Wednesday, February 5, 2014
Sunday, January 26, 2014
GLIMPSES OF SUCCESSFUL 23RD CONFERENCE OF AIIEA
![]() |
| New General secretary Com V Ramesh- flanked by Com Amanullakhan and K Venugopal |
![]() |
| Com Chandrasekar Bose - Founder President of AIIEA addressing the session |
![]() | ||
| Delegates session- Indepth discussions |
![]() |
| Com Sitaram Yechuri M.P- Inagural address |
![]() |
| PROUD MOMENT FOR SZIEF- Com M Girija elected as Joint secretary of AIIEA- First woman officebearer of AIIEA |
Thursday, January 16, 2014
Tuesday, January 7, 2014
வலிமையான பிரதமர்... விலைவாசியை என்ன செய்வார்!!
சுவாமிநாதன்
புலியின்
பற்கள்
வலிமையென
புள்ளி
மான்கள்
போற்றுவதில்லை
!
பூனையின்
பாய்ச்சலை
எலிகள்
பாராட்டுவதில்லை!
பல்லி
நகரும்
லாவகத்தை
பூச்சிகள்
கூட
சிலாகிப்பதில்லை!
ஐந்தறிவின்
உள்ளுணர்வுகளை
ஊடகங்கள்
தீர்மானிப்பதில்லை!
தெரிகிறது யார் எதிரியென்று...
தெரிகிறது யார் எதிரியென்று...
ஆனால்
ஏழாம்,
எட்டாம்
அறிவும்
ஏங்குகின்றன
வலிமையான
பிரதமர்
வேண்டுமென்று.......!!
இடையில்
பயணத்தில் ஒரு
நடுத்தர வேலைவாய்ப்பில்
இருப்பவர் ஒருவரைச்
சந்தித்தேன்.
அரசியல்
பற்றி பேசியவுடன்
வலிமையான பிரதமர்
ஒருவர்தான் இன்றைக்கு
நாட்டின் தேவை
என்றார். அவரோடு
ரொம்ப நேரம்
உரையாடிய பிறகும்
நான் நிற்கும்
புள்ளியையும்,
அவர்
நிற்கும் புள்ளியையும்
இணைத்து ஒரு
சின்னக் கோலம்
கூடப் போட
முடியவில்லை.
ஒரு மணிநேரம்
ஆன பிறகும்
ஒரு சர்வாதிகாரிதான்
நம்ம நாட்டுக்குப்
பொருத்தமானவர்
என்று அவர்
கூறிய போது
எதிரெதிரே அமர்ந்தாலும்
ஏதோ ஒரு
மைலுக்கு அப்பால்
போய்விட்ட உணர்வு
ஏற்பட்டது.
ஆர்வத்தோடு
அவருடைய முந்தைய
அரசியல் சார்புகளை
விசாரித்தபோது அன்னாஹசாரே,
விஜயகாந்த்,
துக்ளக்
சோ, எம்.எஸ்.
உதயமூர்த்தி
என்று எங்கெங்கேயோ
சுற்றி பின்னர்தான்
அவர் நிற்கிற
புள்ளி எனக்குத்
தெரிந்தது. எதையோ
தேடுகிற அவரது
தவிப்பு புரிந்த
பிறகு புள்ளிகள்
நெருங்கி சிம்பிளான
கோலம் ஒன்று
வரைய முடிந்தது.
இந்திய
அரசியலில் இரண்டே
முகவர்கள்தான்
ஊடகங்களின் கேமராக்
கண்களுக்கு தெரிகின்றன.
வலியவர்
என்று குஜராத்காரரும்,
இளையவர்
என்று குடும்ப
வம்சத்து குல
விளக்கும்,
மூன்றாவது
ஃபிரேமிற்கு
தேவையில்லாமல்
இடித்துக் கொண்டு
வீடுகளின் வரவேற்பறைகளில்
காட்சியளிக்கிறார்கள்.
இது
தற்செயலான நிகழ்ச்சிகள்
அல்ல. இரு
துருவங்களாகக்
காட்டப்படும் இரண்டு
பேரை திரைக்குப்
பின்னிருந்து
இயக்குபவர்கள்
வெவ்வேறானவர்கள்
அல்ல என்பதுதான்
அரசியல் சூட்சமம்.
இச்
சூட்சமத்திற்கான
முயற்சிகள் புதியவை
அல்ல. 2004ல்
இடதுசாரிகள்
ஆதரவோடுதான் ஓர்
மத்திய அரசு
அமை வேண்டுமென்ற
நிலையேற்பட்ட போது
இந்தியப் பெரும்
தொழிலதிபர்களில்
ஒருவரான இராகுல்
பஜாஜ், காங்கிரஸ்,
பி.ஜே.பி
உள்ளிட்ட தேசிய
அரசு உருவாக
வேண்டுமென்ற கருத்தை
முன்மொழிந்தது
நினைவில் இருக்கலாம்.
இந்தியாவின்
பெரும் பெரும்
தொழிலதிபர்களுக்கு
நெருக்கடி வரும்
போதெல்லாம் அது
தேசத்தின் நெருக்கடியாக
சித்தரிப்பது
அவர்களின் உத்தியில்
ஒரு வகை.
அவர்களின்
பொருளாதார நலனுக்கு
எதிரான மாற்று
அரசியல் சற்றே
துளிர்விடும்
என்றாலும், அவர்கள்
எல்லா ஆயுதங்களுடனும்
களத்திற்கு வந்து
விடுவார்கள்.
அப்படியொரு
ஆயுதங்களில் ஒன்றுதான்
எஜமானர்களின் குரலாக
உள்ள கார்ப்பரேட்
ஊடகங்கள்.
அணைக்காத
கரங்கள்
ஒப்புதல்
உற்பத்தி(Manufacture of consent )
என்பது
பன்னாட்டு மூலதனத்தின்,
பெரும்
தொழிலகங்களின்
நலன்களைக் காக்கிற
சாகசம். யாரைத்
தாக்குகிறார்களோ
அவர்களிடமிருந்தே
தாக்குவதற்கான
இசைவை பெற்றுக்
கொள்வதே அதன்
லாவகம். பழைய
திரைப்படங்களில்
மனைவியைக் கணவன்
ஓங்கிக் கன்னத்தில்
அறைந்தாலும் 'அடிக்கிற
கைதான் அணைக்கும்'
என்று மனைவியை
அடுத்த காட்சியில்
பாடவிடுவார்கள்.
இப்படிப்பட்ட
'ஒப்புதல் உற்பத்தி' தற்போது
வலிமையான பிரதமர்
வேண்டுமென்ற புதிய
பாடலாக ஒலிக்கிறது.
2013டிசம்பரில்
நான்கு சட்டமன்றத்
தேர்தல்களில்
காங்கிரஸ் கட்சி
மண்ணைக் கவ்வியுள்ளது.
மத்தியில்
ஆளும் கட்சியின்
பொருளாதாரப் பாதை
மக்கள் மத்தியில்
ஏற்படுத்தியுள்ள
கோபம், ஊழலின்
மீதான வெறுப்பு
ஆகியவையே காரணமென்பதில்
யாருக்கும்
சந்தேகமில்லை.
காங்கிரசுக்கு
மாற்று வேறு
எதுவும் கண்களுக்குத்
தெரியாவிட்டால்
பி.ஜே.பி,
வேறு
எதுவும் தெரிந்தால்
காங்கிரஸ்-பிஜேபி-யைத்
தாண்டி ஆம்
ஆத்மி என்று
தேர்தல் முடிவுகள்
அமைந்துள்ளன.
ஆகவே
மக்கள் மாற்றம்
வேண்டுமென்று
நினைக்கிறார்கள்.
மாற்று
எது என்பதே
கேள்வி?
நாமும்
வலிமையான பிரதமர்
வேண்டுமென்று
நினைக்கிறோம்!
ஆனால்,
அது தனிநபர்
வலிமையல்ல. கொள்கை
வலிமை. மக்களுக்கான
அரசியலை அமலாக்குகிற
அரசியல் உறுதி.
நாலரைக்கோடி சில்லரை
வணிகர்களின்
வாழ்க்கையைச்
சூரையாட வருகிற
வால் மார்ட்டைத்
தடுக்கிற வலிமை
உள்ளவரா! இந்திய
மக்களின் சேமிப்புகளை
விழுங்க நினைக்கிற
பன்னாட்டு நிதி
நிறுவனங்களை
விரட்டுகிற வலிமை உள்ளவரா! கொம்பைச்
சிலுப்பி வரும்
விலைவாசி உயர்வுக்
காளையை அடக்கும்
வலிமை உள்ளவரா!
கார்ப்பரேட்
ஊழல் பேய்களை
ஓட்டுகிற வலிமை
உள்ளவரா! இதையெல்லாம்
பற்றிப் பேசாமல்
வலிமை என்றால்
எது யாரைப்
பாதுகாப்பதற்கு......
யாரைத்
தாக்குவதற்கு.....
இதுதான்
மக்கள் மன்றத்தில்
விவாதிக்கப்பட
வேண்டிய கேள்வி...!!
கசப்பான
காலங்கள்
கடந்த
காலத்தை சற்றுத்
திரும்பிப் பாருங்கள்!
2004ல் இந்தியா
ஒளிர்கிறது என்ற
முழக்கத்தோடு 340
பிளஸ்
சீட்டுகளைக்
கைப்பற்றும் என்று
ஊடகங்களின் ஆரவாரத்தோடு
தேர்தலைச் சந்தித்த
வாஜ்பாய் ஏன்
தோற்றுப் போனார்!.
1998டில்லி,
இராஜஸ்தானில்,
பி.ஜே.பி
படுதோல்வியைச்
சந்தித்தது ஏன்!
1998ல் டில்லி
முதல்வராக இருந்த
பி.ஜே.பி-யின்
சுஸ்மா சுவராஜ்
வெளிச்சந்தையில்
வெங்காயம் ரூ50
க்கு
விற்றபோது அதைக்
கட்டுப்படுத்த
முடியாமல் கிலோ
ரூ11 க்கு
விற்கிறேன் என்று
சில இடங்களில்
மட்டும் கடைவிரித்துக்
கண் துடைப்பு
செய்தும் ஏன் வெற்றி
பெற முடியவில்லை.
ஆனால்
சுஸ்மா சுவராஜ்-ன்
தோல்விச் செய்தி
வந்தவுடன் நல்ல
பிள்ளையாக வெங்காயம்
கிலோ ரூ10க்கு
இறங்கி வந்தது தனிக் கதை.
எனவே,
பொருளாதாரப்
பாதை மாறாமல்
விலைவாசி குறையாது.
விலைவாசி
குறைந்து விட்டால்
பெரிய பெரிய
மனிதர்களின் கல்லாப்
பெட்டி நிறையாது.
வலியவரோ,
இளையவரோ...
இவர்கள் விலைவாசி
குறைப்பதற்கு என்ன
மந்திரம்
வைத்திருக்கிறார்கள்.
நமோ...நமோ...
என்று
முணு முணுப்பதாலோ,
தலைமுறை
தலைமுறையாய் வறுமையே
வெளியேறு! என்று
குடும்பப் பாட்டு
பாடுவதாலோ விலைவாசி
குறையாது. காரணம்
பணவீக்கம் என்பது சாதாரண மக்களின்
கிழிஞ்சு தொங்கும்
பைகளிலுள்ள கொஞ்ச
நஞ்ச செல்வத்தையும்
வசதி படைத்தவர்களின்
மூட்டைகளுக்கு
மாற்றுகிற ஏற்பாடாகும்.
மோடியும்,
மோடியின்
மூதாதையர்களும்
இதை எப்படிச்
செய்தார்கள் என்று
பார்ப்போம்.
1998ல்
பி.ஜே.பி
ஆட்சி இருந்த
காலத்தில்தான்
உணவுப் பொருட்கள்
மீதான மொத்த
விலைக் குறியீட்டெண்
உச்சபட்சமாக இரண்டு
இலக்க சதவிகிதமான
18சதத்தைத்
தாண்டியது.
காய்கறிகளின்
விலைகள் 110சதவீதம்,
வெங்காய
விலை 700 சதவீதம்
என ஏறியது.
2000ம் ஆண்டில்
அதே வாஜ்பாய்
ஆட்சியில்தான் ஒரே
ஆண்டில் சமையல்
கேஸ் சிலிண்டர்
விலை ரூ146ல்
இருந்து ரூ
232க்கு
ஏறியது. எரிபொருள்,
மின்சாரத்தின்
விலைகள் 28சதவீதம்
உயர்ந்ததென்பது
2001லிருந்து
2010 வரையிலான
பத்தாண்டிலுங் கூட
நடக்காத விலைவாசி
உயர்வு, இதற்கெல்லாம்
காரணம் பி.ஜே.பி அரசு
முன்னெடுத்த பொருளாதார
முடிவுகள்தான்.
இன்று
காங்கிரஸ் ஆட்சியில்
விலை உயர்வுக்கு
பிள்ளையார் சுழி
(விலைவாசி
விநாயகர் என்று
சூடம் காண்பித்தாலும்
காண்பிப்பார்கள்)
போட்டவர்கள்
மோடியின் மூதாதையர்கள்தான்.
நடிப்புச்
சுதேசிகள்
ஒன்று,
தாராளமான
இறக்குமதியைக்
கட்டவிழ்த்து
விட்டது. 1991ல்
இந்தியாவின் 3300
பொருட்கள்
மீது இறக்குமதி
அளவுக் கட்டுப்பாடுகள்
உண்டு. இவர்கள்
ஆட்சிக்கு வருவதற்கு
முன்பு சாலைகள்
தோறும் சுதேசி
சோப் எது?
பிளேடு
எது? என்று
நோட்டீஸ் அடித்து
விளம்பரம் செய்தார்கள்.
ஆனால்,
ஆட்சிக்கு
வந்தவுடன் ஏப்ரல்-1
2000ல் 714
பொருட்கள்
மீதான இறக்குமதி
அளவுக் கட்டுப்பாடுகளை
நீக்கினார்கள்.
ஏப்ரல்-1,
2001ல்
இன்னும் 715 பொருட்கள்
மீதான அளவுக்
கட்டுப்பாடுகளையும்
நீக்கினார்கள்.
இதற்காக
அவர்கள் தெரிவு
செய்த தேதி
மக்களைக் கேலி
செய்வதற்கா என்று
தெரியவில்லை.
மகாகவி
பாரதியின் வார்த்தைகளில்
சொன்னால்
உப்பென்றும்,
சீனியென்றும்
உள்நாட்டுச்
சேலையென்றும்
செப்பித்
திரிவாரடி!கிளியே!
வாய்ச்
சொல்லில்
வீரரடி
இரண்டாவது
பெட்ரோலிய பொருட்கள்
மீதான மையப்படுத்தப்பட்ட
விலை நிர்ணய
முறையை(Administered Price Mechanism )
நீக்கிய
புண்ணியவான்களும்
இவர்கள்தான்.
1989ல் ஒரு
லிட்டர் பெட்ரோல்
ரூ8 ஆக
இருந்தது. இன்று
அது ரூ74க்கு
உயர்ந்திருக்கிறதென்றால்
அதற்கு கிரின்
சிக்னல் போட்டவர்கள்
பி.ஜே.பி
காரர்கள்தான்.15
நாட்களுக்கு
ஒரு முறை
சர்வதேச விலைகள்
உயர்வைக் கணக்கிற்
கொண்டு தானாகவே
விலை மாறும்
நடைமுறையைக் கொண்டு
வந்தவர்கள்.
திருடிவிட்டு
ஓடுபவனே திருடன்...
திருடன்..
என்று
கத்திக் கொண்டு
ஓடுவது போல
இன்று பெட்ரோல்
விலை உயர்வுக்கு
பி.ஜே.பி
கண்ணீர் வடிப்பதும்
நகைச்சுவைதான்.
மூன்றாவது,
இறக்குமதி
விலைச் சமன்பாடு (Import Price Parity )
என்ற
நூதனமான விலை
உயர்வை 2002ல்
கண்டு பிடித்தவர்களும்
இவர்கள்தான்.
இறக்குமதி
ஆகாமல் உள்நாட்டில்
உற்பத்தியாகிற
பெட்ரோலுக்கும்
இறக்குமதியானால்
போடுகிற வரிகள்,
சரக்குக்
கட்டணம், இன்சூரன்ஸ்
என ஆகிய
செலவுகளைச் சேர்த்து
விலை நிர்ணயம்
செய்த விபரீதத்தை
அரங்கேற்றினார்கள்.
ஆகாத
செலவுக்கு பில்
போட்ட ஃப்ராடுத்தனத்தை
எதற்காகச் செய்தார்கள்
தெரியுமா!
பொதுத்துறை
எண்ணெய் நிறுவனப்
பங்குகளைத் தனியாருக்கு
விற்றதால் தனியார்
பங்குதாரர்களுக்கு
டிவிடெண்ட் கூட
ண்டாமா! பொதுத்துறை
எண்ணெய் நிறுவனங்களில்
தனியார் பங்குகள்
எவ்வளவு பாருங்களேன்.
இந்தியன்
ஆயில்
காப்பரேசன்21
சதவீதம்
இந்துஸ்தான்
பெட்ராலியம்-49
சதவீதம்
பாரத்
பெட்ரோலியம்-45
சதவீதம்
ஓ.என்.ஜி.சி-31
சதவீதம்
கெயில்-43
சதவீதம்
ஆயில்
இந்தியா-
22 சதவீதம்
இவர்களின்
லாப பங்கிற்காக
அரசு காட்டிய
கருணை இது.
இது தவிர
ரிலையன்ஸ் அம்பானி
போன்றவர்களின்
பெட்ரோலிய
நிறுவனங்களுக்கும்
லாபம் பெருக
வேண்டாமா! ஆகாத
செலவுக்கு பில்
போட்டார்கள்
வாஜ்பாயும்,
அத்வானியும்.பிள்ளையார்
பக்தர்கள் அல்லவா!
கடைத் தேங்காயை
எடுத்துச் சிதறுகாய்
போட்டார்கள்.
இப்படி
அம்பானிக்கு கருணை
காட்டிய இவர்கள்
அப்பாவி விவசாயிகளுக்கு
இறக்குமதி விலைச்
சமன்பாட்டை கொண்டு
வரமுடியுமா!
பருத்தி
சர்வதேசச் சந்தையில்
ரூ 12000 விற்றபோது,
இந்தியாவில்
விவசாயிகளுக்கு
ரூ 3000ம்
தான் கிடைத்தது.
அம்பானிக்கு
வித்தியாசத்தை
தந்தவர்கள்,
விவசாயிகளுக்கு
வித்தியாசமாய்
எதைத் தந்தார்கள்
தெரியுமா! இரண்டு
லட்சம் தூக்குக்
கயிறுகள். இதில்
ராமன், கணேசன்,
சர்தார்,
முபாரக்,
பீட்டர்
என்று எந்த
வித்தியாசமும்
இல்லை.
நான்காவது,
அத்தியாவசிய
சரக்குகள் சட்டத்தை
தளர்த்தி 50,000
டன்கள்
வரை பெரும்
வியாபாரிகள்
பதுக்குவதை சட்டப்
பூர்வமாக்கியதுதான். வாஜ்பாயின்
வார்த்தைகளில்
'வியாபாரிகள்
பதுக்குவது நமது
நாட்டின் சட்டத்தின்
படி குற்றமல்ல'.
உளுந்தம் பருப்பு
கிலோ ரூ
30ல்
இருந்து ரூ
70க்கும்,
விளக்கெண்ணெய்
ரூ 40ல்
இருந்து ரூ80
க்கும்,
வெங்காயம்
ரூ 4ல்
இருந்து ரூ
60க்கும்
ஏறியது. இந்த
முடிவு எடுத்த
பிறகுதான்.
சர்க்கரை
போன்ற ரேசன்
பொருட்கள் மீதான
கட்டுப்பாட்டையும்
தளர்த்தினார்கள்.
இதே
வியாபாரிகளுக்கு
ஆப்பு வைக்கிற
மாதிரி வால்மார்ட்டுக்கு
கண்ணசைவு காட்டுகிற
அளவுக்கும்
பிற்காலத்தில்
போனது பி.ஜே.பி-யின்
வளர்ச்சி என்பது
வேறு கதை.
எஜமானனை
மாற்றாமல் வாலாட்டுகிற
நன்றியுள்ள பிராணிகள்
அல்ல முதலாளித்துவக்
கட்சிகள். வளர்ச்சிக்
கேற்ப வாலைக்
குழைத்து ஆட்டப்
பழகிக் கொண்டது
பி.ஜே.பி.
ஐந்தாவது
முன்பேர வர்த்தகச்
சூதாட்டத்தை
அமலாக்கியது பி.ஜே.பி
தான். சரக்குகள்
கைமாறாமலேயே வணிகம்
நடந்தேறுவதும்.
அதன் மூலம்
செயற்கையாய் விலை
ஏறுகிற புதிய
மோசடி அரங்கேறியதும்
இவர்களின் காலத்தில்தான்.
இந்தியப்
பட்ஜெட் தொகையைப்
போன்று எட்டு
மடங்கு, பத்து
மடங்கு வரை
முன்பேர வர்த்தகச்
சந்தையின் நடவடிக்கை
மதிப்புகள் போனதென்பது
இச் சூதாட்டம்
எவ்வளவு உச்சத்தைத்
தொட்டதென்பதற்கு
அடையாளம். பாரம்பரிய பதுக்கலையும்
ஊக்குவித்து நவீன
பதுக்கலுக்கும்
வழிவகுத்த இவர்களின்
அடுத்த அம்பும்
சாமானியனின் வயிற்றை
மிகச் சரியாகவே
குறி வைத்தது.
ஆறாவது ,
பன்னாட்டு
மருந்து நிறுவனங்களுக்கு
சாதகமாக காப்புரிமைச்
சட்டத்தை திருத்த
முனைந்தது.
ஜெர்மனியின்
பேயர் நிறுவனம்
இந்தியாவில்
2லட்சத்திற்கு
விற்பனை செய்து
வந்த கேன்சர்
மருந்துகள் தற்போது
ரூ 10,000 க்கும்
ரூ20,000 க்கும்
உள்நாட்டில்
கிடைக்கிறது.
பி.ஜே.பி
கொண்டு வந்த
காப்புரிமைச்
சட்டத்திருத்தம்
அப்படியே நிறைவேற்றப்
பட்டிருந்தால்
பரிதாப நோயாளிகள்
பல லட்சங்களை
இன்னும் செலவழிக்க
வேண்டியது
இருந்திருக்கும்.
இடதுசாரிகள் முன்மொழிந்து நிறைவேறிய திருத்தமே சாதாரண
மக்களின் உயிர்
வாழும் உரிமைகளைத்
தக்க வைத்துள்ளது.
ஆள்
மாறாட்டமல்ல தீர்வு
பி.ஜே.பி-யின்
ஆறுமுகங்கள் மட்டுமே
இவை. இன்னும்
பல்லாயிரம் முகங்களைக்
காட்டக் காத்திருக்கிறது
பி.ஜே.பி.
வலிமையான
பிரதமர்
இதையெல்லாம்
மாற்றுவாரா!
விலைவாசிக்கு
கடிவாளம் போடுவாரா!
உத்தரகாண்டு
வெள்ளத்தில் 30,000
பேரை ஒரே
நாளில் காப்பாற்றி
அனுமார் போல
கரை சேர்த்ததாகக்
கதைவிட்டார்களே!
கோடானு
கோடி மக்களுக்கும்
அது போன்ற
கதைகளைத் தயார்
செய்வார்களா!
பாதை
மாறாமல் தீர்வுகள் இல்லை! தேசத்தின்
தேவை வேறு
பிரதமர்அல்ல. வேறு
பாதை !
இரயில்
பயணத்தில் என்னுடன்
வந்தவர் விவாதம்
எங்கெங்கோ திசைமாறி போய்க்
கடைசியில் சொன்னார்.
"ஆமா சார்!
உடம்புக்கு
ஏதாவது வந்துவிடக்கூடாது
என்று பதட்டமாக
இருக்கிறது தனியார்
மருத்துவமனைக்கு
அழுதே வாழ்நாள்
சேமிப்பெல்லாம்
போய்விடும்" என்று...
நானும்
சொன்னேன் "தேசத்திற்கும்
ஏதும் வரக்கூடாதது
வந்து விடக்
கூடாதே என்ற
பயம் நமக்குத்
தேவைப்படுகிறது"
என்று....
நன்றி: 'இளைஞர் முழக்கம்'- ஜனவரி 2014
நன்றி: 'இளைஞர் முழக்கம்'- ஜனவரி 2014
Labels:
aam admi,
AIDWA,
AIIEA,
bayer,
BJP,
CAD,
CPI M,
DYFI,
future trading,
globalization,
iceu vellore,
ilaignar muzhakkam,
Imports,
modi,
patent,
PRICE RISE,
rahul,
szief,
uttarakand
Tuesday, November 5, 2013
தங்கராஜ்: சமகாலத்து சமூகநீதிப் போராளி
சு. வெங்கடேசன்
தங்கராஜ்
இதை எழுதவா நான் எழுத்தைப் பயின்றேன் என்று மனம் விம்முகிறது. ஆனால் இதை எழுதாமல் எழுத்தைப் பயின்று என்ன பயன் என்று அறிவு வலியுறுத்துகிறது.
தீமைகளைக் கண்டு வாழ்வு பணிந்து விடுவதில்லை, எல்லாக் காலங்களிலும் அதனை எதிர்ப்பதற்கான சக்தியை மனிதன் தனது வாழ்வுக்குள் இருந்துதான் கண்டறிந்து கொடுக்கிறான். ஆனால் எல்லோரும் கண்டறிந்து கொடுத்துவிடுவதில்லை. ஒருசிலர் மட்டுமே அதனைச் செய்கின்றனர். அதைச் செய்த ஒருவர் அக்டோபர் 29-ம் தேதி மதுரை அருகே நடந்த சாலை விபத்தில் அகால மரணமடைந்தார்.
ஜனநாயக மாண்புகளைப் பாது காக்கும் பெரும் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்ட தங்கராஜ், அதன் பொருட்டு அவர் சந்தித்த இன்னல்கள், அவமானங்கள், இழப்புகள் எண்ணற்றவை. மதுரை மாவட்டத்தில் நத்தப்பட்டி என்ற சிற்றூரில் சிறிய விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் தங்கராஜ். குடும்பச் சூழல் எட்டாம் வகுப்போடு அவரது பள்ளிக் கல்வியை முடிவுக்குக் கொண்டுவந்தது. இளம் வயது முதலே மார்க்சிஸ்ட் கட்சியோடு தன்னை இணைத்துக்கொண்டவர்.
1996-ம் ஆண்டு உள்ளாட்சிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டபோது ஊடகங்களில் அடிபடத் தொடங்கிய கிராமப் பெயர்கள் பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம். இம்மூன்று கிராமங்களிலும் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பஞ்சாயத்துத் தலைவர் பதவி தலித் மக்களுக்கு ஒதுக்கப்பட்டது. இந்த ஒதுக்கீட்டை ஏற்கமுடியாது என எதிர்ப்புத் தெரிவித்த சாதிய சக்திகள் பத்து ஆண்டுகள் தலித் மக்களை அப்பதவியில் அமரவிடாமல் செய்தனர். தீண்டாமையின் புதிய வடிவம் ஒன்றை உலகுக்குப் பறைசாற்றினர்.
17 முறை தேர்தல் அறிவிக்கப்பட்டு, நடத்தப்பட்டும் அரசியல் சாசனம் கூறும் இடஒதுக்கீட்டை அமல்படுத்த முடியவில்லை. சட்டம் சாதியத்துக்குக் கீழ்ப்படிந்த நிலை கண்டும் ஆள்வோருக்குக் கோபம் வரவில்லை. தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான தேசிய ஆணையத்தின் கண்டனத்தைச் சந்தித்த பின்பும் மாநில அரசு தனது நிலைகளில் மாற்றம் கொண்டுவரவில்லை. இந்நிலை யில் இதனை ஜனநாயக சமூகத்தின் அவமானமாகக் கருதி, இதற்கு எதிராகத் தொடர்ந்து இயங்கியவர்கள் விடுதலை சிறுத்தைகள் இயக்கமும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும்தான்.
விடுதலைச் சிறுத்தைகள் இத்தேர்தல்க ளில் ஐந்து முறை வேட்பாளர்களை நிறுத்தினர். கிராம முடிவுக்கு எதிராக யாரும் போட்டியிட முடியாது என்ற நிலையை அவர்கள்தான் முதலில் உடைத்தனர். அதுவரை தேர்தலே நடத்த முடியாத நிலையை உருவாக்கியிருந்த சாதிய சக்திகள், அதன் பின் தேர்தலை நடத்தி, வெற்றி பெறுபவரை ராஜிநாமா செய்யவைக்கும் புதிய உத்தியைக் கண்டுபிடித்தனர்.
இப்புதிய உத்தியை முறிக்கும் தந்திரத் தோடு, இந்த ஜனநாயகப் போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றது மார்க்சிஸ்ட் கட்சி. 2006-ம் ஆண்டில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின்போது இம்மூன்று கிராமங்களிலும் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்டவர்களின் எண்ணிக்கை 56. இதில் கிராமத்தின் சார்பில் நிறுத்தப்பட்டவர்கள் 20 பேர். மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்டவர்கள் 20 பேர். மாவட்ட நிர்வாகத்தின் பிரச்சாரத்தால் உந்தப்பட்டு சுயேச்சையாகப் போட்டி யிட்டவர்கள் 16 பேர். இத்தேர்தலே பத்தாண்டுக் கால அநீதியை முடிவுக்குக் கொண்டுவந்தது.
கொள்கையில் உறுதி
பத்தாண்டுகளாக யாராலும் என்ன செய்தும் நடைமுறைப்படுத்த முடியாத ஒன்று எப்படி 2006-ல் முடிவுக்கு வந்தது? அதன் பிறகும் அவர்களைப் பின்னுக்கு போகவிடாமல் நிறுத்திவைத்தது எது என்றெல்லாம் கேள்வி எழுப்பினால் இம்முயற்சிக்குப் பின்னால் இருந்த பலரின் உழைப்பும், உறுதிப்பாடும், தியாகமும் தெரியவரும். அவற்றின் முதன்மை நாயகன் தங்கராஜ். தனது சொந்த சாதிக்கு எதிராக, உறவுகளுக்கு எதிராக அவர் நடத்திய போராட்டம் வீரம் மிக்கது. அதன் பொருட்டு அவர் சந்தித்த இன்னல்கள், அவமானங்கள் ஒருபோதும் அவர் வாய் திறந்து பேசாதது. தான் தேர்வு செய்த கொள்கைக்குத் தான் கொடுக்கவேண்டிய விலை இது என்ற புரிதலோடு அவர் வாழ்வை முன்னெடுத்தார். சாதியத்தைப் பற்றியும், உழைக்கும் மக்களின் ஒற்றுமையைப் பற்றியும் அவர் கொண்டிருந்த புரிதலே இச்செயல்பாட்டின் அடிப்படை.
சாதிய சக்திகளுக்கும், மக்களுக்கும் இடையில் ஒரு பிளவை உருவாக்குவதில் அவர் ஆற்றிய தீரமிகு பங்கே தேசிய அவமானத்தில் இருந்து தமிழகம் தன்னை மீட்டெடுத்துக்கொள்வதற்கு அடிப்படையாக அமைந்தது.
தகர்ந்த தீண்டாமைச் சுவர்
இதனைத் தொடர்ந்து 2008-ம் ஆண்டு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்திய கள ஆய்வின் வழியே வெளி உலகின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது உத்தப்புரம் தீண்டாமைச் சுவர். அதன்பின் ஆண்டுக்கணக்காக நீடித்தது அந்தச் சுவருக்கு எதிரான போராட்டம். காவல்துறையின் தடியடி, கண்ணீர்ப் புகை வீச்சு, துப்பாக்கிச் சூடு, மரணம் என நீடித்தன நிகழ்வுகள். இப்போரட்டங்களில் எல்லாம் உத்தப்புரம் தலித் மக்களோடு இணைந்து சோர்வறியாது இயங்கியவர் தங்கராஜ்.
சமநிலைச் சமூகத்தை உருவாக்கும் பயணத்தில், தீமையுடன் சமரசம் செய்தல் பண்பாகாது என்று தங்களின் வாழ்வின் மூலம் சொல்லிச் சென்ற முன்னோர்கள் பலர். அவ்வழியே பயணித்த நிகழ்கால சாட்சியம்தான் தங்கராஜ். பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் பிறந்து, தலித் மக்களின் விடுதலைக்காக அயராது உழைத்து, தென்தமிழகம் எங்கும் செயல்பாட்டை விரித்ததன் மூலம். தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலச் செயலாளரானார்.
தனது 49-வது வயதில் இயக்கப் பணியாற்றிவிட்டுத் திரும்பும் வழியில் ஏற்பட்ட விபத்தில் அவர் மரணமடைய நேரிட்டது. தமிழ்ச்செல்வி தனது கணவனையும், அனாமிகாவும், அனுசீலனும் தனது தந்தையையும் இழந்து தவிக்கிறார்கள். இச்சமூகமும் சமநீதிக்கான போராளியை இழந்து தவிக்கிறது.
தங்கராஜின் வாழ்வு மொத்த சமூகத்துக்கான முன்னுதாரணங்களால் அலங்கரிக்கப்பட்டது. நுகர்வு கலாச்சாரத்தின் பிடியில் மனிதக் கூட்டம் சிக்கியிருக்கும் இக்காலத்தில் ஒருவர் சமூக மேன்மைக்காகத் தன்னை எப்படி ஒப்புக்கொடுத்துள்ளார் என்பதைப் பார்க்கும்போது மனம் பணிந்து வணங்குகிறது.
(கட்டுரையாசிரியர் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்)
நன்றி - தி இந்து (தமிழ்) 05.11.2013
நன்றி - தி இந்து (தமிழ்) 05.11.2013
Subscribe to:
Posts (Atom)








