖXÖ] pX RÂVÖŸ YjfLÛ[ iP AWÚN H¼¿ SP†‰f\‰. UeL¸Á ÚN–“ TÖ‰LÖeLT|f\‰.

35 ÚLÖz UeLºeh TÖ‰L֐“

B· L֐’y| LZL• E£YÖeLTy| 55 B|L· Bf «yP‰. TÖ¦pRÖWŸLºeh TQ• Ty|YÖPÖ ÙNšY‡¥, EXL†‡ÚXÚV ˜RÁ Œ¿Y]UÖL B· L֐’y| LZL• ÙNV¥Ty| Y£f\‰. C‹‡VÖ«¥ 35 ÚLÖz UeLºeh CÁsWÁÍ TÖ‰L֐“ E·[‰.

CÚRÚTÖ¥ ÚRpV ÙS|tNÖÛX, ÙW›¥ÚY, –ÁNÖW•, hzŸ E·¸yP SÖyzÁ LyPÛU“ Y[Ÿopeh B· L֐’y|eLZL• AzTÛPVÖL «[jhf\‰. C‰ÚTÖÁ\ LyPÛU“ T‚Lºeh ¤.11 XyN• ÚLÖz YZjLTy| C£ef\‰.
CªYÖ¿ rYÖ–SÖRÁ i½]ÖŸ.


ÚTyz›Á ÚTÖ‰ G¥.I.p. fÛ[ ÙNVXÖ[ŸL· RÄÐÚLÖz, RjLÚY¥ E·¸yP ŒŸYÖfL· EPÁ C£‹R]Ÿ.

Wednesday, February 1, 2012

கிடைக்காத வேலை, இறங்காத விலை, எப்படி வைக்கமுடியும் அடுப்படியில் உலை


பிப்ரவரி-28 , நாடு தழுவிய வேலைநிறுத்தம் 

*காக்க... காக்க .. பென்சன்  காக்க 
*பொதுத்துறை காக்க...
*விலைவாசி உயர்விலிருந்து மக்களைக்  காக்க 

"ஒய் திஸ் கொலவெறி" என்று அரசாங்கத்திடம் கேட்கவேண்டும் . விவசாயிகளை,
சிறு வணிகர்களை , பொதுத்துறையை என்று அடுத்தடுத்து காவு கேட்கிற 
உலகமயக் கொள்கைகள் பாய்ந்திருக்கிறது பென்சன் மீதும் . இலவசங்களே 
வேண்டாம், விலைவாசி உயராமல் பார்த்துக் கொண்டாலே போதும் என்று 
நடுத்தர, சாமானிய மக்களின் அலறல்.

120 ஆண்டுகளாய் உழைப்பாளி  மக்கள் அனுபவித்து வருகிற பென்சனுக்கு 
பேராபத்து. ஒய்வு பெற்றால் என்ன கிடைக்கும், கிடைக்குமா, பென்சனுக்கு 
காட்டிய பணமாவது திரும்பி வருமா என்று எந்த உத்தரவாதமும் இல்லாத 
புதிய பென்சன் திட்டம். காலமெல்லாம் உழைத்து சம்பாதித்த சேமிப்பெல்லாம் 
பங்குச் சந்தை சகுனிகளுக்கா?

2008 லிருந்து 2011 க்குள்ளாக 400 வங்கிகள் அமெரிக்காவில் திவால். அடித்த 
புயலில் அசையாமல் நின்ற இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளை வெட்டி 
வீழ்த்த நினைக்கும் உள்ளூர்க் கோடாலிகளாக இநதிய ஆட்சியாளர்கள். 
சொந்த நாடுகளில் நம்பிக்கையை இழந்த அந்நிய இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு 
இங்கே வெத்திலை பாக்கு வைத்து அழைக்கிற அபாயம். சேமிப்பில் விருந்து 
தரலாம். ஆனால் இந்திய மக்களின் சேமிப்பையே விருந்தாக்க நினைக்கிறார்கள் 
மன்மோகன் வகையறாக்கள். 

காலிப்பணியிடங்கள் லட்சக் கணக்கில்... தனியார் மயமாவதால் இட ஒதுக்கீடும் 
களப்பலியாய்.. மாதச் சம்பளம் 2000 க்கும், 3000 க்கும் அல்லாடும் கோடானுகோடி 
உழைப்பாளிகள் உள்ள நாட்டில் அரசு துறைகளிலும் அத்தக்கூலிகள். தொகுப்பூதியம்,
மதிப்பூதியம் என்ற பெயரால் கசக்கிப் பிழியப்படும் அவலம். பஞ்சப்படி என்றால் 
என்னவென்றே தெரியாத 35 கோடி அமைப்பு சாராத் தொழிலாளர்கள். முப்பது 
ரூபாயை பஸ்சுக்கே அழுதுவிட்டு சாப்பாடுக்கும், சந்ததிகளின் கல்விக்கும்,
நோய் நொடிக்கும் எங்கேதான் போவார்கள் பாவம் அவர்கள்.
சந்தைதான் விலைகளைத் தீர்மானிக்கும் என்று பெற்ற குழந்தைகளை நட்டாற்றில் 
விடுகிற குந்தியாக அரசாங்கம்.

இருக்கிற உரிமைகளும் பறிப்பு. பன்னாட்டுக் கம்பெனிகளின் வாசல்களில் எந்தக் 
கொடியும் கூடாதாம். எந்த சப்தமும் கூடாது. அமைச்சர்கள் சொன்னாலும் தூக்கி 
எறிகிற ஆணவம். சட்டம் என் கையில் என்று தெனாவட்டாகத் திரிகிற பெரும் 
தொழிலகங்களுக்கு விசிறி வீசுகிற ஆட்சியாளர்களும் அதிகார வர்க்கமும்.
நூற்றுக்கணக்கானவர்கள் கூடுகிற மதுபானக் கடைகள் பிரதான சாலைகளில்.
ஆனால் ஜனநாயக வழியில் உண்ணா நோன்பு என்றால் மக்கள் வாசனையே 
இல்லாத பொட்டல்களில்.

தாவிக் குதிக்கிறது ஆண்டுக்காண்டு பில்லியனர்களின் சொத்து. ஆனால் போனஸ் 
உச்சவரம்போ நிலையாய் நிற்கிறது அதே இடத்தில். பணிக்கொடை வரம்புகளும் 
வளையாபதிகளாய்.

அரசு ஊழியர்களே! ஆசிரியர்களே! பொதுத்துறை ஊழியர்களே! பிப்ரவரி 28 
வேலை நிறுத்தம் நமது எதிர்ப்பை, அரசின் போக்கிற்கான மறுப்பை வலுவாகத் 
தெரிவிக்கிற எழுச்சி மிக்க இயக்கம். வால் ஸ்ட்ரீட்டை ஆக்கிரமிப்போம் என்று 
துவங்கி உலகின் 1500 நகரங்களில் உழைப்பாளி மக்களின் கரங்களும், குரல்களும்
ஓங்கி இருக்கிற காலம். நாமும் இணைவோம். பிப்ரவரி 28 வேலைநிறுத்தம் அன்று 
தேசத்தின் சக்கரங்கள் நிற்கட்டும்.தவறான பாதையில் ஓடாமல் சரியான திசை 
நோக்கி திருப்புவதற்கு.

பெரியோர்களே ! தாய்மார்களே! 
இது மக்கள் நலன் காக்கும் போராட்டம். ஒரே பிரம்புதான் உங்கள் முதுகையும், நம்
அனைவரின் முதுகுகளையும் பார்க்கிறது பதம். கிடைக்காத வேலை, இறங்காத விலை,
எப்படி வைக்கமுடியும் அடுப்படியில் உலை என்று அரசிடம் கேட்கிற போராட்டத்திற்கு 
தர வேண்டும் ஆதரவு. வரவேண்டும் கை கோர்த்து.
தயார்தானே நீங்கள். சந்திக்கும் ஒவ்வொருவரிடம் சொல்லுங்கள். இது நமக்கான 
போராட்டம். காக்க..காக்க.. நலன் காக்க..உரிமை காக்க..தேசம் காக்க..




பிப்ரவரி-28 , நாடு தழுவிய வேலைநிறுத்தம்




*காக்க... காக்க .. பென்சன்  காக்க 
*பொதுத்துறை காக்க...
*விலைவாசி உயர்விலிருந்து மக்களைக்  காக்க 

"ஒய் திஸ் கொலவெறி" என்று அரசாங்கத்திடம் கேட்கவேண்டும் . விவசாயிகளை,
சிறு வணிகர்களை , பொதுத்துறையை என்று அடுத்தடுத்து காவு கேட்கிற 
உலகமயக் கொள்கைகள் பாய்ந்திருக்கிறது பென்சன் மீதும் . இலவசங்களே 
வேண்டாம், விலைவாசி உயராமல் பார்த்துக் கொண்டாலே போதும் என்று 
நடுத்தர, சாமானிய மக்களின் அலறல்.

120 ஆண்டுகளாய் உழைப்பாளி  மக்கள் அனுபவித்து வருகிற பென்சனுக்கு 
பேராபத்து. ஒய்வு பெற்றால் என்ன கிடைக்கும், கிடைக்குமா, பென்சனுக்கு 
காட்டிய பணமாவது திரும்பி வருமா என்று எந்த உத்தரவாதமும் இல்லாத 
புதிய பென்சன் திட்டம். காலமெல்லாம் உழைத்து சம்பாதித்த சேமிப்பெல்லாம் 
பங்குச் சந்தை சகுனிகளுக்கா?

2008 லிருந்து 2011 க்குள்ளாக 400 வங்கிகள் அமெரிக்காவில் திவால். அடித்த 
புயலில் அசையாமல் நின்ற இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளை வெட்டி 
வீழ்த்த நினைக்கும் உள்ளூர்க் கோடாலிகளாக இநதிய ஆட்சியாளர்கள். 
சொந்த நாடுகளில் நம்பிக்கையை இழந்த அந்நிய இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு 
இங்கே வெத்திலை பாக்கு வைத்து அழைக்கிற அபாயம். சேமிப்பில் விருந்து 
தரலாம். ஆனால் இந்திய மக்களின் சேமிப்பையே விருந்தாக்க நினைக்கிறார்கள் 
மன்மோகன் வகையறாக்கள். 

காலிப்பணியிடங்கள் லட்சக் கணக்கில்... தனியார் மயமாவதால் இட ஒதுக்கீடும் 
களப்பலியாய்.. மாதச் சம்பளம் 2000 க்கும், 3000 க்கும் அல்லாடும் கோடானுகோடி 
உழைப்பாளிகள் உள்ள நாட்டில் அரசு துறைகளிலும் அத்தக்கூலிகள். தொகுப்பூதியம்,
மதிப்பூதியம் என்ற பெயரால் கசக்கிப் பிழியப்படும் அவலம். பஞ்சப்படி என்றால் 
என்னவென்றே தெரியாத 35 கோடி அமைப்பு சாராத் தொழிலாளர்கள். முப்பது 
ரூபாயை பஸ்சுக்கே அழுதுவிட்டு சாப்பாடுக்கும், சந்ததிகளின் கல்விக்கும்,
நோய் நொடிக்கும் எங்கேதான் போவார்கள் பாவம் அவர்கள்.
சந்தைதான் விலைகளைத் தீர்மானிக்கும் என்று பெற்ற குழந்தைகளை நட்டாற்றில் 
விடுகிற குந்தியாக அரசாங்கம்.

இருக்கிற உரிமைகளும் பறிப்பு. பன்னாட்டுக் கம்பெனிகளின் வாசல்களில் எந்தக் 
கொடியும் கூடாதாம். எந்த சப்தமும் கூடாது. அமைச்சர்கள் சொன்னாலும் தூக்கி 
எறிகிற ஆணவம். சட்டம் என் கையில் என்று தெனாவட்டாகத் திரிகிற பெரும் 
தொழிலகங்களுக்கு விசிறி வீசுகிற ஆட்சியாளர்களும் அதிகார வர்க்கமும்.
நூற்றுக்கணக்கானவர்கள் கூடுகிற மதுபானக் கடைகள் பிரதான சாலைகளில்.
ஆனால் ஜனநாயக வழியில் உண்ணா நோன்பு என்றால் மக்கள் வாசனையே 
இல்லாத பொட்டல்களில்.

தாவிக் குதிக்கிறது ஆண்டுக்காண்டு பில்லியனர்களின் சொத்து. ஆனால் போனஸ் 
உச்சவரம்போ நிலையாய் நிற்கிறது அதே இடத்தில். பணிக்கொடை வரம்புகளும் 
வளையாபதிகளாய்.

அரசு ஊழியர்களே! ஆசிரியர்களே! பொதுத்துறை ஊழியர்களே! பிப்ரவரி 28 
வேலை நிறுத்தம் நமது எதிர்ப்பை, அரசின் போக்கிற்கான மறுப்பை வலுவாகத் 
தெரிவிக்கிற எழுச்சி மிக்க இயக்கம். வால் ஸ்ட்ரீட்டை ஆக்கிரமிப்போம் என்று 
துவங்கி உலகின் 1500 நகரங்களில் உழைப்பாளி மக்களின் கரங்களும், குரல்களும்
ஓங்கி இருக்கிற காலம். நாமும் இணைவோம். பிப்ரவரி 28 வேலைநிறுத்தம் அன்று 
தேசத்தின் சக்கரங்கள் நிற்கட்டும்.தவறான பாதையில் ஓடாமல் சரியான திசை 
நோக்கி திருப்புவதற்கு.

பெரியோர்களே ! தாய்மார்களே! 
இது மக்கள் நலன் காக்கும் போராட்டம். ஒரே பிரம்புதான் உங்கள் முதுகையும், நம்
அனைவரின் முதுகுகளையும் பார்க்கிறது பதம். கிடைக்காத வேலை, இறங்காத விலை,
எப்படி வைக்கமுடியும் அடுப்படியில் உலை என்று அரசிடம் கேட்கிற போராட்டத்திற்கு 
தர வேண்டும் ஆதரவு. வரவேண்டும் கை கோர்த்து.
தயார்தானே நீங்கள். சந்திக்கும் ஒவ்வொருவரிடம் சொல்லுங்கள். இது நமக்கான 
போராட்டம். காக்க..காக்க.. நலன் காக்க..உரிமை காக்க..தேசம் காக்க..