Monday, November 29, 2010

6.jpg1.jpg

தோழர் கருப்பையா நினைவாக படிப்பகம்

காலமெல்லாம் உழைத்த ஒரு மனிதனை எப்படிப்
போற்றுவது?

தொண்டைமான் நல்லூர் கிராமத்தில் தோழர் கருப்பையா
( முன்னாள் துணைத்தலைவர், காப்பீட்டு கழக ஊழியர் சங்கம்,
தஞ்சைக் கோட்டம்) நினைவாக ஒரு நூலகம்
செயல்பட்டு வருகிறது. சி பி எம் மாவட்டச் செயலாளராகவும்
செயலாற்றியவர் கருப்பையா. புதுக்கோட்டை மண்ணில்
அறிவொளி இயக்கத்தில் தோழர் கண்ணம்மாவுடன் இணைந்து
அவர் ஆற்றிய பணி அற்புதமானது. குவாரி பெண் உழைப்பாளிகளின்
வாழ்வுரிமைக்கான போராட்டத்திற்கு தலைமை ஏற்று அவர்களின் முன்னேற்றத்திற்கு வழி வகுத்தவர்.

அவரின் சொந்த கிராமத்தில் இந் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.
சிந்தனைக்கும், கல்விக்கும் மறு பெயர்தானே கருப்பையா.

2 comments:

  1. கருப்பையா! எவ்வளவு இனிமையான மனிதர்.1983ம் ஆண்டாக இருக்கலாம்.காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கு எல்.ஐ.சி ஊழியர்கள் தயாராகிக் கொண்டு இருந்தார்கள். இரவு 10மணிக்கு மேல் தோழர் சிவராமகிருஷ்ணன் வீட்டிற்கு கருப்பையா என்னை அழத்துச்சென்றார். புண்ணிய மூர்த்தியும் இருந்த நினைவு.இரண்டு மணிவரை பெசிக்கொண்டு இருந்தோம். இழக்கக் கூடாத ஒரு தோழனை இழந்து விட்டோமே!---காஸ்யபன்

    ReplyDelete
  2. தோழர் கருப்பையா குறித்து அவரோடு பணி செய்த தோழர் என்னிடம் பல ஆண்டுகள் முன்பு கூறியது நினைவு வருகிறது,தோழர் என்ற வார்த்தைக்கு அர்த்தமானவர்.அவர் பெயரால் உருவாகும் இந்நுலகம்பொருத்தமானதே

    ReplyDelete