Sunday, December 25, 2011

VENMANI MARTYRS DAY -DEC 25


டிசம்பர் 25 வெண்மணி தினம்

சாம்பலில் இருந்து மறைய மறுக்கும் சரித்திரம் 

நீதிக்கு எதிராக அநீதி 
அத்தனை பலத்தோடு எழுந்து நின்றது
அதன் வசம் அன்று இருந்தன
ஊரை எரிக்கும் வன்மம்
உயிர்களைப் பொசுக்கும் ஆத்திரம்
குரல்களை அற்றுப் போகச் செய்துவிடும் ஆயுதம்

சாம்பலில் இருந்துகொண்டு
சரித்திரம் மறைய மறுக்கிறது
ஆண்டாண்டுகளாய் 
ஆண்டைகளுக்கு எதிராக சாட்சியம் அளிக்கிறது
தொடரும் அநீதி குறித்து எச்சரித்துக் கொண்டே இருக்கிறது
திரட்டுகிறது 


ராமையாவின் குடிசைக்குள் 
அன்று எரியூட்டப்பட்ட 
பிஞ்சுகளின் பரிதவிப்புகளுக்கும் சேர்த்து
வெடித்துச் சிதறிய இதயங்களின் கதை
தீர்மானமான விடியலை நோக்கி
மனித குலத்தை விடாது
நகர்த்திக் கொண்டே இருக்கிறது.......

-  எஸ் வி வேணுகோபாலன் 

1 comment: