Monday, March 9, 2015

புதிய தலைமுறை



அந்நிய நேரடி முதலீட்டு மசோதாவுக்கு எதிர்ப்பு: எல்.ஐ.சி ஊழியர்கள் வேலை நிறுத்தம்
 
பதிவு செய்த நாள் - மார்ச் 09, 2015, 6:52:27 PM
மாற்றம் செய்த நாள் - மார்ச் 09, 2015, 6:52:27 PM
காப்பீட்டுத்துறையில் அந்நிய நேரடி முதலீட்டு உச்சவரம்பு உயர்த்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் எல்ஐசி ஊழியர்கள் ஆங்காங்கே வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக மதுரை எல்.ஐ.சி அலுவலகம் முன்பாக கூடிய ஊழியர்கள் மத்திய அரசு கொண்டுவந்துள்ள மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர். அங்கு செய்தியாளர்களை சந்தித்த எல்.ஐ.சி ஊழியர் சங்க கோட்டத்தலைவர் மீனாட்சி சுந்தரம் இது தேச விரோத மசோதா எனக்கூறினார்.

மேலும் மக்களின் சேமிப்புக்கு பாதிப்பை உண்டாக்கும் எனக் கூறிய அவர் மக்கள் ஆதரவோடு மசோதாவை தடுப்போம் எனவும் கூறினார்.

இதே போன்று தஞ்சை கோட்ட எல்ஐசி அலுவலகம் முன் மத்திய அரசை கண்டித்து சுமார் 800 ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை அண்ணாசாலை முன்பாக நடைபெற்ற போராட்டத்தில் எல்.ஐ.சி தொடர்பாக மத்திய அரசு கொண்டுவந்துள்ள மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

கோவையில் நடைபெற்ற போராட்டத்தில் நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட 4 மாவட்டங்களை சேர்ந்த எல்.ஐ.சி ஊழியர்கள் பங்கேற்று மத்திய அரசு கொண்டுவந்துள்ள மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

No comments:

Post a Comment