Wednesday, August 21, 2013

AIIEA IN PAPPANKULAM VILLAGE IN SUPPORT OF DALIT VICTIMS


    
At pappankulam village of Sivagangai district - Com G. Meenakshisundaram President, 
Com N. Sureshkumar, General secretary, ICEU, Madurai division with Com K. Samuelraj, geneal secretary, TNUEF. 

On the Independence day (15.08.2013)  22 houses of dalits were demolished  at Pappankulam village of Sivagangai  district (45 km from Madurai) by the authorities citing the reasons of encroachment. But dalit people alleged that the demolition was done at the instigation of Panchayat president with caste venom. According to dalit victims, Panchayat President developed antagonism towards dalits under the impression that they had not voted for him in local body elections. Dalit victims claim that they are having pattas for the houses and relevant documents also. Three houses were constructed under Indira Awas Yojana. ( Courtesy: THEEKATHIR- 21.08.2013).

The leaders of Madurai divisional unit & Madurai GI regional unit of ALL INDIA INSURANCE EMPLOYEES ASSOCIATION Com G Meenakshisundaram, President, ICEU, Madurai Division, Com S. Balasubramanian Joint secretary, GIEA-SZ, Com N. Sureshkumar, General secretary, ICEU, Madurai division, Com N.P.Rameshkannan, Joint secretary, Com S. Thanigairaj, Assistant Treasurer, and Com A. Govindarajan visited the village yesterday ( 20th August 2013) as a part of the fact finding team of the  Tamilnadu Untouchability Eradication Front (TNUEF) and documented house by house the losses suffered by the victims by staying in the village for whole day till late night. Lawyers from Madurai HC bench were also involved. The team led by Com K. Samuelraj, General secretary, TNUEF and Com K. Beemarao MLA, CPI-M assured the dalit victims that their issue would be taken up organisationally and legally by the TNUEF. The memorandum was submitted to the District Collector by the team along with the 100 victims. 

Today also (21.08.2013) our comrades of Sivaganga unit led by Com Bharathidasan Secretary, ICEU, Sivaganga branch unit assisted villagers for submitting representations. The authorities have assured to arrange the shelter for homeless children in the Government hostels and also relief materials to the victims.  Our comrades are determined to make follow up on daily basis.

Congratulations to ICEU, Madurai division for their committment and role in fighting the social oppression.




Demolished houses at Pappankulam



News published by Theekathir daily was given below- 

சிவகங்கை, ஆக. 20-சிவகங்கை தாலுகா பாப்பான்குளம் கிராமத்தில் ஆக்கிரமிப்பு என்ற பெயரில் தலித் மக்களுக்கு அரசு கட்டிக் கொடுத்த 5 வீடுகள் உள்ளிட்ட 22 வீடுகள் சுதந்திர தினத்தன்று இடித்து தரை மட்டமாக்கப்பட்டுள்ளன. வீடுகளை இழந்து தவிக்கும் தலித் மக்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரவாயல் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் க.பீமராவ், மாவட்டச் செயலாளர் ஏ.ஆர்.கே.மாணிக்கம், தீண் டாமை ஒழிப்பு முன்னணி மாநிலப் பொதுச்செயலாளர் கே.சாமுவேல் ராஜ், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் மு.கந்தசாமி, ஆர்.கே.தண்டியப்பன், மானா மதுரை ஒன்றியச் செயலாளர் எஸ்.முத்து ராமலிங்கபூபதி, நகரச் செயலாளர் சங்கர சுப்பிரமணியன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் கே.வீர பாண்டி, மானாமதுரை ஒன்றியச் செயலா ளர் வீரபாண்டி உள்ளிட்டோர் சந்தித்து நடைபெற்ற சம்பவங்கள் குறித்து கேட் டறிந்து இதன் மீது உரிய தலையீடு செய்வதாக உறுதியளித்தனர்.வீட்டை இழந்துள்ள மகாலிங்கம் கூறுகையில், எனது வீட்டிற்கு அரசு கொடுத்த வீட்டுமனைப்பட்டா உள்ளது. வீடு கட்டுவதற்கு அரசின் உத்தரவு உள்ளது. கட்டி முடித்த வீட்டில் இன்னும் குடி யேறவில்லை. கட்டிய வீட்டிற்கு இன்னும் அரசு ரூ.30 ஆயிரம் தரவேண்டியுள்ளது. இந்நிலையில் ஆக்கிரமிப்பு என்ற பெயரில் வீட்டை இடித்துவிட்டனர் என்றார்.கூலு என்பவர் கூறுகையில், அரசாங்க சர்வேயர் நில அளவை செய்தபோது, எங்களது பட்டா இடத்திற்குள் தான் வீடு கட்டப்பட்டுள்ளது எனக்கூறினார். ஆனால் வீட்டை இடித்துவிட்டனர் என்றார். பூபதி என்பவர் கூறுகையில், சாலைக் கென 20 அடி உள்ளது ஆனால் எனது வீடு ஆக்கிரமிப்பில் இருப்பதாகக் கூறி இடித்துவிட்டனர். தெருச்சாலை 20 அடி இருக்கும்போதே ஆக்கிரமிப்பு என்ற பெயரில் எனது வீட்டை முழுமையாக இடித்துவிட்டனர். வீட்டை இடித்ததால் கோயிலில் தடுப்பு போட்டு குடியிருக்கிறோம். எங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றார்.

க.பீமராவ் எம்எல்ஏ : சம்பவம் குறித்து சட்டமன்ற உறுப் பினர் பீமராவ் கூறுகையில், “தமிழக அரசுக்கு கெட்டபெயர் ஏற்படுத்த வேண் டும் என்ற நோக்கத்தோடு வருவாய்த் துறையும், காவல்துறையும், ஊராட்சி நிர்வாகமும் கூட்டாக செயல்பட்டு சட்ட விரோதமாக தலித் மக்களின் வீடுகளை இடித்திருக்கிறார்கள். பாப்பான்குளம் தலித் மக்கள் வீடுகளை இடித்தது தொடர் பாக சட்டமன்றத்தில் தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” என்றார்.

தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில பொதுச்செயலாளர் சாமுவேல்ராஜ் கூறுகையில், தலித் மக்கள் மீது நடை பெற்றுள்ள அக்கிரமத்திற்கு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க அரசை வலியுறுத்துவோம் என்றார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஏ.ஆர்.கே.மாணிக் கம் கூறுகையில், தலித் மக்களின் 22 குடியிருப்புகள் இடித்து தரைமட்டமாக் கப்பட்டிருப்பது வன்மையாகக் கண்டிக் கத்தக்கது. அரசு மானியத்தில் குழும வீடுகள் கட்டியிருந்த மகாலிங்கம், கூலு, வள்ளி, ராக்கு, சுப்பிரமணியன் ஆகியோரது வீடுகள் இடிக்கப்பட்டுள்ளது. அன்பழகன், பூமிநாதன், ராக்கு, முத்து, கருப்பையா, பிச்சை, முத்துச்சாமி, பூபதி, முருகன், பாலு ஆகியோரது வீடுகள் தரைமட்டமாக்கப் பட்டுள்ளது. சேது, சரவணன், தெய்வேந் திரன், தனுக்கோடி, துரைராஜ்செல்வி, ஆகியோர்களின் வீட்டு தாழ்வாரங்கள், கழிப்பறை இடிக்கப்பட்டுள்ளன.இடிக்கப்பட்ட அனைத்து வீடுகளை யும் அதே நிலையில் கட்டிக்கொடுக்க வேண்டும். மன உளைச்சலுக்குள்ளான தலித் மக்கள் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். தலித் மக்களின் வீடுகளை சட்டவிரோதமாக இடித்த வருவாய்த்துறை, ஊராட்சி நிர்வாகம், காவல்துறையினர் மீது வன் கொடுமை தடுப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றார்.

ஆட்சியருடன் சந்திப்பு : தொடர்ந்து ஆட்சியரைச் சந்தித்த இக்குழுவினர் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். இப்பிரச்சனையின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினர்.

குற்றவாளிகளை கைது செய்க: சிபிஎம்

தலித் மக்களின் வீடுகள் இடிக்கப்பட்டதைக் கண் டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா ளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது,சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஊராட்சி ஒன் றியம், சிறுகுடி ஊராட்சிக்குட்பட்ட பாப்பான்குளம் கிராமத் தில் சுமார் 100 தலித் குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். சிறுகுடி ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் தங்கராஜ். இப்பகுதி தலித் மக்கள் தங்களுக்கு வாக் களிக்கவில்லை எனக் கருதி தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார். தனக்கு வாக் களிக்காத தலித் மக்களை வஞ்சம் தீர்க்க வேண்டு மென்கிற வன்மத்தோ டும், வெறியோடும் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று, தங்கராஜ் ஜே.சி.பி. இயந்திரத்தின் மூலம் தலித் மக்களின் 28 வீடுகளை இடித்துத் தரை மட்டமாக்கியுள்ளார். இச்செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

இடிக்கப்பட்ட வீடுகள் அனைத்திற்கும் பட்டா, மின் இணைப்பு உள்பட அனைத்து அரசு ஆவணங்களும் உள்ளன. மூன்று வீடுகள் இந்திரா ஆவாஸ் யோஜனா திட் டத்தில் கட்டப்பட்டவை. காவல்துறை அராஜகம்தலித் மக்களின் வீடுகள் இடிக்கப்படும் போது, மானா மதுரை சரக காவல் துணை கண்காணிப்பாளர் வெள்ளத் துரை தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட காவல்துறை யினர் இருந்துள்ளனர். தட்டிக்கேட்ட கள்ளிவயல் கிராமத் தைச் சேர்ந்தசுந்தரபாண்டியனைக் காவல்துறையினர் தாக்கியதோடு, அவர் மீது பொய் வழக்குத் தொடுத்துள்ளனர். உள்ளாட்சி மன்றத் தேர்தல் குரோதத்துடனும் சாதி வெறியோடும் கூடிய இந்த கொடூரத் தாக்குதலில் சுமார் 1 கோடி ரூபாய் அளவிற்கு தலித் மக்களின் சொத்துக்கள் அழிக் கப்பட்டுள்ளன.சுதந்திர தினத்தன்று சா திய வன்மத்துடன் தலித் மக் களின் வீடுகளை இடித்த தங்கராஜ், பாதுகாப்பு வழங்கிய துணை கண்காணிப்பாளர் வெள்ளத் துரை மற்றும் குற்றவா ளிகள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி வழக்கு பதிவு செய்து கைது செய்திட வேண்டுமெனவும், பாதிக் கப்பட்ட தலித் மக்களுக்கு உரிய நிவார ணமும், இழப்பீடும் வழங்கிட வேண்டுமெனவும் தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

No comments:

Post a Comment