Friday, January 28, 2011

பொருளியல் அரங்கம்
-க.சுவாமிநாதன்


எல்லோரும் தட்டும் சீனாவின் கதவு

எல்லா நாடுகளும் உலக வங்கியின் கதவு களைத் தட்டுவதைத்தான் பார்த்திருக்கிறோம். ஆனால் சீனாவின் கதவுகளை உலக வங்கி தட்டுவது ஏன் தெரி யுமா?

கடந்த இரண்டு ஆண்டு களாக வளர்முக நாடுக ளுக்கு சீனா வழங்கி யுள்ள கடன் உலக வங்கி தந்துள்ள கடன் தொகை யை விட அதிகம் என பைனான்சி யல் டைம்ஸ் இதழ் மதிப்பிட்டுள் ளது.. சீன வளர்ச்சி வங்கியும், ஏற்றுமதி-இறக்குமதி வங்கியும் 2009 - 10 ஆம் ஆண்டில் 110 பில்லியன் டாலர்களை (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.4 லட்சத்து 95000 கோடிகள்) கடனாக வழங்கி உள்ளன. இதே காலத்தில் உலக வங்கி 100 பில்லியன் டாலர்களையே (ரூ.4 லட்சத்து 50000 கோடிகள்) கடனாக வழங்கி உள்ளது.

ரஷ்யா, வெனிசுலா, பிரேசில் ஆகிய நாடுக ளோடு எண்ணெய்க்கான கடனாகவும் ( டுடீஹசூளு குடீசு டீஐடு ) கானா, அர்ஜெண்டினா ஆகிய நாடுகளின் ஆதாரத் தொழில் வளர்ச்சிக்காகவும், இந்திய நிறுவனங்களின் மின் இயந்திரங்களுக்காக வும் இக்கடன்கள் வழங்கப் பட்டுள்ளன.

உலக வங்கியோ, மற்ற கடன் நிறுவனங்களோ போடுகிற கடுமையான நிபந்தனைகள் இல்லாத தால் எல்லோரும் சீனக் கதவைத் தட்டு கிறார்கள். இதனால் உலக வங்கியும் சீனாவின் காலிங் பெல் லை அழுத்துகிறது. போட்டியைச் சமா ளிக்க சீனாவுடன் பேச்சு வார்த் தை நடத்தப் போவ தாக அது அறிவித்திருக்கிறது.

போன மச்சான்

இந்தியப் பங்குச் சந்தைக்கு 2011 ன் துவக்கம் மிகச் சோகமாகவே அமைந்திருந்தது. இந்த ஆண்டின் முதல் வணிக நாள் ஜனவரி 3 ஆகும். அதிலிருந்து 5 நாட்களுக்குள் முதலீட்டாளர் செலவு மதிப்பு 5 லட்சம் கோடி சரிந்தது. ஐந்து நாட்களில் 1337 புள்ளிகள் வரை மும்பை சென்செக்ஸ் வீழ்ந்தது. ஜனவரி 7 ஆம் நாள் இறுதியில் மொத்த பங்கு மதிப்பு 68 ,87 ,194 கோடிகளாக இருந்துள்ளது. ( பொருளாதார மாணவர்கள் இப்புள்ளி விவரத்தை குறித்துக் கொள்ளலாம்).

மும்பை சென்செக்ஸ் கணக்கிடப் படுகிற 30 பெரிய கம்பெனிகளின் பங்குகளின் வீழ்ச்சி மட்டும் ரூ. 2 லட்சம் கோடிகள். ரிலையன்ஸ், ஒஎன்ஜிசி, டிசிஎஸ், இன்போசிஸ், கோல் இந்தியா, ஸ்டேட் பேங்க் ஆகிய வற்றின் பங்குகள் ரூ. 1 லட்சம் கோடி வரை சரிந்தன. அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் வழக்கம் போல பங்குச் சந்தை சரிய ஆரம்பித்தவுடன் நடையைக் கட்டினார்கள்.

ஜனவரி 20 அன்று 68 சென்செக்ஸ் புள்ளிகள் உயர்ந்தவுடன் மீண்டும் 19000 புள்ளிகளை கடந்திருக்கிறது. 2008 ஜனவரியில் தொட்ட 21000 புள்ளிகளை 3 ஆண்டுகளுக்குப் பிறகு இன்னும் எட்ட முடியவில்லை.ஆனாலும் 19000 ஐத் தொட்ட வுடன் போன மச்சான்கள் பூ மணத்தோடு திரும்ப ஆரம்பித்து விட்டார்கள்.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள்தான்.

அப்பாடா!

மாதச் சம் பளம் வாங்குப வர்களுக்கு வருமான வரி படிவங்களை சமர்ப்பிப்பதில் இருந்து விலக்கு அளிப்பது பற்றி பரிசீலிப் பதாக மத்திய நேரடி வரி ஆணையத்தின் தலைவர் சுதிர் சந்திரா தெரிவித்துள்ளார்.

இந்திய நாட்டில் வருமான வரி செலுத் தும் மூன்றரைக் கோடி பேரில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் மாதச் சம்பளக்காரர்கள் தான். இவர்களின் வருமான விவரங்கள் எல்லாம் அவர்களின் நிர்வாகங்கள் வசமே இருக்கும். இம் முன்மொழிவு சில ஆண்டு களுக்கு முன்பே விவாதிக்கப்பட்டு பின்னர் கிடப்பில் போடப்பட்டுவிட்டது.

இப்போதாவது ஜூலை 31 க்கு முன் பாக அடித்துப் பிடித்து ஓடிப்போய் வருமான வரி அலுவலகத்தில் வரிசையில் நிற்கும் பரபரப்பிற்கு விடிவு கிடைக்குமா என்று பார்க்கலாம்!

அரைக் கிணறு

கிராமங்களை நோக்கிய வங்கிச் சேவை என்கிற ரிசர்வ் வங்கியின் திட்டம் கர்நாடக மாநிலத்தில் அரைக் கிணற்றைக் கூட தாண்டவில்லை. 2000 மக்கள் வாழும் அனைத்துக் கிராமங் களிலும் வங்கிக் கிளைகளை அமைப் பது என்பதே திட்டம்.

மார்ச் 2011 க்குள் 2253 கிராமங்களில் வங்கிக் கிளைகளை திறப்பது என்பது இலக்கு. டிசம்பர் 31 வரை 1075 கிராமங் களில் மட்டுமே வங்கிக் கிளைகள் துவங்கப்பட்டுள்ளன. இது நிர்ணயிக் கப்பட்ட இலக்கில் 48 சதவீதம்தான்.

முதல் கிணறுக்கே இந்த பாடு ! 2012 மார்ச் இலக்கான 3395 கிராமங்களில் வங்கிக் கிளைகள் திறப்பது என்ற இலக்கை நோக்கி எப்படி முன்னேறுவது?

Wednesday, January 19, 2011

அந்த டிசம்பர் 25!


டிசம்பர் 25ம் தேதி என்றால் உலக கிறிஸ்தவர்களின் புனிதநாள் என்பது வரலாற்றுப் பதிவாகி 2010 ஆண்டுகளை உலகம் கடந்துவிட்டது. 1968 டிசம்பர் 25, வெண்மணி நிகழ்வு தமிழக உழைப்பாளி மக்கள், குறிப்பாக கிராமப்புறத்து உழைப்பாளிகளின் மனதில் பதிவாகி, இப்போது வரலாற்றுப் பதிவாக மாறிவிட்டது. இயேசுவின் பிறப்பை அறிவிக்க வான் மண்டலத்தில் தோன்றிய ஒளி வெள்ளம் பூமியை நோக்கி நகர்ந்து, நகர்ந்து பெத்லகேமில் ஒரு மாட்டுத் தொழுவத்தில் வந்து நிலைகொண்டது என்பது பைபிளின் கதை. ஆனால் 1968 டிசம்பர் 25 இரவு 12 மணிக்கு கீழத்தஞ்சை வெண்மணியில் விவசாயக் கூலி தொழிலாளி இராமய்யாவின் குடிசையில் நிலப்பிரபுக்களால் வைக்கப்பட்ட தீ எரிந்து வான் மண்டலத்தையே சிவப்பு வெளிச்சமாக்கியது. அந்த குடிசைக்குள் நெருப்பில் வெந்து துடித்த 44 தலித் விவசாய கூலித்தொழிலாளிகளின் மரண ஓலமும் விண்ணைத் தொட்டது.


இயேசு பிறப்பிற்குப் பின்பு புதிய கால நிர்ணயம், வரலாற்றில் உருவாக்கப்பட்டது. அது இயேசு பிறப்பிற்கு முன், இயேசு பிறப்பிற்குப் பின் என குறிப்பிடும் வகையில் கி.மு., கி.பி., என்ற காலவரையறை உருவாக்கப்பட்டது. அதே போல் கீழத்தஞ்சையில் விவசாயத் தொழிலாளிகள் குறிப்பாக தலித் பண்ணை அடிமைத் தொழிலாளிகளின் வாழ்க்கையில் 1968 வெண்மணி நிகழ்வுக்கு முன், வெண்மணி நிகழ்வுக்குப் பின் என்று இரண்டு கட்டமாக வரலாற்றை பிரித்துச்சொல்லும் மாற்றங்களை உருவாக்கியது. நிலப்பிரபுத்துவ ஆதிக்கமும், பண்ணை அடிமை சமூக அமைப்புமாகத்தான் கீழத்தஞ்சை 1968 வரை நீடித்தது. இந்த நடைமுறை காவிரி டெல்டா பகுதி முழுவதும் பரவியிருந்தது என்று சொன்னால் அது மிகையாகாது.

ஒரு பண்ணைத் தொழிலாளியின் வாழ்க்கை, பிறப்பில் இருந்து இறப்பு வரை அவனாலோ அவனது பெற்றோராலோ எதுவும் தீர்மானிக்கப்படுவதில்லை. அவனின்றி அணுவும் அசையாது என்பது ஆன்மீகவாதிகளின் கருத்து. ஆனால் எந்த ஆன்மீகவாதிகளும் கடவுளைக் கேட்டு உத்தரவு பெற்று எதையும் செய்வதில்லை. தன் இஷ்டத்திற்கு அனைத்தையும் செய்துவிட்டு என் செயல் எல்லாவற்றையும் கடவுளே தீர்மானிக்கிறார் என கடவுளின் மீது பழிபோடும் போக்கே நடக்கிறது. ஆனால் ஒரு பண்ணை அடிமையின் வாழ்க்கை அப்படியல்ல.

ஆண்டையின் அனுமதியின்றி ஒரு பண்ணைத் தொழிலாளி துரும்பைக்கூட அசைக்க முடியாது. அசைக்கக்கூடாது. அப்படி மீறி செயல்பட்டால் இந்தப் பூவுலகில் அவனுக்கு வாழ்க்கை இல்லை. ஒரு பண்ணை அடிமை அடித்துக் கொல்லப்பட்டால் கொலை செய்த ஆண்டையின் மீது சட்டம் எந்த நடவடிக்கையையும் எடுக்காது. பல நூறு ஆண்டுகள் இருந்த இந்த நடைமுறை இறுக்கத்திற்கு ஒரு தளர்ச்சி ஏற்படத்துவங்கியது 1935க்கும் 1945க்கும் இடைபட்ட காலத்தில்தான்.

சுதந்திரப்போராட்ட காலத்தில் ஜமீன்தாரி நிர்வாக முறை, சமஸ்தான ஆட்சி முறை பிரிட்டிஷ் அரசு ரெவின்யூ நிர்வாக முறை இவைகளுக்கு எதிராக விவசாயிகள், விவசாயத் தொழிலாளிகள் மத்தியில் ஏற்பட்ட எதிர்ப்பும், கலவர நடவடிக்கைகளுமே ஏழை, எளிய விவசாய கூலித்தொழிலாளர்கள் மத்தியில் அடக்குமுறைகளுக்கு எதிரான போராட்ட உணர்வுகளை கிளப்பியது. தேசம் முழுவதும் இதுபோன்ற போராட்ட அதிர்வுகள் ஏற்பட்டதன் வேகம் தஞ்சை மண்ணிலும் பரவியது. இந்த அதிர்வுகளை வேகப்படுத்தி, தூண்டுதல் செய்து பாதிக்கப்பட்டோரை வீதியில் இறக்கியது செங்கொடியும், 1944ல் தென்பரையில் உருவாக்கப்பட்ட விவசாயிகள் சங்கமும்தான்.

குத்தகை வாரம், மரக்கால் மாற்றம் எனத்துவங்கி வேலை நேர நிர்ணயம், கூலி நிர்ணயம், கூலி உயர்வு என பல்வேறு முழக்கங்களோடு விவசாயிகள், விவசாயத் தொழிலாளிகளின் போராட்டம் உசுப்பிவிடப்பட்டது. பொருளாதார பிரச்சனைகளை முன்னிறுத்தி துவக்கப்பட்ட போராட்டங்கள், காலப்போக்கில் தலித்மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராகவும் பண்ணை அடிமை முறைக்கு எதிராகவும் கிளம்பியது. ஒரு தலித்திடம் ‘உன்னை அடித்தால் திருப்பி அடி’ என்ற தைரியத்தை கொடுத்த தலைவன், செங்கொடி இயக்கத்தலைவன் தோழர் பி.சீனிவாசராவ்தான்.

இந்த முழக்கம் தஞ்சை தரணி முழுவதும் பரவியது. ஆண்டைகளுக்கு இது மின்சாரத்தை பாய்ச்சியது போல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது விவசாயத் தொழிலாளிகள், தலித் தொழி லாளிகளுக்கும் நிலப்பிரபுக்களுக்குமான வர்க்கப்போராட்டமாக மாறியது. பண்ணையாருக்கும் நிலப்பிரபுகளுக்கும் அரசின் காவல்துறையும், சட்டமும் துணை போனது. உழைப்பாளிகளுக்கும் தலித்துகளுக்கும் பண்ணை அடிமைகளுக்கும் செங்கொடியும் அதன் தலைவர்களும் உறுதுணையாக நின்றனர். தோழர் சீனிவாசராவ், அமிர்தலிங்கம், பி.எஸ்.தனுஷ்கோடி, ஏ.கே.சுப்பையா, மணலி கந்தசாமி, கே.ஆர்.ஞானசம்பந்தம், என்.ஜி.முருகையன், கோ.வீரய்யன், வெங்கடேச சோழகர், ஏ.எம்.கோபு, ஏ.கே.கணேசன், சமீபத்தில் மறைந்த தோழர் வேதையன் இப்படிப்பட்ட செங்கொடி இயக்க படையின் தளபதிகள் உயிரை துச்சமென மதித்து பண்ணை அடிமைகளையும், தலித் மக்களையும் திரட்டிப் போராடி, புதிய மாற்றங்களை நோக்கி செல்வது என்பது உறுதியானது. தமிழகத்தை ஆண்ட காங்கிரஸ் அரசு மற்றும் நிர்வாகத்தின் நிலப்பிரபுகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டை உழைப்பாளி களின் போராட்டம் தோலுரித்துக்காட்டியது.

தலித்துகளை சாட்டையால் அடிக்கக்கூடாது. சாணிப்பால் குடிக்க சொல்லக்கூடாது என்று 1964ல் மன்னார் குடியில் ஒரு முத்தரப்பு ஒப்பந்தம் போடப்பட்டது. இதனால் பண்ணை முதலாளிகள் தங்களது அதிகாரமே போகிறதே என்ற ஆவேசத்தில் நெல் உற்பத்தியாளர்கள் சங்கம் என்ற போர்வையில் இருஞ்சூர் கோபாலகிருஷ்ண நாயுடு தலைமையில் மாவட்டம் முழுவதும் ஒன்று திரண்டார்கள். கூலித்தொழிலாளிகளுக்கும் தலித் தொழிலாளிகளுக்கும் எதிரான அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டது.

சிவப்புக்கொடியை இறக்கு, பச்சைக் கொடியை ஏற்று என்று விவசாயத் தொழிலாளிகளையும் குத்தகை விவசாயிகளையும் மிரட்டினர். மீறியவர்களின் மீதெல்லாம் தாக்குதல் தொடுக்கப்பட்டது. இக்காலத்தில்தான் 1968ல் அரைப்படி நெல் அறுவடைக்கூலியை உயர்த்தித்தர வேண்டும் என வலியுறுத்தி மாவட்டம் முழுவதும் வேலை நிறுத்தம் நடைபெற்றது. நெல் உற்பத்தியாளர்கள் இப்போராட்டத்தை உடைப்பதற்காக எதையும் செய்யத் தயாரானார்கள். இந்த ஆத்திரத்தின் உச்சகட்டம்தான் வெண்மணி தீ வைப்பு.

எந்தப் பிரச்சனைக்கும் ஒரு தீர்வு உண்டு என்று வழக்கில் ஒரு சொல் உள்ளது. பண்ணை அடிமை, தலித் ஒடுக்குமுறை, ஆண்டானின் ஆதிக்கம் இவையனைத்திற்கும் சேர்த்து வெண்மணி தீ வைப்பு ஒரு முடிவை ஏற்படுத்தியது. நிலப்பிரபுத்துவ வர்க்கம், தீ வைத்துக் கொளுத்திவிட்டால், பிரச்சனை தீர்ந்துவிடும் என்று கருதினர். ஆனால் அதுவே எதிர்விளைவுகளை உருவாக்கியது. பூகம்பத்திற்கு பின்பு புதிய மாற்றம் ஏற்படும் என்பதுபோல், வெண் மணி தீவைப்பின் பிரளயம் மாபெரும் மாற்றங்களை தஞ்சை மண்ணில் கொண்டுவந்தது.

நிலப்பிரபுக்களின் நெல் உற்பத்தியாளர் சங்கம் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. பண்ணை அடிமை முறை முற்றாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. சாணிப்பால், சாட்டையடி பழைய கதையாக மாறியது. கீழத்தஞ்சைக்கென ஒரு கூலிச்சட்டம் அமலுக்கு வந்தது. குத்தகைதாரர் பாதுகாப்புச்சட்டம் நிரந்தரமானது. 1968க்கு முன்பு ஒரு அடி கூட சொந்த இடமில்லாத தலித்துகள், 1968க்குப் பின் இந்த 40 ஆண்டுகால இடைவெளியில் ஒன்றரை லட்சம் தலித் மக்கள் சுமார் 2லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு சொந்தக்காரர்களாக, உழவடைதாரர்களாக மாறியிருக்கிறார்கள். எனவே சாதிய ஒடுக்குமுறை, தலித்துகள் மீது நேரடி தாக்குதல்கள் பெருமளவு மறைந்துவிட்டது. 1968 டிசம்பர் 25 வெண்மணி பூகம்பம் தஞ்சையில் பல மாற்றங்களைச் செய்ததுடன் புதிய வரலாற்றையும் படைத்துள்ளது.

வெண்மணி தீயில் வெந்து கருகிய 44 தியாகிகளின் தியாகம் வீணாகவில்லை. செங்கொடி இயக்கத்தின் தலித் உழைப்பாளிகளும், விவசாயத் தொழிலாளிகளும் புதிய வரலாற்றை எழுதுவதற்கான போர்க்களத்தை உருவாக்கிச் சென்றுள்ளார்கள்.

- கட்டுரையாளர்: -ஏ.லாசர், மாநிலத்தலைவர், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம்

The day we never forget






aiiea logo REV GIF.gif


On the night of January 19, 1956,

the then Union Finance Minister, C.D. Deshmukh,

announced the nationalisation of the life insurance business,

and said that the nationalisation of life insurance

was a step further towards the

effective mobilisation of people's savings.


cd_deshmukh.jpg

C.D.Desh Mukh

The nationalisation of life insurance

is an important step in our march towards a socialist society.

Its objective will be to serve the individual as well as the state.

We require life insurance to spread rapidly

all over the country and

to bring a measure of security to our people.

nehru.gif

– Jawaharlal Nehru.

Insurance Nationalisation Day.JPG

LIC – a perfect jewel

“ What an extraordinary and marvelous organization LIC is…like no other – a perfect jewel ! – These were the glowing tributes paid by Prof. Noel Machado while concluding his research paper on LIC.

Prof. Noel, a visiting Professor associated with Tata Institute of Social Sciences and other reputed institutions in not the first person to recognize the greatness of our institution. Nor, we are sure, he would be the last. Even the former Union Finance Minister P.Chidambaram had to acknowledge that LIC is a jewel in the crown. But what distinguishes prof.Noel from others is his unhesitating acknowledgement that LIC today is a marvelous organization because of the unimaginable commitment and hard work of its employees.

It is a matter of pride to all of us that today LIC has emerged as one of the premier financial institutions of the country. From 1956 till now, LIC has invested a whopping Rs.6,49,808 crores in nation building activities. While it contributed Rs. 184 crore to the 2nd Five Year Plan (1956-61), its contribution to 10th Five Year Plan (2002-2007) is Rs.3, 94,779 Crores and in the first two years of 11thFive Year Plan (2007-2009) up till now it has contributed Rs.2,18,510 Crores. On its initial investment of Rs.5 crores in the year 1956 the Union Govt. has received Rs.1031 Crore as its share of the valuation surplus for the year ending 31st March 2010. The total accretion to the Govt.’s kitty on this score alone adds up to Rs.8,957.40 Crore since inception. Even after one decade of opening up of the insurance sector, LIC remains the undisputed market leader holding on to a market share of 73.02 percent in number of policies and 70.12 percent in new business premium. The LIC has also an impressive share of 87.4% in the total assets under management. Insurance is a promise which needs to be fulfilled on the happening of eventuality. LIC settles 99.86% of the claims which is a world record. The track record of the private insurance companies on settlement of claims is abysmally low. The Compounded Annual Growth Rate (CAGR) of LIC during the last ten years has jumped to 30.24% from 15.23% since inception. LIC’s total policies have risen from 10.12 Crores to 32 Crores. LIC’s Life fund has grown from 1.54 lakh crore to 9.99 lakh crore. LIC’s asset base has grown from 1.60 lac crore to 12 lakh crore by September 2010. The new business premium which was Rs.5930 Crore in 2000 had reached Rs. 70891 Crore. Our Total Premium Income which was Rs.27489 Crore in 2000 has reached 1, 85,986 Crore. Thus, through this amazing performance, LIC has retained it’s domination over the market.

On the other hand, the performance of private insurance companies is far from satisfaction. Out of the 21 private insurance companies, 14 have reported operating losses and majority of them are yet to break even. More than 90% of the policies sold by private companies are ULIPs in which the risk is borne by the policy holder and the insurance companies earn their income through charges without undertaking any risk. The Economic Survey 2010 notes that in the infrastructure investment made by insurance companies as at the end of 2007-08, the public sector had a share of 94.3%. During the period 2005-2009, the public sector invested Rs.51252.9 crore and the private sector Rs.5850.5 crore in infrastructure sector. During this period, the private sector had a market share of around 30-35% in the new premium incomes while their share of investments in infrastructure was just around 10 percent. Commenting on this, the Economic Survey notes that “the private sector insurance companies are yet to make large scale investments in the infrastructure sector”.

The LIC continues its amazing domination with a market share of 72.01% in new premium and 73.45% in number of policies as on 30.11.2010.

In this scenario and also in spite of the sterling performance of the Life Insurance Corporation of India, the government, under pressure from the international finance capital, is making attempts to weaken the public sector. The two legislations that are pending in the parliament, the Insurance Laws (amendment) bill 2008 which seeks to increase the FDI cap in insurance from 26% to 49% and the LIC Act (amendment) Bill 2009 which seeks to increase the capital base of LIC from Rs. 5 Crores to 100 crores are steps to weaken public sector LIC.

The insurance employees organized under the banner of AIIEA are committed to strengthen the public sector insurance industry and to the cause of 34 crore policyholders of LIC of India. AIIEA demands the Government of India to drop the moves to increase the FDI cap in insurance industry and also to increase the capital base of LIC from 5 Crore to 100 Crore (which paves way for disinvestment of LIC). AIIEA also demands the Government of India to take all the steps to further strengthen the Public Sector LIC.

protect Nationalised Insurance Industry.JPG
Designed by:

GeeVee gif.gif Rajahmundry






Saturday, January 15, 2011

பொருளியல் அரங்கம்- க. சுவாமிநாதன்

அடிக்கரும்பு யாருக்கு ?

* வறுமை என்றாலே நினைவுக்கு வருவது ஒரிசாவின் காலகண்டி மாவட்டம்.அங்கு மகாத்மாகாந்தி தேசிய கிராம வேலை வாய்ப்புத் திட்டத்தில் குறைந்தபட்சக் கூலியான ரூ 90 மறுக்கப்படுவதாக டைம்ஸ் ஆப் இந்தியாவில் ( 19 .8 . 2010 ) செய்திகள் வந்தன. கரும்பின் சக்கை கூடக் கிடைக்காத பரிதாபத்திற்குரியவர்கள் இவர்கள்.

* இந்தியாவில் ஆண்டிற்கு ஒரு கோடிக்கு மேல் வருமானம் பெறுபவர்கள் 1149 பேர். இன்போசிஸ் நிறுவனத்தில் 50 லட்சத்திற்கு மேல் வருமானம் பெறுபவர்கள் 144 பேர். இவர்கள் கூட நடுக் கரும்புக்காரர்கள்தான்.

* இந்தியாவில் அதிகமான வருமானம் பெறுகிறவர் ஜிண்டால் ஸ்டீல் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி நவீன் ஜிண்டால்தான். ஆண்டு வருமானம் 69.75 கோடிகள். இதை விடுங்கள்! அமெரிக்காவில் அதிக வருமானம் வாங்குபவர் லிபர்ட்டி மீடியாவின் கிரகரி பி. மாபி என்கிற தலைமை நிர்வாகி. ஆண்டு வருமானம் ரூ 393 கோடிகள். ஒரு நாளைக்கு ஒரு கோடியே எட்டு லட்சம். அடிக் கரும்புக்காரர்கள் யாரென்று தெரிகிறதா?

இளநீருக்கு ஆபத்து

இளநீருக்கு வந்துவிட்டது ஆபத்து. கொக்க கோலாவும், பெப்சியும் பெரும் முதலீடுகளோடு இளநீர்ச் சந்தைகளில் குதித்துள்ளனர்.உலகில் பிலிப்பைன்ஸ், இந்தோனேசியாவுக்கு அடுத்தபடியாக இளநீர் காய்ப்பது இந்தியாவில்தானாம். பிரேசிலின் அமாகோகோ நிறுவனத்தை பெப்சி வாங்கியிருக்கிறது. 30 நாட்களுக்கு இளநீரை கெட்டுப்போகாமல் வைத்திருக்கிற தொழில் நுட்பம் ரூ 3 லட்சத்திற்கு கிடைக்கிறது. பாக்கெட்டுகளிலும், அலுமினிய கேன்களிலும் இளநீரை அடிக்கிற பரிசோதனைகள் மைசூரில் உள்ள ஓர் ஆய்வகத்தில் நடந்தேறி வருகின்றன.

சில நடுத்தர கம்பெனிகளும் வணிகத்தில் குதிக்கலாம்.ரோட்டோரங்களில் ட்ரை சைக்கிளில் இளநீர்க் காய்களை அடுக்கிக் கொண்டு அரிவாளோடு அண்ணே..அக்கா..என்று கூவி விற்பவர்களுக்கு ஆபத்துதான்!

கொசுறு

* இன்போசிஸ் நிறுவனத்தில் 2010 - 11 நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் 5311 ஊழியர் அதிகமாகியுள்ளனர். இது நிகரக் கூடுதலே ஆகும். 11067 பேர் புதிய நியமனம் பெற்றுள்ளனர். 5756 ஊழியர்கள் வெளியேறியுள்ளனர். ஒரு காலாண்டில் எவ்வளவு கூட்டல், கழித்தல் பாருங்கள்!

* கார்களின் பின்பார்வைக் கண்ணாடி ( REAR VIEW MIRROR ) விற்பனையில் மட்டும் ஆண்டிற்கு உலகம் முழுவதிலும் ரூ 32000 கோடிகள் புழங்குகின்றன. இதில் இன்று 22 சதவீதம் சந்தைப் பங்கை வைத்துள்ள மதர்சன் சுமி சிஸ்டம்ஸ் லிமிடெட்டின் விற்பனை பத்தாண்டுகளுக்கு முன்பு ரூ 100 கோடிகள். ஐந்தாண்டுகளுக்கு முன்பு ரூ 1000 கோடிகள். 2010 ல் 6900 கோடிகள். 2015 ல் ரூ 25000 கோடிகளைத் தொடுமாம். கண்ணாடி வாங்குபவர்கள் பின்னோக்கிப் பார்த்தாலும் சந்தை வாகனம் ஜாம் ஜாமென்று முன்னோக்கிப் பாய்ந்து செல்கிறது. பஞ்சதந்திரம் கமல் டயலாக் போல பின்னாடி..கண்ணாடி..முன்னாடி...

சூடான செய்தி

இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 26 சதவீதத்தில் இருந்து 49 சதவீதமாக உயர்த்துவதற்கு அதற்கான சட்ட வரைவைப் பரிசீலிக்கிற திரு யஸ்வந்த் சின்கா தலைமையிலான நாடாளுமன்ற நிதியமைச்சக நிலை குழு ஒப்புதல் அளிக்காது என டைம்ஸ் ஆப் இந்தியா ( 13 .1 .2011 ) செய்தி வெளியிட்டுள்ளது. வாய்க்கு பொங்கல் தந்த மாதிரி.. நல்லது நடக்கட்டும்!

Friday, January 14, 2011

Dr.Ambedkar Film

[untouchabilityeradicationfront] Dr.Ambedkar Film in Tirunelveli [1 Attachment]
Inbox
X

PONNIAH ESAKKIMUTHU
[Attachment(s) from PONNIAH ESAKKIMUTHU included below] _____________________...
Jan 7 (3 days ago)
Reply

Swaminathan Kandasamy

to untouchability.
show details 9:59 PM (1 minute ago)
தடைகளை உடைத்தெறிந்து வெளி வந்துள்ள அம்பேத்கர் திரைப்படம் தற்போது கோயம்புத்தூரிலும் திரையிடப்பட்டுள்ளது. பெரியார் திராவிடர் கழகத்தின் முயற்சி கோவைத் திரையிடலுக்கு காரணமாக இருந்துள்ளது. தமிழகம் முழுவதும் த மு எ க ச , தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆகிய அமைப்புகளின் முன்முயற்சிகள் குறிப்பிடத்தக்கதாகும். அகில இநதிய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் சேலத்தில் 4 காட்சிகளுக்கும், சென்னையில் 1 காட்சிக்கும், திருநெல்வேலியில் 1 காட்சிக்கும், மதுரையில் 1 காட்சிக்கும் ஏற்பாடு செய்திருந்தது. பி எஸ் என் எல்
ஊழியர் சங்கம், இநதிய வங்கி ஊழியர் சம்மேளனம் ( பெபி) ஆகிய அமைப்புகளும் இத்தகைய பங்களிப்பைச் செய்துள்ளன. பேரா தங்கராஜ் விழைவது போல இத் திரைப்படம் காண்பதே இயக்கமாக மாற்றப்பட வேண்டும்.

இப்படி உழைப்பாளிகளின் அமைப்புகள் இப் பணியைச் செய்யும்போது "வெகுசன" ஊடகங்கள் கொஞ்சமும் தார்மீக உறுத்தலின்றி இத் திரைப்படத்தை புறக்கணிக்கின்றன. அம்பேத்கர் வாழ்ந்தபோதும் ஒடுக்குமுறையைச் சந்தித்தார். மறைந்து அரை நூற்றாண்டு கழிந்தும் ஒடுக்குமுறையைச் சந்திக்கிறார். ஆனால் அவர் மூட்டிய கனலின் வெளிச்சம் இருட்டை விரட்டுகிறது.

பொருளியல் அரங்கம்


-க.சுவாமிநாதன்

நானோ ‘தீக்குளிப்பு’

டாடாவின் செல்லத் திட்டமான நானோ எதிர்பார்த்த இலக்கை 2010 இறுதியில் எட்ட வில்லை. ஒரு லட்சம் கார் விற்பனையை 2010க் குள்ளாக எட்டுவதே இலக்காக இருந்தது. ஆனால் இதுவரை விற்பனை 77000 மட்டுமே ஆகும்.

நானோ 2009ல் அறிமுகமானபோது அதற்கு விண்ணப்பிப்பதற்கு லட்சக்கணக்கான பேர் அலைமோதினார்கள். அவர்களில் 1,55,000 பேர் குலுக்கல் மூலம் தெரிவு செய்யப்பட்டனர். இப்போது கார் ரெடி ! என்கிறது டாடா நிறு வனம். ஆனால் விண்ணப்பித்தவர்கள் வாங்கத் தயங்குகிறார்கள்.

ஜூலை 2010ல் 9000 கார்கள் விற்பனையா கின. அதற்குப் பிறகு விற்பனை விழுந்துவிட் டது.நவம்பர் 2010 ல் 509 கார்கள்தான் விற்பனை ஆகின. டிசம்பரில் 5784 ஆக விற்பனை உயர்ந் துள்ளது. இப்படிப்பட்ட சரிவுகளால் 1 லட்சம் என்ற இலக்கை எட்ட முடியவில்லை. காரணம் என்ன?

நானோ கார் திடீரென்று தீப்பிடித்து எரிந்து விடுகின்றன என்ற புகார்கள் நிறைய கிளம்பியது தான். இதனால் தீ தடுப்பு வசதிகளை இலவச மாக செய்து தருவதாக டாடா நிறுவனம் அறி வித்துள்ளது. 4 ஆண்டுகள் அல்லது 60000 கி.மீ வரை உத்தரவாதம் உண்டு என்றும் கடந்த மாதம் அறிவித்துள்ளது.

“நெருப்பாற்றில்” நீந்துவது என்பது

இது தானோ! கரையேறுமா நானோ!

பல் தேய்க்க ரூ.1850 கோடி

பாதித் தூக்கத்தில் பல் தேய்க் கிறோமே, அதற்கான சந்தை மதிப்பு எவ்வளவு தெரியுமா? டூத் பேஸ்ட் விற்பனை மட்டும் ஓராண்டில் ரூ.1850 கோடிகளாம்! டப்பாக்களில் அடைத்து விற்கப்படும் லோக்கல் பற்பொடி, வேப்பங்குச்சி ஆகிய வற்றால் பல் விளக்குபவர்களைச் சேர்க்காமலேயே இவ்வளவு பணம் புழங்குகிறது.

பராக்! பராக்! இதோ இன் னொரு டூத் பேஸ்ட் சந்தைக்கு வருகிறது. ஜி.எஸ்.கே என்று அழைக்கப்படும் கிளாக்ஸோஸ் மித்க்லின் நிறுவனம் “சென்சொடின்” என்கிற பற்பசை யை இந்தியச் சந்தையில் இறக்கு கிறது. இப்பற்பசை ஏற்கனவே அமெ ரிக்காவில் 10 சதவீத சந்தைப் பங்கை வைத்துள்ளது.

சென்சொடின் இன்னும் ஐந் தாண்டுகளில் ரூ.150 கோடி விற்ப னை யை எட்டுமென்பதுதான் இலக்கு. இந்தியாவில் 17 சதவீதமானவர் களுக்கு பற்கூச்சம் உண்டாம். அவர்களையே சென்சொடின் தனது சந்தை இலக்காக வைத்துள் ளதாம். கூச்சத்தில் எவ்வளவு லாபம் பாருங்கள்! லாபத்திற்கு ஏது கூச்சம்!

கோல்கேட்டிற்கு போட்டியாக களம் இறங்கும் சென்சொடின் 15000 பல் டாக்டர்களின் தொடர்புகளை கைப் பற்றப் போகிறதாம். எனவே இனி பல டாக்டர்கள் சென்சொடினின் மகி மை பற்றி நோயாளிகளிடம் வகுப்பு எடுப்பார்கள்.

சரி! என்ன விலை?,

சொன்னால் பல் கூசி விடும்.

40 கிராமுக்கு 42 ருபாய் ஆகும். கோல் கேட்டைப் போல மூன்றரை மடங்கு.

நொறுக்குத் தீனி

* கோக்க கோலா, சச்சின் டெண்டுல் கரை தனது விளம்பர நாயகனாக வளைத்துப் போட்டிருக்கிறது. மூன்று ஆண்டு ஒப்பந்தத்திற்கு சச்சின் டெண்டுல்கர் பெறப் போகிற தொகை ரூ.20 கோடி. கோக்க கோலா பருகுபவர்கள் எல்லோரும் நாம் சச்சினுக்கு சம்பளம் தருகிறோம் என்ற குஷியோடு குடிக்கலாம்.

* அம்மா.. அக்கா.. என்று லேடீஸ் கைப்பைகளை கூவி விற்று கல்லாக் களை நிரப்பப் போகிறார்களாம் வி.ஐ.பி மற்றும் சாம்சோனைட் நிறுவனங்கள். இதற்கான சந்தை ரூ.1500 கோடிகள் என்பதால் புதிய சரக்குகளோடு குதிக்கிறார்கள்.

* “பண வீக்கம் அதிகம். அதிலும் உணவுப் பொருள் பண வீக்கம் ரொம்ப அதிகம். இதைக் கட்டுப்படுத்த எல்லா கருவிகளும் நாம் கைகளில் இருக்கின்றனவா! என்பது சந்தேகம். பண வீக்கம், வரிகளை விட மோசமானது. உங்களுக்கு வருமானம் அதிகமாக இருந்தாலும் அதைப் பணவீக்கம் சாப்பிட்டு விடும்”

இவ்வளவு ‘கரிசனமாக’ பேசியிருப்பவர் யார் தெரியுமா! நம்ம ப.சிதம்பரம் அவர்கள்தான்!

(நன்றி :பிசினஸ் ஸ்டான்டர்டு - 6.1.2011)

ஜெட் வேக வளர்ச்சி

கலாநிதி மாறன் 2010ல் ஸ்பைஸ் ஜெட் (ளுஞஐஊநு துநுகூ) விமான நிறுவனத்தின் 39 சத வீதப் பங்குகளை வாங்கி விட் டார்.

ஸ்பைஸ் ஜெட் மலிவுக் கட்டண விமானம் என்று பெயர் பெற்றது. ஆனால் அதன் ஆண்டு வருமானம் ரூ. 2181 கோடிகள். இது கலாநிதி மாற னின் பிரதான வணிகமான “சன் டி.வி.யின்” ஆண்டு வரு வாயான ரூ.1395 கோடிகளை விட அதிகமானதாகும்.

மாறனுக்கு 2010 அதிர்ஷ்ட ஆண்டு போலிருக்கிறது. அவரின் ரூ.100 கோடி மெகா தயாரிப்பான “எந்திரன்” திரைப் படம் இதுவரை ரூ.200 கோடி வசூலை அள்ளியிருக்கிறதாம்.

20 தொலைக்காட்சி சேனல்கள்... 48 எப்.எம் ரேடி யோக்கள் ...2 நாளிதழ்கள்... நாட்டின் இரண்டாவது மிகப் பெரிய டி.டி.எச் சேவை.. அதில் 60 லட்சம் வாடிக்கையாளர்கள்..

இந்த வரிசையில் கல் ஏர் வேஸ், ஸ்பைஸ் ஜெட்-ஐ வாங்கியதன் மூலம் பிரதான இடத்தைப் பெற்றுள்ளது. இவர் வாங்கிய 4 மாதங்களுக் குள்ளாக சர்வதேச விமானப் போக்குவரத்தை அந்நிறுவ னம் துவங்கி விட்டது. காத் மாண்டு, கொழும்பு ஆகிய நகரங்களுக்கு பறக்கிறது ஸ்பைஸ் ஜெட்

Monday, January 3, 2011

ஹேப்பி நியூ இயர்?

பொருளியல் அரங்கம்
-க.சுவாமிநாதன்

* சாதாரண மக்களுக்கு இது ஹேப்பி நியூ இயரா? என்ற சந்தேகத்தோடே 2011ல் அடியெடுத்துவைக்கிறார்கள். உணவுப் பொருள் பணவீக்கம் 14.44 சதவீதத்தைத் தொட்டுவிட்டது. வெங்காய விலையைக் கட்டுப்படுத்தி விட்டோமென்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி பெருமை பேசுவதற்கு முன்பாகவே முட்டை, பால், காய்கறி, பழங்களின் விலைகளெல்லாம் எக்கச்சக்கமாக ஏறியிருக்கின்றன. 2009 ஆம் ஆண்டில் இதே காலத்தில் 21.29 சதவீதம் ஏறியிருந்தது. இப்போது 14.44 சதமாக குறைந்திருக்கிறது என்று ஆறுதல் அடையாதீர்கள் ! அந்த 21 சதவீதத்திற்கும் மேலே ஏறி, ஏறி அதிலிருந்து 14 சதவீதம் ஜம்ப் ஆகியிருக்கிறது இப்போது.

* பைசாக்களுக்கும் 2011ல் மகிழ்ச்சி இருக்காது போலிருக்கிறது. 50 பைசா தவிர அதற்கு கீழ் மதிப்பு உள்ள பைசாக்களெல்லாம் தங்களது நாட்களை இனிமேல் எண்ண வேண்டியதுதான். அவற்றின் ஆயுளெல்லாம் 180 நாட்கள்தான் என நிதியமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 30, 2011 முதல் 50 பைசாதான் குறைந்தபட்ச பரிமாற்ற நாணயமாகச் சந்தையில் இருக்கும் என்று நிதியமைச்சகம் அறிவித்திருக்கிறது. இதற்கேற்றாற்போல எல்லாச் சரக்குகள், சேவைகள், வரிகளெல்லாம் வட்டமிடப் படுமாம் (சுடிரனேiபே டீகக). விலைவாசி எகிறிக்கொண்டே போனால் நாலணாவுக்கு எப்படி மரியாதை இருக்கும்?

* ஆதாரத் தொழில்களும் சோகத்தோடுதான் 2011ல் அடியெடுத்து வைக்கின்றன. கச்சா எண்ணெய், பெட்ரோலிய சுத்திகரிப்பு, நிலக்கரி, மின்சாரம், சிமெண்ட், உருக்கு ஆகியவற்றின் வளர்ச்சி 2.3 சதவீதமாகவே நவம்பர் 2010ல் இருந்துள்ளது. 21 மாதங்களில் இல்லாத மிகப்பெரிய சரிவாகும் இது. பெட்ரோலியச் சுத்திகரிப்பு 3.7 சதவீதமும், சிமெண்ட் 11.6 சதவீதமும் சுருங்கியிருக்கின்றன. ஆதாரத் தொழில் வளர்ச்சி பாதிக்கப்பட்டால் ஒட்டுமொத்த தொழில்துறையின் வளர்ச்சியே தடுமாறும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

* எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆணையத்திற்கும் (டீசூழுஊ) 2011ல் நாள் குறிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 1 அன்று கூடிய மத்திய அமைச்சரவை டீசூழுஊ பங்கு விற்பனையை மார்ச் 2011க்கு முன்னோக்கி நகர்த்தியுள்ளது. இப்போது டீசூழுஊயில் அரசாங்கத்தின் பங்கு 74.14 சதவீதம். மார்ச் 2011 பங்கு விற்பனைக்குப் பிறகு 69.14 சதவீதமாகக் குறைந்துவிடுமாம். இந்த 5 சதவீத விற்பனையின் மதிப்பு ரூ.13,000 கோடிகள்.

* 2011ல் சந்தோஷமாக நுழைகிறவர்கள் யார் தெரியுமா? கேரிஃபோர் (ஊஹசுசுநுகுடீருசு) என்கிற உலகின் இரண்டாவது மிகப்பெரிய சில்லரை வர்த்தக நிறுவனம் தில்லியில் தனது முதல் “கேஷ் அண்டு கேரி” கடையைத் திறந்துள்ளது. கேரிஃபோரின் பிரம்மாண்டத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு. நம்ம நாட்டிலுள்ள எல்லா “பாட்டா” (க்ஷஹகூஹ) காலணிக் கடைகளின் ஒட்டுமொத்த விற்பனையை விட கேரிஃபோரின் வெளிநாட்டுக் கடை ஒன்றின் விற்பனை அதிகமென்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். ஏற்கனவே வால்மார்ட் நிறுவனம் அமிர்தசரஸ், ஜிரக்பூர், ஜலந்தர், கோட்டா நகரங்களிலும், ஜெர்மனியின் மெட்ரோ நிறுவனம் ஐதராபாத், பெங்களூர், மும்பை, கொல்கத்தா ஆகிய நான்கு நகரங்களிலும் இத்தகைய 10 கடைகளைப் போட்டுள்ளன. பல பிராண்டு சில்லரை வணிகத்தில் (ஆரடவi க்ஷசயனே) அந்நிய முதலீடு அனுமதிக்கப்படாததால் இக்கடைகளில் மொத்த விற்பனை மட்டுமே இப்போதைக்கு நடைபெறும். அதாவது உணவுப் பொருட்கள் என்றால் நுகர்வோர்களுக்கு நேரடியாக விற்காமல் ஓட்டல்களுக்கு சப்ளை செய்வார்கள், 2011ல் பல பிராண்டு சில்லரை வணிகமும் திறந்துவிடப்படுமென்று ஆவலோடுகாத்திருக்கிறார்கள்.



கொசுறுத்தகவல்கள்

* இந்தியாவின் மிகப்பெரிய நிலக்கரி இறக்குமதியாளரான அதானி குழுமம் ஆஸ்திரேலியா “லிங்க் எனர்ஜிஸ் கலலி சுரங்கத்தை” 3 பில்லியன் டாலர்களுக்கு (ரூ.13,,500 கோடிகள்) வாங்கியுள்ளது. இதுதான் ஆஸ்திரேலியாவின் மிகப் பெரிய “கையகப்படுத்துதல்” என்கிறார்கள்.

* வாஷிங்டன் போஸ்ட் கம்பெனி தனது “நியூஸ் வீக்” இதழை கலிஃபோர்னியா பில்லியனர் சிட்னி ஹார்மனுக்கு விற்றுவிட்டது. நட்டத்தில் ஓடுவதுதான் காரணம்.

* ஜரோப்பாவில் 1999 ஜனவரி 1 முதல் “ஒரே நாணயம், ஒரே எதிர்காலம்” (டீநே ஊரசசநnஉல, டீநே கரவரசந) என்ற முழக்கத் தோடு பொது நாணயமான “யூரோ” அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது யூரோ மண்டலத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியின் காரண மாக “ஒரே நாணயம், ஒரே தலைவிதி” (டீநே ஊரசசநnஉல, டீநே குயவந) என்று பொருளாதார ஆய்வாளர்கள் நொந்து கொள்கிறார்கள்.