Sunday, May 19, 2019

"என் காயம் பெரிதல்ல

*தோழர் சுனில் மொய்த்ரா மகன் கௌதம் மித்ரா மீது தாக்குதல்*
***********************************

*"என் காயம் பெரிதல்ல;
ஜனநாயகம் காய்ப்படாமல் காப்பாற்றப் பட வேண்டும்"* - கௌதம் மித்ரா
**********************************

*இது மேற்கு வங்கத்தில் ஜனநாயகம் படும் பாட்டிற்கு சாட்சியம்.*

*இன்று ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பாக  அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் முன்னணித் தலைவர் கௌதம் மித்ரா, அவரின் இணையர், மகன் வாக்களிக்க சென்றுள்ளனர். 15 திரிணாமுல் குண்டர்கள் தடுத்துள்ளனர். மீறி சென்ற போது கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர்.*



*கௌதம் மித்ரா இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர். அவர் நெஞ்சில் தாக்கியுள்ளார்கள். இடது கண்ணுக்கு கீழே காயம். இணையருக்கு கைகளில் அடி. காயம். மகனும் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.*

*அவர் முக நூலில் இதைப் பதிவு செய்துள்ளார். "எங்களுக்கு ஏற்பட்ட காயம் பெரிதல்ல; ஜனநாயகத்தை காயமின்றி காப்பாற்ற வேண்டும்" என்று அதில் குறிப்பிட்டுள்ளார்*.

*கௌதம் மித்ரா! உங்கள், இணையர், மகனின் தீரத்தை போற்றுகிறோம்! உடல் நலம் பெற விழைகிறோம்! ஜனநாயகம் காக்க கைகோர்ப்போம்! போராடுவோம்!*

No comments:

Post a Comment