Showing posts with label THEEKATHIR. Show all posts
Showing posts with label THEEKATHIR. Show all posts

Tuesday, December 25, 2012

வெண்மணி சங்கமம்-தருமபுரி வன்கொடுமை எதிர்ப்பு கருத்தரங்கம்

வெண்மணி சங்கமம் - தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு-டிசம்பர் 25,2012- தருமபுரி வன்கொடுமை எதிர்ப்பு கருத்தரங்கம்- திருவாரூர்-சிறப்புரை-தோழர் டில்லிபாபு, எம்.எல்.ஏ, தோழர் ப.நீலவேந்தன், தலைமை- க.சுவாமிநாதன். தர்மபுரி நத்தம், கொண்டாம்பட்டி, அண்ணா நகர் கிராமங்களில் இருந்து 10 பேர் பங்கேற்பு- ரூ 25000 தருமபுரி வழக்கு நிதி அளிப்பு - தருமபுரி இன்சூரன்ஸ் தோழர்களின் களப்பணிக்கு பாராட்டு- தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடவடிக்கைகள் பற்றிய பவர் பாயிண்ட் பிரசண்டேசன்-பாரதி புத்தகாலாயத்தின் இரண்டு நூல்கள் வெளியீடு- மொழிபெயர்ப்பாளர் தோழர் சி சுப்பாராவுக்கு பாராட்டு.

Saturday, January 15, 2011

பொருளியல் அரங்கம்- க. சுவாமிநாதன்

அடிக்கரும்பு யாருக்கு ?

* வறுமை என்றாலே நினைவுக்கு வருவது ஒரிசாவின் காலகண்டி மாவட்டம்.அங்கு மகாத்மாகாந்தி தேசிய கிராம வேலை வாய்ப்புத் திட்டத்தில் குறைந்தபட்சக் கூலியான ரூ 90 மறுக்கப்படுவதாக டைம்ஸ் ஆப் இந்தியாவில் ( 19 .8 . 2010 ) செய்திகள் வந்தன. கரும்பின் சக்கை கூடக் கிடைக்காத பரிதாபத்திற்குரியவர்கள் இவர்கள்.

* இந்தியாவில் ஆண்டிற்கு ஒரு கோடிக்கு மேல் வருமானம் பெறுபவர்கள் 1149 பேர். இன்போசிஸ் நிறுவனத்தில் 50 லட்சத்திற்கு மேல் வருமானம் பெறுபவர்கள் 144 பேர். இவர்கள் கூட நடுக் கரும்புக்காரர்கள்தான்.

* இந்தியாவில் அதிகமான வருமானம் பெறுகிறவர் ஜிண்டால் ஸ்டீல் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி நவீன் ஜிண்டால்தான். ஆண்டு வருமானம் 69.75 கோடிகள். இதை விடுங்கள்! அமெரிக்காவில் அதிக வருமானம் வாங்குபவர் லிபர்ட்டி மீடியாவின் கிரகரி பி. மாபி என்கிற தலைமை நிர்வாகி. ஆண்டு வருமானம் ரூ 393 கோடிகள். ஒரு நாளைக்கு ஒரு கோடியே எட்டு லட்சம். அடிக் கரும்புக்காரர்கள் யாரென்று தெரிகிறதா?

இளநீருக்கு ஆபத்து

இளநீருக்கு வந்துவிட்டது ஆபத்து. கொக்க கோலாவும், பெப்சியும் பெரும் முதலீடுகளோடு இளநீர்ச் சந்தைகளில் குதித்துள்ளனர்.உலகில் பிலிப்பைன்ஸ், இந்தோனேசியாவுக்கு அடுத்தபடியாக இளநீர் காய்ப்பது இந்தியாவில்தானாம். பிரேசிலின் அமாகோகோ நிறுவனத்தை பெப்சி வாங்கியிருக்கிறது. 30 நாட்களுக்கு இளநீரை கெட்டுப்போகாமல் வைத்திருக்கிற தொழில் நுட்பம் ரூ 3 லட்சத்திற்கு கிடைக்கிறது. பாக்கெட்டுகளிலும், அலுமினிய கேன்களிலும் இளநீரை அடிக்கிற பரிசோதனைகள் மைசூரில் உள்ள ஓர் ஆய்வகத்தில் நடந்தேறி வருகின்றன.

சில நடுத்தர கம்பெனிகளும் வணிகத்தில் குதிக்கலாம்.ரோட்டோரங்களில் ட்ரை சைக்கிளில் இளநீர்க் காய்களை அடுக்கிக் கொண்டு அரிவாளோடு அண்ணே..அக்கா..என்று கூவி விற்பவர்களுக்கு ஆபத்துதான்!

கொசுறு

* இன்போசிஸ் நிறுவனத்தில் 2010 - 11 நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் 5311 ஊழியர் அதிகமாகியுள்ளனர். இது நிகரக் கூடுதலே ஆகும். 11067 பேர் புதிய நியமனம் பெற்றுள்ளனர். 5756 ஊழியர்கள் வெளியேறியுள்ளனர். ஒரு காலாண்டில் எவ்வளவு கூட்டல், கழித்தல் பாருங்கள்!

* கார்களின் பின்பார்வைக் கண்ணாடி ( REAR VIEW MIRROR ) விற்பனையில் மட்டும் ஆண்டிற்கு உலகம் முழுவதிலும் ரூ 32000 கோடிகள் புழங்குகின்றன. இதில் இன்று 22 சதவீதம் சந்தைப் பங்கை வைத்துள்ள மதர்சன் சுமி சிஸ்டம்ஸ் லிமிடெட்டின் விற்பனை பத்தாண்டுகளுக்கு முன்பு ரூ 100 கோடிகள். ஐந்தாண்டுகளுக்கு முன்பு ரூ 1000 கோடிகள். 2010 ல் 6900 கோடிகள். 2015 ல் ரூ 25000 கோடிகளைத் தொடுமாம். கண்ணாடி வாங்குபவர்கள் பின்னோக்கிப் பார்த்தாலும் சந்தை வாகனம் ஜாம் ஜாமென்று முன்னோக்கிப் பாய்ந்து செல்கிறது. பஞ்சதந்திரம் கமல் டயலாக் போல பின்னாடி..கண்ணாடி..முன்னாடி...

சூடான செய்தி

இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 26 சதவீதத்தில் இருந்து 49 சதவீதமாக உயர்த்துவதற்கு அதற்கான சட்ட வரைவைப் பரிசீலிக்கிற திரு யஸ்வந்த் சின்கா தலைமையிலான நாடாளுமன்ற நிதியமைச்சக நிலை குழு ஒப்புதல் அளிக்காது என டைம்ஸ் ஆப் இந்தியா ( 13 .1 .2011 ) செய்தி வெளியிட்டுள்ளது. வாய்க்கு பொங்கல் தந்த மாதிரி.. நல்லது நடக்கட்டும்!

Friday, January 14, 2011

பொருளியல் அரங்கம்


-க.சுவாமிநாதன்

நானோ ‘தீக்குளிப்பு’

டாடாவின் செல்லத் திட்டமான நானோ எதிர்பார்த்த இலக்கை 2010 இறுதியில் எட்ட வில்லை. ஒரு லட்சம் கார் விற்பனையை 2010க் குள்ளாக எட்டுவதே இலக்காக இருந்தது. ஆனால் இதுவரை விற்பனை 77000 மட்டுமே ஆகும்.

நானோ 2009ல் அறிமுகமானபோது அதற்கு விண்ணப்பிப்பதற்கு லட்சக்கணக்கான பேர் அலைமோதினார்கள். அவர்களில் 1,55,000 பேர் குலுக்கல் மூலம் தெரிவு செய்யப்பட்டனர். இப்போது கார் ரெடி ! என்கிறது டாடா நிறு வனம். ஆனால் விண்ணப்பித்தவர்கள் வாங்கத் தயங்குகிறார்கள்.

ஜூலை 2010ல் 9000 கார்கள் விற்பனையா கின. அதற்குப் பிறகு விற்பனை விழுந்துவிட் டது.நவம்பர் 2010 ல் 509 கார்கள்தான் விற்பனை ஆகின. டிசம்பரில் 5784 ஆக விற்பனை உயர்ந் துள்ளது. இப்படிப்பட்ட சரிவுகளால் 1 லட்சம் என்ற இலக்கை எட்ட முடியவில்லை. காரணம் என்ன?

நானோ கார் திடீரென்று தீப்பிடித்து எரிந்து விடுகின்றன என்ற புகார்கள் நிறைய கிளம்பியது தான். இதனால் தீ தடுப்பு வசதிகளை இலவச மாக செய்து தருவதாக டாடா நிறுவனம் அறி வித்துள்ளது. 4 ஆண்டுகள் அல்லது 60000 கி.மீ வரை உத்தரவாதம் உண்டு என்றும் கடந்த மாதம் அறிவித்துள்ளது.

“நெருப்பாற்றில்” நீந்துவது என்பது

இது தானோ! கரையேறுமா நானோ!

பல் தேய்க்க ரூ.1850 கோடி

பாதித் தூக்கத்தில் பல் தேய்க் கிறோமே, அதற்கான சந்தை மதிப்பு எவ்வளவு தெரியுமா? டூத் பேஸ்ட் விற்பனை மட்டும் ஓராண்டில் ரூ.1850 கோடிகளாம்! டப்பாக்களில் அடைத்து விற்கப்படும் லோக்கல் பற்பொடி, வேப்பங்குச்சி ஆகிய வற்றால் பல் விளக்குபவர்களைச் சேர்க்காமலேயே இவ்வளவு பணம் புழங்குகிறது.

பராக்! பராக்! இதோ இன் னொரு டூத் பேஸ்ட் சந்தைக்கு வருகிறது. ஜி.எஸ்.கே என்று அழைக்கப்படும் கிளாக்ஸோஸ் மித்க்லின் நிறுவனம் “சென்சொடின்” என்கிற பற்பசை யை இந்தியச் சந்தையில் இறக்கு கிறது. இப்பற்பசை ஏற்கனவே அமெ ரிக்காவில் 10 சதவீத சந்தைப் பங்கை வைத்துள்ளது.

சென்சொடின் இன்னும் ஐந் தாண்டுகளில் ரூ.150 கோடி விற்ப னை யை எட்டுமென்பதுதான் இலக்கு. இந்தியாவில் 17 சதவீதமானவர் களுக்கு பற்கூச்சம் உண்டாம். அவர்களையே சென்சொடின் தனது சந்தை இலக்காக வைத்துள் ளதாம். கூச்சத்தில் எவ்வளவு லாபம் பாருங்கள்! லாபத்திற்கு ஏது கூச்சம்!

கோல்கேட்டிற்கு போட்டியாக களம் இறங்கும் சென்சொடின் 15000 பல் டாக்டர்களின் தொடர்புகளை கைப் பற்றப் போகிறதாம். எனவே இனி பல டாக்டர்கள் சென்சொடினின் மகி மை பற்றி நோயாளிகளிடம் வகுப்பு எடுப்பார்கள்.

சரி! என்ன விலை?,

சொன்னால் பல் கூசி விடும்.

40 கிராமுக்கு 42 ருபாய் ஆகும். கோல் கேட்டைப் போல மூன்றரை மடங்கு.

நொறுக்குத் தீனி

* கோக்க கோலா, சச்சின் டெண்டுல் கரை தனது விளம்பர நாயகனாக வளைத்துப் போட்டிருக்கிறது. மூன்று ஆண்டு ஒப்பந்தத்திற்கு சச்சின் டெண்டுல்கர் பெறப் போகிற தொகை ரூ.20 கோடி. கோக்க கோலா பருகுபவர்கள் எல்லோரும் நாம் சச்சினுக்கு சம்பளம் தருகிறோம் என்ற குஷியோடு குடிக்கலாம்.

* அம்மா.. அக்கா.. என்று லேடீஸ் கைப்பைகளை கூவி விற்று கல்லாக் களை நிரப்பப் போகிறார்களாம் வி.ஐ.பி மற்றும் சாம்சோனைட் நிறுவனங்கள். இதற்கான சந்தை ரூ.1500 கோடிகள் என்பதால் புதிய சரக்குகளோடு குதிக்கிறார்கள்.

* “பண வீக்கம் அதிகம். அதிலும் உணவுப் பொருள் பண வீக்கம் ரொம்ப அதிகம். இதைக் கட்டுப்படுத்த எல்லா கருவிகளும் நாம் கைகளில் இருக்கின்றனவா! என்பது சந்தேகம். பண வீக்கம், வரிகளை விட மோசமானது. உங்களுக்கு வருமானம் அதிகமாக இருந்தாலும் அதைப் பணவீக்கம் சாப்பிட்டு விடும்”

இவ்வளவு ‘கரிசனமாக’ பேசியிருப்பவர் யார் தெரியுமா! நம்ம ப.சிதம்பரம் அவர்கள்தான்!

(நன்றி :பிசினஸ் ஸ்டான்டர்டு - 6.1.2011)

ஜெட் வேக வளர்ச்சி

கலாநிதி மாறன் 2010ல் ஸ்பைஸ் ஜெட் (ளுஞஐஊநு துநுகூ) விமான நிறுவனத்தின் 39 சத வீதப் பங்குகளை வாங்கி விட் டார்.

ஸ்பைஸ் ஜெட் மலிவுக் கட்டண விமானம் என்று பெயர் பெற்றது. ஆனால் அதன் ஆண்டு வருமானம் ரூ. 2181 கோடிகள். இது கலாநிதி மாற னின் பிரதான வணிகமான “சன் டி.வி.யின்” ஆண்டு வரு வாயான ரூ.1395 கோடிகளை விட அதிகமானதாகும்.

மாறனுக்கு 2010 அதிர்ஷ்ட ஆண்டு போலிருக்கிறது. அவரின் ரூ.100 கோடி மெகா தயாரிப்பான “எந்திரன்” திரைப் படம் இதுவரை ரூ.200 கோடி வசூலை அள்ளியிருக்கிறதாம்.

20 தொலைக்காட்சி சேனல்கள்... 48 எப்.எம் ரேடி யோக்கள் ...2 நாளிதழ்கள்... நாட்டின் இரண்டாவது மிகப் பெரிய டி.டி.எச் சேவை.. அதில் 60 லட்சம் வாடிக்கையாளர்கள்..

இந்த வரிசையில் கல் ஏர் வேஸ், ஸ்பைஸ் ஜெட்-ஐ வாங்கியதன் மூலம் பிரதான இடத்தைப் பெற்றுள்ளது. இவர் வாங்கிய 4 மாதங்களுக் குள்ளாக சர்வதேச விமானப் போக்குவரத்தை அந்நிறுவ னம் துவங்கி விட்டது. காத் மாண்டு, கொழும்பு ஆகிய நகரங்களுக்கு பறக்கிறது ஸ்பைஸ் ஜெட்

Monday, January 3, 2011

ஹேப்பி நியூ இயர்?

பொருளியல் அரங்கம்
-க.சுவாமிநாதன்

* சாதாரண மக்களுக்கு இது ஹேப்பி நியூ இயரா? என்ற சந்தேகத்தோடே 2011ல் அடியெடுத்துவைக்கிறார்கள். உணவுப் பொருள் பணவீக்கம் 14.44 சதவீதத்தைத் தொட்டுவிட்டது. வெங்காய விலையைக் கட்டுப்படுத்தி விட்டோமென்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி பெருமை பேசுவதற்கு முன்பாகவே முட்டை, பால், காய்கறி, பழங்களின் விலைகளெல்லாம் எக்கச்சக்கமாக ஏறியிருக்கின்றன. 2009 ஆம் ஆண்டில் இதே காலத்தில் 21.29 சதவீதம் ஏறியிருந்தது. இப்போது 14.44 சதமாக குறைந்திருக்கிறது என்று ஆறுதல் அடையாதீர்கள் ! அந்த 21 சதவீதத்திற்கும் மேலே ஏறி, ஏறி அதிலிருந்து 14 சதவீதம் ஜம்ப் ஆகியிருக்கிறது இப்போது.

* பைசாக்களுக்கும் 2011ல் மகிழ்ச்சி இருக்காது போலிருக்கிறது. 50 பைசா தவிர அதற்கு கீழ் மதிப்பு உள்ள பைசாக்களெல்லாம் தங்களது நாட்களை இனிமேல் எண்ண வேண்டியதுதான். அவற்றின் ஆயுளெல்லாம் 180 நாட்கள்தான் என நிதியமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 30, 2011 முதல் 50 பைசாதான் குறைந்தபட்ச பரிமாற்ற நாணயமாகச் சந்தையில் இருக்கும் என்று நிதியமைச்சகம் அறிவித்திருக்கிறது. இதற்கேற்றாற்போல எல்லாச் சரக்குகள், சேவைகள், வரிகளெல்லாம் வட்டமிடப் படுமாம் (சுடிரனேiபே டீகக). விலைவாசி எகிறிக்கொண்டே போனால் நாலணாவுக்கு எப்படி மரியாதை இருக்கும்?

* ஆதாரத் தொழில்களும் சோகத்தோடுதான் 2011ல் அடியெடுத்து வைக்கின்றன. கச்சா எண்ணெய், பெட்ரோலிய சுத்திகரிப்பு, நிலக்கரி, மின்சாரம், சிமெண்ட், உருக்கு ஆகியவற்றின் வளர்ச்சி 2.3 சதவீதமாகவே நவம்பர் 2010ல் இருந்துள்ளது. 21 மாதங்களில் இல்லாத மிகப்பெரிய சரிவாகும் இது. பெட்ரோலியச் சுத்திகரிப்பு 3.7 சதவீதமும், சிமெண்ட் 11.6 சதவீதமும் சுருங்கியிருக்கின்றன. ஆதாரத் தொழில் வளர்ச்சி பாதிக்கப்பட்டால் ஒட்டுமொத்த தொழில்துறையின் வளர்ச்சியே தடுமாறும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

* எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆணையத்திற்கும் (டீசூழுஊ) 2011ல் நாள் குறிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 1 அன்று கூடிய மத்திய அமைச்சரவை டீசூழுஊ பங்கு விற்பனையை மார்ச் 2011க்கு முன்னோக்கி நகர்த்தியுள்ளது. இப்போது டீசூழுஊயில் அரசாங்கத்தின் பங்கு 74.14 சதவீதம். மார்ச் 2011 பங்கு விற்பனைக்குப் பிறகு 69.14 சதவீதமாகக் குறைந்துவிடுமாம். இந்த 5 சதவீத விற்பனையின் மதிப்பு ரூ.13,000 கோடிகள்.

* 2011ல் சந்தோஷமாக நுழைகிறவர்கள் யார் தெரியுமா? கேரிஃபோர் (ஊஹசுசுநுகுடீருசு) என்கிற உலகின் இரண்டாவது மிகப்பெரிய சில்லரை வர்த்தக நிறுவனம் தில்லியில் தனது முதல் “கேஷ் அண்டு கேரி” கடையைத் திறந்துள்ளது. கேரிஃபோரின் பிரம்மாண்டத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு. நம்ம நாட்டிலுள்ள எல்லா “பாட்டா” (க்ஷஹகூஹ) காலணிக் கடைகளின் ஒட்டுமொத்த விற்பனையை விட கேரிஃபோரின் வெளிநாட்டுக் கடை ஒன்றின் விற்பனை அதிகமென்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். ஏற்கனவே வால்மார்ட் நிறுவனம் அமிர்தசரஸ், ஜிரக்பூர், ஜலந்தர், கோட்டா நகரங்களிலும், ஜெர்மனியின் மெட்ரோ நிறுவனம் ஐதராபாத், பெங்களூர், மும்பை, கொல்கத்தா ஆகிய நான்கு நகரங்களிலும் இத்தகைய 10 கடைகளைப் போட்டுள்ளன. பல பிராண்டு சில்லரை வணிகத்தில் (ஆரடவi க்ஷசயனே) அந்நிய முதலீடு அனுமதிக்கப்படாததால் இக்கடைகளில் மொத்த விற்பனை மட்டுமே இப்போதைக்கு நடைபெறும். அதாவது உணவுப் பொருட்கள் என்றால் நுகர்வோர்களுக்கு நேரடியாக விற்காமல் ஓட்டல்களுக்கு சப்ளை செய்வார்கள், 2011ல் பல பிராண்டு சில்லரை வணிகமும் திறந்துவிடப்படுமென்று ஆவலோடுகாத்திருக்கிறார்கள்.



கொசுறுத்தகவல்கள்

* இந்தியாவின் மிகப்பெரிய நிலக்கரி இறக்குமதியாளரான அதானி குழுமம் ஆஸ்திரேலியா “லிங்க் எனர்ஜிஸ் கலலி சுரங்கத்தை” 3 பில்லியன் டாலர்களுக்கு (ரூ.13,,500 கோடிகள்) வாங்கியுள்ளது. இதுதான் ஆஸ்திரேலியாவின் மிகப் பெரிய “கையகப்படுத்துதல்” என்கிறார்கள்.

* வாஷிங்டன் போஸ்ட் கம்பெனி தனது “நியூஸ் வீக்” இதழை கலிஃபோர்னியா பில்லியனர் சிட்னி ஹார்மனுக்கு விற்றுவிட்டது. நட்டத்தில் ஓடுவதுதான் காரணம்.

* ஜரோப்பாவில் 1999 ஜனவரி 1 முதல் “ஒரே நாணயம், ஒரே எதிர்காலம்” (டீநே ஊரசசநnஉல, டீநே கரவரசந) என்ற முழக்கத் தோடு பொது நாணயமான “யூரோ” அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது யூரோ மண்டலத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியின் காரண மாக “ஒரே நாணயம், ஒரே தலைவிதி” (டீநே ஊரசசநnஉல, டீநே குயவந) என்று பொருளாதார ஆய்வாளர்கள் நொந்து கொள்கிறார்கள்.


Saturday, December 25, 2010

பெண்- தலித்-நிறுவன உலகம்


-க.சுவாமிநாதன்

6 மாதத்திற்கு முன்பு பாரிஸ் நகரில் நடந்த பரபரப்பான சம்பவம் இது. வியோ லியா என்விரோன்மென்ட் என்ற பிரான்ஸ் தண்ணீர் நிறுவனத்தின் வருடாந்திர பங்குதாரர் கூட்டத்தில் ஓர் தாடிக்கார கூட்டம், நிறுவனத் தலைவரின் இருக் கைக்கு முன்பு போய் அட்டகாசம் செய் தது. கைகள் ஆவேசமாக அசைந்தன. குரல்கள் ஓங்கி ஒலித்தன. அந்தத் தாடிக்காரர்கள் யார் தெரியுமா?

அத்தைக்கு மீசை முளைத்த கதை தான்! பெண்கள்தான் தாடி வைத்துக் கொண்டு கலகம் செய்தார்கள். அந்நிறுவ னத்தின் இயக்குனர் அவையில் பெண்க ளுக்கு உரிய பிரதிநிதித்துவம் கேட்டே இந்த போராட்டம். 17 இயக்குனர்களில் ஒரே ஓர் பெண்தானாம். நியூயார்க்கைச் சேர்ந்த “ கவர்ன்னன்ஸ் மெட்ரிக் இன்டர் நேஷனல்” (GOVERNANCE MATRIC INTERNATIONAL) என்ற ஆய்வு நிறுவனத் தின் கணக்குப்படி பெண்களின் பிரதி நிதித்துவம் இதோ. (அடைப்புக் குறிக் குள் ஆய்வுக்காக எடுக்கப்பட்ட நிறுவ னங்களின் எண்ணிக்கை தரப்பட்டுள்ளது)

பிரான்ஸ் - 9 .5 % (103 நிறுவனங்கள்)

பிரிட்டன் - 8.5 % (405 நிறுவனங்கள்)

அமெரிக்கா -12.2%

(1754 நிறுவனங்கள்)

பிரான்சில் இயக்குனர் அவையில் 40 % பெண்களுக்கு ஒதுக்கீடு செய்வதற்கான மசோதா விவாதத்தில் உள்ளது. இது போன்ற ஒதுக்கீடு ஏற்கனவே நார்வே நாட்டில் எட்டு ஆண்டுகளாக உள்ளது. நார்வேயில் 2002 ல் 6 .8 % ஆக இருந்த பெண் பிரதிநிதித்துவம் தற்போது 34% ஆக (23 நிறுவனங்களில்) உயர்ந்துள்ளன.

அதிர்ஷ்டம் 500 ( FORTUNE 500) நிறுவனங்களில் உயர்மட்ட பதவிகளில் உள்ள பெண்கள் 3ரூ மட்டுமே.

பாலின பாரபட்சம் எவ்வளவு நிறு வன உலகத்திற்குள் ஊடுருவி இருக் கிறது பார்த்தீர்களா?

* * * * *

பிக்கி (FICCI) என்பது இந்தியத் தொழில் மற்றும் வணிகக் கூட்டமைப்பு ஆகும். “டிக்கி” (DICCI) என்ற அமைப்பு 2005ல் உருவாகி உள்ளது. தலித் இந்தி யத் தொழில் மற்றும் வணிகக் கூட்டமைப்பு என்பதே அது.இதில் ரூ.50 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை ஆண்டு விற்பனை வரை உள்ள 400 நிறுவனங் கள் உறுப்பினர்களாக உள்ளன.

2010ல் பூனாவில் தலித் தொழிலதிபர்கள் கலந்து கொண்ட தொழில் கண்காட்சி ஒன்றை இந்த அமைப்பு நடத்தியுள்ளது. மகாராஷ்டிராவை மைய மாகக் கொண்ட இவ்வமைப்பு குஜராத், மத்தியப்பிரதேசம், கர்நாடகாவிலும் இத்தகைய ஒருங்கிணைப்பைச் செய்யப் போகிறார்களாம்.

2008ல் இன்போசிஸ் நிறுவனத்தின் இணைத் தலைமை நிர்வாகி நந்தன் நீல் கனி ஓர் ஆய்வரங்கில் பேசும்போது “தொழிலதிபராக வளர்ந்துள்ள ஒரு தலித்தைக் கூட பார்க்க இயலவில்லை” என்று குறிப்பிட்டார்.( டைம்ஸ் ஆப் இந் தியா - 29 . 5 . 2010 ) டாட்டா, அம்பானி யோடு ஒப்பிடுகிற அளவில் ஒருவருமே இல்லை என்பது உண்மைதான். ஆண்டிற்கு ரூ.300 கோடி விற்பனையைத் தொட்டி ருக்கிற “காமணி ட்யூப்ஸ்” (KAMANI TUBES) நிறுவனத்தின் கல்பனா சரோஜ் போன்றோர் அரிதான விதிவிலக்குகளே ஆவர்.

2010 - மார்ச் மாதம் நடத்தப்பட்ட “தொழிலில் தலித்துகள்- வடக்கு, மேற்கு இந்தியாவில் தொழில் முனையும் பட்டியலினச் சாதியினர்” குறித்த ஆய் வில் 42 சதவீதமானவர்கள் சாதியப் பாரபட்சங்களுக்கு ஆளாக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளனர். சொந்த வாழ்க்கை யில் பாரபட்சங்களுக்கு ஆளானதாக 63 சதவீதமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

“இந்தியாவின் 25 கோடி தலித் மக்கள் தொகை என்பது ஜி8 குழுமத்தில் உள்ள நான்கு ஐரோப்பிய நாடுகளின் - பிரான்ஸ், பிரிட்டன்,ஜெர்மனி, இத்தாலி - மொத்த மக்கள் தொகையைக் காட்டிலும் அதிகம். ஆனால் இவர்களில் ஒரு பில்லியனர் கூட கிடையாது. இந்தியத் தொழில் கூட்டமைப்பில் (CII) ஒருவர் கூட உறுப்பினர் இல்லை. தில்லியின் கன்னாட் பிளேசில் ஒரு காட்சி அறை கொண்டவர் கூட இல்லை” (www.ambedkar.org)

நிறுவன உலகம் பாலின பாரபட்சத்தைப் போன்றே சாதியப் பாரபட்சத்திற் கும் விதிவிலக்கு அல்ல.

******

கொசுறு தகவல்கள்

* நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தினப்படியை முடக்கப்பட்ட நாட்களுக்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் வாங்காததால் ரூ.75 லட்சம் மிச்சமாம். ஜேபிசியை அமைத்திருந்தால் நாடாளுமன்றம் நன்றாக நடந்திருக்குமே. ஸ்பெக்ட்ரம் ஊழலில் இழப்பு ஒரு லட்சத்து எழுபத்தாறு ஆயிரம் கோடி ரூபாய் என்கிறார்கள். ரூ.75 லட்சம் மிச்சம் என்பது, ஸ்பெக்ட்ரம் இழப்பில் ஒரு சிறு துளி கூட கிடையாது. இப்படிக் கழித்தால் கூட லட்சம் ஜென்மம் எடுக்க வேண்டும். காங்கிரஸ்காரர்களுக்கு தினப்படி எல்லாம் கிடையாது. அவர்களுக்கெல்லாம் ஜென்மப்படிதான் என்று சொல்லிக் கண்ணடித்தார் ஒரு பத்திரிகையாளர்..

* ரிசர்வ் வங்கி சுற்றுக்கு விட்ட வங்கி சீர்திருத்தங்கள் குறித்த விவாதத் தாள் மீது கருத்து தெரிவித்துள்ள தற்போதைய வங்கிகள், பெரும் தொழிலகங் களை வங்கித் தொழிலில் அனுமதிக்கக் கூடாது என்று கூறியுள்ளன. இந்தியாவின் கடந்த கால, அண்மைய உலக அனுபவங்களின் அடிப்படை யில் அரசின் முன்மொழிவு சரியல்ல என்று அவை கூறியுள்ளன.

* மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தின் மேலே

பண வீக்கம் டிசம்பர் இரண் டாவது வார புள்ளிவிவரங்களின்படி இரட்டை இலக்கத்தை (12 . 13 சதவீதம்) தொட்டுவிட்டதாம். வெங்காய விலைதான் காரணம் என்று விளக்கமளித்து உள்ளார் பிரணாப் முகர்ஜி. அதைக் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ள தாகவும் தெரிவித்துள்ளார்.

* இன்றையச் செய்தி
வெங்காய விலை சற்று குறைந்துள்ளது.
தக்காளிக்கு கோபம் வந்து அது எகிறிக் குதிக்க ஆரம்பித்துவிட்டது.